Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும் தந்திரம் , அமெரிக்காவின் இரட்டை வேடம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும் தந்திரம்

அமெரிக்காவின் இரட்டை வேடம்!

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிக்கூடம் ஒன்றில் போரினால் இடம்பெயர்ந்து தங்கியிருந்த தமிழ்மக்கள் மீது இனந்தெரியாதவர்களால் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் 8 பொதுமக்கள் காயப்பட்டதாகவும் அவர்கள் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள் எனவும் காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.

காத்தான்குடி முஸ்லிம்கள் 100 விழுக்காடு (37,815) பெரும்பான்மையாக வாழும் ஊராகும். மட்டக்களப்புக்குத் தெற்கே 7 கிமீ தொலைவில் உள்ளது.

நார்வே ஏதிலி அவையின் அறிக்கைப்படி 2006 ஏப்ரலில் தொடங்கி திருகோணமலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் 314,378 பேர் இடம் பெயர்ந்துள்ளார்கள். அதில் 66,950 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 247,978 பேர் முகாம்களுக்கு வெளியில் வாழ்கிறார்கள். 2007 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 301,879 பேர் இடம் பெயர்ந்துள்ளார்கள்.

படுவாங்கரைப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த 125,000 மக்களில் வெள்ளாவெளியைச் சேர்ந்த 4,000 பேர் மீள்குடியமர்த்தப்பட இருக்கிறார்கள். இவர்களது வீடுகள் சிங்கள இராணுவத்தினாலும் சிங்களவர்களாலும் சூறையாடப்பட்டுள்ளன. இந்த மக்கள் மீள் குடியமர்வதற்குரிய பாதுகாப்புச் சூழல் இல்லை என பன்னாட்டு நிவாரண அமைப்புக்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

காத்தான்குடியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் புதிய பாதுகாப்பின்மையைத் தோற்றுவித்துள்ளது. அரச கட்டுப்பாட்டில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் வாழ்வது கூட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கைக்குண்டு தாக்குதல் அமெரிக்க இராசாங்க துணை அமைச்சர் ரிச்சேட் பவுச்சர், அங்கிலிக்கன் மதபீடத்தின் ஆன்மீகத் தலைவர் றோவன் வில்லியம்ஸ் ஆகியோர் சிறீலங்காவிற்கு வந்து போன கையோடு இடம்பெற்றுள்ளது.

சிங்கள அரசு மனிதவுரிமைகளை மதித்து நடக்க வேண்டும், படையோடு இயங்கும் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களைய வேண்டும், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று பவுச்சர் கேட்டுக் கொண்டார். அவற்றை மகிந்த இராசபக்சா காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆகிவிட்டது. புலிகளுக்கு எதிரான போர் தொடரும் என அவர் பவுச்சரிடமே தெரிவித்துள்ளார். இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.

இலங்கை பற்றிய அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தொட்டிலையும் ஆட்டிக் கொண்டு பிள்ளையையும் கிள்ளி விடும் கதையாகவே இருந்து வருகிறது.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் நாடுகளுக்கு அமெரிக்க மக்கள் நிதியுதவி அளித்து வருகிறார்கள். அந்தத் திட்டத்திற்கு ஙண்ப்ப்ங்ய்ய்ண்ன்ம் ஈட்ஹப்ப்ங்ய்ஞ்ங்

ஈர்ழ்ல்ர்ழ்ஹற்ண்ர்ய் (ஙஈஈ) என்று பெயர். அதன்கீழ் சிங்கள அரசுக்கு 590 மில்லியன் டாலர் வழங்குவதற்கு ஒரு முன்மொழிவு இருந்து வருகிறது. ஆனால் சிங்கள அரசின் வெளிப்படையான மனிதவுரிமை மீறல்கள், மோசமான பாதுகாப்பு நிலைமை - அதனை வழங்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பில் பவுச்சர் தெரிவித்திருந்தார்.

இதே சமயம் இன்னொரு செய்தி வந்திருக்கிறது. இலங்கைக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 40 மடங்கு அதிகரித்துள்ளது. இதனை வாஷிங்டனை மையமாகக் கொண்டு இயங்கும் பாதுகாப்புத் தரவுகளுக்கான மையத்தின் ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

சிங்கள அரசுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை 2006 இல் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகயிருந்தது. அது இந்த ஆண்டு 60.8 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதாவது 40 மடங்கு அதிகரித்துள்ளது!

சிறார்களை படையணிகளில் சேர்ப்பது தொடர்பான அமெரிக்க அரசாங்கத்தின் 2006 ஆம் ஆண்டு அறிக்கை கடந்த மார்ச் 6 ஆம் நாள் வெளியிடப்பட்டது. சிறார்களை படையில் சேர்ப்பதை அமெரிக்க அரசு தீவிரமாக எதிர்த்து வருகிறது. அப்படிச் சோத்து வரும் நாடுகளின் பட்டியலை அமெரிக்கா தயாரித்துள்ளது.

அந்த அறிக்கையில் 25 நாடுகளின் படையணிகளில் சிறார் சேர்ப்பு தொடர்பான தரவுகள் இடம்பெற்றிருந்தன. சிங்கள அரசு மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் துணை ஆயுதக் குழுக்களினால் படையணிகளில் சிறார் கட்டாயமாகச சேர்க்கப்படுகின்ற புதிய தரவுகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவினால் பட்டியலிடப்பட்ட 25 நாடுகளுக்கு அமெரிக்காவின் இராணுவ உதவி எத்தகையதாக இருக்கிறது என்பதை மேற்குறிப்பிட்ட பாதுகாப்புத் தரவுகளுக்கான தனியார் மையம் ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவினால் பட்டியலிடப்பட்டுள்ள 25 நாடுகளில் 13 இல் 18 அகவைக்கும் குறைவானோர் அரசு மற்றும் அரசசார்பு ஆயுதக் குழுக்களின் படையணிகளில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட 13 நாடுகளில் 9 நாடுகளில் சிறார்கள் படையணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த 9 நாடுகளில் 8 நாடுகளுக்கு 2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா இராணுவ உதவி செய்து வருகிறது.

அமெரிக்க நாட்டின் சட்டத்தின் கீழ மனிதவுரிமைகளை மீறும் நாடுகளுக்கு ஆயுத விற்பனை, இராணுவப் பயிற்சி அளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சு இந்தச் சட்டத்தைச் சட்டை செய்வதில்லை.

அமெரிக்காதான் இரட்டை வேடம் போடுகிறதென்றால் அதன் கூட்டாளி நாடான பிரித்தானியாவும் அதேமாதிரி நடந்து கொள்கிறது. கடந்த கிழமை சுனாமி நிதியுதவியின் ஒரு கூறாக சிறீலங்காவின் கடனை அடைக்க ஒப்புக்கொண்ட பிரித்தானியா அதிகரித்துவரும் மனிதவுரிமை மீறல்களையும் பாதுகாப்பு செலவினத்தையும் காரணம் காட்டி 3 மில்லியன் டாலர் நிதியுதவியை நிறுத்தி வைத்துள்ளது. இதையிட்டு மகிழ்ச்சி கொண்டாடுவதற்கு முன்னர் இன்னொரு செய்தியும் வந்துள்ளது.

பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சு சிங்கள அரசுக்கு 7 மில்லியன் டாலர் பெறுமதியான ஆயுத விற்பனைக் கான உரிமங்களை வழங்கியுள்ளது!

உலக அரங்கில் இவ்வித இரட்டை வேடத்தை எல்லா நாடுகளுமே போடுகின்றன. ஆனால் உலக அமைதிபற்றியும் மனிதவுரிமைகள் பற்றியும் மக்களாட்சித் தத்துவம் பற்றியும் நாளும் பொழுதும் வாய் கிழியப் பேசும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் சொல்லொன்று செயலொன்றாக நடக்கும் போது சற்று ஏமாற்றமாக இருக்கிறது.

உலக அமைதி பற்றிப் பேசும் நாடுகளே போரில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. போரில் மட்டுமல்ல ஆயுத உற்பத்தியிலும் அவற்றின் விற்பனையிலும் இதே நாடுகள்தான் முன்னணி வகிக்கின்றன!

உலகில் ஆண்டொன்றுக்கு 900 பில்லியன் டாலர் பெறுமதியான போர்த்தளபாடங்கள் விற்பனையாகின்றன.

துப்பாக்கிகள், தோட்டாக்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள், போர்க் கப்பல்கள், ரடார்கள் போன்றவற்றை அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அறிவிக்கப்பட்ட பின்னர் ஆயுத - தளபாட உற்பத்தி மேலும் அதிகரித்துள்ளது.

600 மில்லியன் சிறியளவு ஆயுதங்கள் உலகம் முழுதும் பயன்பாட்டில் உள்ளன. 98 நாடுகளில் இயங்கும் 1,135 நிறுவனங்கள் சிறியளவு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. "ஒக்ஸ்போம்" அமைப்பு சிறியளவு ஆயுதங்களினால் ஆண்டில் 500,000 மக்கள் அதாவது ஒவ்வொரு மணித்துளிக்கு ஒருவர் இறந்துபடுவதாக மதிப்பிட்டுள்ளது!

1989 தொடக்கம் 1996 வரை அமெரிக்கா 257 பில்லியன் (25,700 கோடி) டாலர் பெறுமதியான ஆயுதங்களை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது. 2001 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மொத்த ஆயுதங்களில் சரிபாதி அமெரிக்காவால் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா உள்நாட்டு மோதல்கள் இடம்பெறும் 25 நாடுகளில் 18 நாடுகளுக்கு ஆயுத விற்பனை செய்துள்ளது. இதில் அங்கோலா, சாட், எத்தியோப்பியா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் அடக்கம்.

இரண்டாவது மூன்றாவது ஆயுத ஏற்றுமதி நாடுகளைவிட அமெரிக்கா இரண்டரை மடங்கு அதிகமான ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. பெரும்பாலும் வளர்முக நாடுகளுக்கே ஆயுத – தளபாடங்கள் விற்கப்படுகின்றன!

அமெரிக்க ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடுகளில் இராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகளும் அடங்கும். இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா உள்நாட்டு மோதல்கள் நடைபெறும் (1999) நாடுகளில் 92 விழுக்காடு நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது.

2001 ஆம் ஆண்டு மட்டும் 37.9 பில்லியன் டாலர்களை ஆயுத ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு அமெரிக்கா செலவு செய்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் ஆயுத விற்பனையையே பெரிதும் நம்பியிருக்கிறது.

அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் உலகில் செல்வாக்கும் பலமும் படைத்த நிறுவனங்களாகும். அமெரிக்க அரசியலில் அவை அதிகளவு செல்வாக்குச் செலுத்துகின்றன. அவற்றின் முக்கிய அதிகாரிகள் அமெரிக்க பாதுகாப்பு, வாணிக, இராசாங்க அமைச்சுக்களின் ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஆட்சித்தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது குடியரசு மற்றும் மக்களாட்சி கட்சிகள் இரண்டுக்கும் இலட்சக்கணக்கில் நிதியுதவி செய்கின்றன!

உலகில் அமைதி நிலவினால் ஆயுத உற்பத்தி நிறுவனங்களை இழுத்து மூட வேண்டி வரும். பிச்சைக்காரனுக்கு மேல் முழுதும் புண் தேவை. அதனை மருந்து போட்டு மாற்ற முனைந்தால் அவனது பிழைப்புக் கெட்டுவிடும். அந்தப் பிச்சைக்காரன் நிலையில்தான் அமெரிக்கா இருக்கிறது.

சிங்கள அரசு பற்றிய அதன் அணுகுமுறை - இரட்டை வேடம் அதைத்தான் காட்டுகிறது.

தமிழ்மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை. தனது பணப்பை நிரம்ப வேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாக இருக்கிறது!

-நக்கீரன்

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.