Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சைக்குரிய கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்பிய இலங்கை

Featured Replies

சர்ச்சைக்குரிய கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்பிய இலங்கை

 

சர்ச்சைக்குரிய வெளிநாட்டுக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் இங்கிலாந்திற்கே அனுப்பப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன,

சட்ட மா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமையவே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

2017ம் ஆண்டு பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு ஒரு தொகை கொள்கலன்களில் கழிவுகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

மொத்தம் 21 கொள்கலன்கள் சனிக்கிழமையன்று இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த ஜனவரி மாதம், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் 42 கப்பல் கொள்கலன்களை மலேசியா இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/151306

பிரிட்டனில் இருந்து இலங்கை வந்த நச்சுக் கழிவுகள்: 21 கன்டெய்னர்களில் மறு ஏற்றுமதி

 

 

Sri Lankans demand UK take back rotting waste

பிரிட்டனில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுகள் எனும் பெயரில் வந்த நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் அடங்கிய 21 கன்டெய்னர்களை திருப்பி அனுப்பி இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றால் பிரிட்டனில் இருந்து, கொழும்பு துறைமுகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட 263 கன்டெய்னர்களில் மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் உள்ளிட்டவை இருப்பது கண்டறியப்பட்டது.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மட்டுமே அந்த கன்டெய்னர்களில் இருந்திருக்க வேண்டும்.

அவற்றில் சிறிய அளவு மட்டுமே பிரிட்டனுக்கும் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டிருந்தன.

பெரும்பாலான கன்டெய்னர்கள் இலங்கையிலுள்ள கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தன.

2018ம் ஆண்டு, உயிராபத்தை விளைவிக்கும் அந்த அந்த நச்சுப் பொருட்கள் இருந்த கன்டெய்னர்களை அதிகாரிகள் கைப்பற்றிய பின்பு இலங்கை அரசால் சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டது.

அதன்படி நேற்று சனிக்கிழமை அவ்வாறு இருபத்தியோரு கண்டவர்கள் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது சர்வதேச மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின், கழிவுப் பொருட்கள் ஏற்றுமதி விதிகளை மீறியது என்று இலங்கை சுங்கத் துறையின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக கழிவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப் படுவதை தடுக்க தாங்களும் உறுதி பூண்டுள்ளதாக இங்கிலாந்து சுற்றுச்சூழல் முகமை தெரிவித்துள்ளது.

முறையான விசாரணையை தொடங்கும் நோக்கில் இலங்கை அதிகாரிகளிடம் மேலதிக தகவல்களை கேட்டுள்ளதாக அந்த முகமையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் ஜனவரியில் பிரிட்டனிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 42 கன்டெய்னர்களில் இருந்த பிளாஸ்டிக்கை மலேசியா பிரிட்டனுக்கே திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-54318294

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்காவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம்

ஸ்ரீலங்காவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்ட 21 கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பிய செயற்பாடு தொடர்பில் நோர்வேயின் முன்னாள் இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம், ஸ்ரீலங்காவுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

கழிவுப்பொருள் கொள்கலன்கள் இலங்கையிலிருந்து மீண்டும் ஐக்கிய இராச்சியத்திற்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் சர்வதேச ஆங்கில ஊடகமொன்றில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

இலங்கைக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்ட கொள்கலன்களில் அபாயகரமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவை மீண்டும் ஐக்கிய இராச்சியத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவும் ஐரோப்பாவும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு கழிவுப்பொருட்களை அனுப்பிவைப்பதை உடனடியாக நிறுத்தவேண்டிய தருணம் இதுவாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திலிருந்து 263 கழிவுப்பொருள் கொள்கலன்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 21 கொள்கலன்களே இவ்வாறு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக சுங்கத்திணைக்களம் அறிவித்திருக்கிறது.

 

எஞ்சிய 242 கொள்கலன்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் சுங்கத்திணைக்களம் தெரிவித்திருக்கிறது. அவற்றில் 112 கொள்கலன்கள் கொழும்புத்துறைமுகத்திலும் 130 கொள்கலன்கள் கட்டுநாயக்கவிலும் வைக்கப்பட்டுள்ளன.

 

https://www.ibctamil.com/srilanka/80/151358?ref=home-imp-parsely

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.