Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.சி.சி உடன்படிக்கை விடயத்தில் அரசாங்கமும் மௌனம் காப்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது: எல்லே குணவங்ஸ தேரர்

Featured Replies

எம்.சி.சி உடன்படிக்கை விடயத்தில் அரசாங்கமும் மௌனம் காப்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது: எல்லே குணவங்ஸ தேரர்

எங்களுடைய நாடு சர்வதேச குறிப்பாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டுள்ளது. எம்.சி.சி உடன்படிக்கை போன்றன ஆபத்தானதென்ற போதிலும், இந்த விடயத்தில் இந்த அரசாங்கமும் மௌனம் காப்பது எங்களுக்கு பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது” என தெரிவித்துள்ளார் எல்லே குணவங்ஸ தேரர். தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஆவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது நேர்காணலின் விபரம் வருமாறு;

கேள்வி – புதிய அரசாங்கம் பயணிக்கும் பாதை உங்களுக்கு திருப்தி அளிக்கின்றதா?

பதில் – கொவிட் – 19 தொற்று காரணமாக அரசாங்கம் தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் சிறிய சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். எங்களுடைய நாடு சர்வதேச குறிப்பாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டுள்ளது. எம்.சி.சி உடன்படிக்கை போன்றன ஆபத்தானதென்ற போதிலும், இந்த விடயத்தில் இந்த அரசாங்கமும் மௌனம் காப்பது எங்களுக்கு பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

எங்களுடைய சொத்துக்களை சூறையாடுவதற்கான சூழ்ச்சிகளையே சர்வதேச சக்திகள் முன்னெடுத்துவருகின்றன. 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தை பெறுவதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிருஸ்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தது போன்று சர்வதேச ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டுள்ள இலங்கையை மீட்பதற்கு மீண்டும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது.

கேள்வி – அரசாங்கத்தின் 20 ஆவது திருத்தம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது தொடர்பாக உங்களின் நிலைப்பாடு?

பதில் – 19 ஐ நீக்கிவிட்டு ’20” கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் அதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. கணக்காய்வு ஆணைக்குழுவை நீக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அலுவலகங்களும் கணக்காய்வு செய்யப்பட வேண்டும். 19 இல் இருந்த இரட்டைக் குடியுரிமை தொடர்பான விடயம் 20 இல் இருக்க வேண்டும். இரட்டைக் குடியுரிமைக் கொண்ட ஒருவருக்கு பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கு இடமளித்தால் சஹ்ரான் போன்ற குழுவினரின் பயங்கரவாதிகளும் உள்நுழைய முடியுமென்பதால் இது தொடர்பாக அரசாங்கம் தங்களின் முடிவை மீளாய்வு செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

புதிய அரசியலமைப்பில் ஏதேனும் விடயம் உள்ளடக்கப்பட வேண்டுமாயின், பயங்கரவாதிகளுக்கு ஏற்ப நாட்டை பிரிக்கும் நோக்கில் பேசுவோரையும் இனி சிறையில் அடைக்கும் விடயங்கள் புதிய அரசியலமைப்புக்குள் சேர்க்கப்பட வேண்டும். இனியும் இந்த நாட்டை இரண்டாக பிரப்பதற்கு இடமளிக்க முடியாது. ஒரு தாய் குழந்தைகளை போல தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் கிருஸ்தவர்கள் என அனைவரும் ஒன்றுமையாக வாழ வேண்டும்.

கேள்வி – 19 ஐ நீக்கி, அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரும் 20 ஐ நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?

பதில் – 19 ஐ நீக்குவது பரவாயில்லை. அதனை நீக்கி அதற்கு பதிலாக அனைத்து அதிகாரங்களையும் தனி நபரின் கீழ் கொண்டுவருவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளாதிருப்பது நல்லதல்ல.

கேள்வி – 20 ஐ கொண்டுவருவதற்கான அவசர தேவை இருக்கின்றதென நீங்கள் நினைகின்றீர்களா?

பதில் – புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்பதே எங்களுடைய நோக்கமாகும். பழைய அரசியலமைப்பிற்கு துண்டுத்துண்டுத் திருத்தங்களை இணைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தனியொருவரை இலக்கு வைத்து அரசியலமைப்பு திருத்தம் உருவாக்கப்படுவது ஆபத்தானது. அரசியலமைப்பானது நாட்டின் பொதுச் சட்டமாகும். அதனை தனியொருவரை இலக்காக கொண்டு திருத்தம் செய்வதை ஏற்க முடியாது. 78 ஆம் ஆண்டு அரசியலமைப்பு, இந்த இருவதோடு, 20 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது பொருத்தமற்ற விடயம். இதனால், 20 ஆவது திருத்தம் தற்போதைய நிலையில் நிறைவேற்றப்படுவது பொருத்தமானதல்ல.

கேள்வி – புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பேசப்படும் போது 13 ஆவது திருத்தம் நீக்கப்பட வேண்டுமென்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் உங்களுடைய நிலைப்பாடு?

பதில் – சர்வதேச சக்திகளே சிங்கள, தமிழ் மக்களை பிரித்து வைத்துள்ளது. அதன்படியே இந்த 13 ஆவது திருத்தமும் இந்தியாவினால் கொண்டுவரப்பட்டது. இந்த 13 ஆவது திருத்தத்தினால் இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் பிரிந்து நின்று அடித்துக் கொள்கின்ற போது, 13 ஐ கொண்டுவந்த சர்வதேச சக்திகள் அவர்களுடைய வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
13 ஆவது திருத்தம் மட்டுமல்ல. பல்வேறு விடயங்களை திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. பிரபாகரன் இருந்த போதே 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போதிலும், எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் தொடர்பாக இரு தரப்பினரும் மீண்டும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட 13 கோரிக்கையில் வட, கிழக்கை அவர்களின் தாயகமாக ஏற்றுக்கொள்ளுமாறு கூறியிருந்தனர். ஏன், வட, கிழக்கை மட்டும் அவர்களின் தாயகமாக பார்க்க வேண்டும். முழு இலங்கையையும் தங்களின் தாயகமாக ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்சினை இருக்கின்றது.

இன்று, வட, கிழக்கில் தலைதூக்கியுள்ள பல்வேறு குழுக்களுக்கு பின்னால் சர்வதேச சக்திகளே இருக்கின்றன. சர்வதேச சக்திகளினாலேயே இலங்கையிலுள்ள சிங்கள தமிழ் மக்கள் பிளவுபடுத்தப்படுகின்றனர். ஆகவே, நாங்கள் அதனை புரிந்து கொண்டு ஒரே இனமாக இருக்க வேண்டும். சர்வதே சக்திகளின் பந்துகளாகவே தமிழ் மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதை மட்டுமே தமிழ் மக்களுக்கு எங்களால் கூற முடியும்.

கேள்வி – புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும் தமிழ் மக்களுக்காக புதிய அரசியலமைப்பில் உள்ளடப்பட வேண்டுமெனவும் நீங்கள் முன்வைக்கும் விடயங்கள் என்ன?

பதில் – மக்களுக்காகவே அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படவோ அல்லது புதிய அரசியலமைப்போ உருவாக்கப்பட வேண்டும். இருப்பினும், இலங்கையானது தனியொருவரின் தேவைக்காகவும் அதிகாரங்களை தக்கவைத்து கொள்ளவும் அரசியலமைப்பு திருத்தங்களை முன்னெடுத்த நாடாகவுள்ளது.

தேர்தல் காலத்தில் எங்களிடம் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பட்சத்தில் எங்களை ஏமாற்றியதாகக் கூறி நீதிமன்றம் செல்வதற்கான உரிமையை வழங்க வேண்டும். தங்களுடைய வாக்குகளை கொடுத்து 5 வருடங்களுக்கு தங்களை ஆளும் அதிகாரத்தை அவர்களுக்கு கொடுக்கும் போது அதனை அவர்கள் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக போராட வேண்டிய உரிமையும் வழங்கப்பட வேண்டும்.

புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களில் தங்களுக்கு தேவையானதை உள்ளடக்குமாறு மக்களே முன்வைக்க வேண்டும். ஒரு இனத்திற்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதற்கு நாங்கள் இணங்க முடியாது.

ஆயிரம் வருடங்களாக ஒற்றுமையாக இருந்த சிங்கள, தமிழ் மக்களை பிரிப்பதற்காக இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தம் குறித்து நாங்கள் தெளிவாக விளங்கிக் கொண்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இங்கு தமிழ், சிங்கள மக்கள் என நினைப்பது பொருத்தமற்றது. அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் ஓரே நாடு, ஒரே சட்டம், ஒரே கொடி என்ற கொள்கையின் கீழ் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்.

கேள்வி – மாகாண சபை நீக்கப்பட வேண்டுமென கூறப்படுகின்ற நிலையில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில் – உண்மையில் கடந்த 1 ½ வருடங்களாக மாகாண சபைகள் இல்லாதே நாடு முன்னோக்கிச் சென்றது. மாகாண சபைகள் இல்லையென்று நாட்டுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை. எனவே, மாகாண சபைகளுக்கு பதிலாக ‘பிரதேச அபிவிருத்தி சபை” என்பதை உருவாக்குவதற்கு நாங்கள் பூரண ஆதரவை கொடுப்போம். மாகாண சபைகளினால் எங்களுக்கு கிடைத்த நன்மைகள் எதுவும் இல்லையென்பதால், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது ‘பிரதேச அபிவிருத்தி சபை” என்ற ஒரு யோசனையை முன்வைப்போம்.

கேள்வி – ஐனாதிபதியின் 5 வருட காலத்துக்குள் புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதில் சிக்கல் இருப்பதாலேயே 20 ஐ விரைவாக கொண்டுவருவதாகக் கூறப்படுகின்றதே?

பதில் – 19 ஆவது திருத்தத்தை நீக்கி 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஒரு வருட காலத்திற்கு புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதாக அரசாங்கம் கூறுகின்றது.

அதன்படி, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு ஒரு வருட காலத்தை எடுத்துக் கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால், வெறுமனே ஒரு மாதத்திற்கு குறைவான காலப்பகுதியில் 20 ஆவது திருத்தத்தை கொண்டுவர முடிந்த அரசாங்கத்தால் புதிய அரசியலமைப்பையும் வெகு விரைவில் கொண்டுவர வேண்டும். ஆகவே, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு நீண்ட காலத்தை கொடுக்க முடியாது.

கேள்வி – பாராளுமன்றத்திலுள்ள தமிழ் தலைவர்களின் செயற்பாடுகள் குறித்து பலரும் குற்றஞ்சாட்டுகின்றது குறித்து?

பதில் – வட, கிழக்கு தமிழ் தலைவர்கள் எப்போதும் தமிழ் மக்களுக்காக முன்னிற்பதில்லை. அவர்கள் சர்வதேச சக்திகளுக்காகவே செயற்படுகின்றனர். தமிழ் அமைப்புகளில் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் பலர் இருக்கின்றனர். அதேபோன்று, தமிழ் தேசியக் கூட்மைப்பிலுள்ள பலரும் அமெரிக்காவின் அடிமைகளாக இருக்கின்றனர். இதனால், அவர்கள் கூறுவதையே இவர்களும் செய்கின்றனர்.

ஆரம்பத்தில் தமிழ் இந்துத் தலைவர்கள் இருந்தனர். தற்போது தமிழ் கிருஸ்தவ தலைவர்களே உருவாகியுள்ளனர். இந்து இளைஞர்கள் இதற்கு எதிராக போராட வேண்டும். இனி வரும் காலங்களில் தமிழ் இந்த தலைவர்கள் உருவாக வேண்டும்.

சர்வதேச சக்திகளினால் பௌத்த தத்துவத்திற்கும் இந்து தத்துவத்திற்கும் தற்போது பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் இந்து மக்களுக்கு ஆதரவாக இருக்கின்றோம். கதிர்காமத்தில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் தொடர்ந்து இணைகின்றனர். ஆகவே, எங்களுக்கு தமிழ் மக்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க முடியும். சர்வதேசங்களிலிருந்து வரும் கிருஸ்தவத்தால் இந்து மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. இந்து மக்களையும் பௌத்த மக்களையும் தற்போது கிருஸ்தவத்திற்கு மாற்றிக் கொண்டிருக்கின்றனர். இதனை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி – தமிழ் மக்களுக்கு சிறந்த தலைமைத்துவம் இல்லையென்றா கூறுகின்றீர்கள்?

பதில் – நிச்சயமாக. தமிழ் மக்களுக்கு சிறந்த தமிழ் தலைமைத்துவம் இல்லை. என்பது போன்று எங்களுக்கும் சிறந்த தலைமைத்துவம் இல்லை. தமிழ் மக்களுக்கு தமிழ் இந்து தலைமைத்துவமே தேவை. அப்போதே எங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்த முடியுமென்பதுடன் தமிழ் மக்களுடன் இணையவும் முடியும். தமிழ் – சிங்கள மக்கள் பிரச்சினைகளுக்கும் அப்போது தீர்வை பெற முடியும். தமிழ் கிருஸ்தவ தலைமைத்துவம் வருவதற்கு நான் எதிர்ப்பு.

கேள்வி – புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைகின்றீர்களா?

பதில் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொண்டுவர நாங்கள் அதிகம் உழைத்தோம். இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் எங்களுக்கே அதிகம் வலிக்கும். ஜனாதிபதியின் செயற்பாடுகள் மிக மோசனதென நான் தற்போது வரை கூறவில்லை. புத்தருக்கு இருந்தது போன்றதொரு நல்லதொரு குழுவொன்றில்லை என்பதே பிரச்சினையாகும். ஆவருக்கு உதவியர்களும் அவருக்காக செயற்பட்டவர்கள் அவரிடைத்தில் இல்லாததே வீழச்சியின் ஆரம்பமாகவுள்ளது.

ஆகவே, இந்த நாட்டிலுள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் அரசியல்வாதிகளுக்கு கட்டளையிடும் நிலைமைக்கு வர வேண்டும். யாரும் எங்களுக்கு எதனையும் கொடுப்பதில்லை. நாங்களே அதனை உருவாக்க வேண்டும். புதிய அரசியல் யுகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 48 ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொள்ள போராடியது போன்று தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் இணைந்து சர்வதேச ஆக்கிரமிப்புகளிடமிருந்து இரண்டாவது சுதந்திரத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க தயாராக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செண்பகம் said:

ஆரம்பத்தில் தமிழ் இந்துத் தலைவர்கள் இருந்தனர். தற்போது தமிழ் கிருஸ்தவ தலைவர்களே உருவாகியுள்ளனர். இந்து இளைஞர்கள் இதற்கு எதிராக போராட வேண்டும். இனி வரும் காலங்களில் தமிழ் இந்த தலைவர்கள் உருவாக வேண்டும்

மொட்டை மொட்டை தான் 
எப்பிடி கொம்பு சீவி விடுது, முதலில்  தங்கள் பக்கம் உள்ள சிங்கள கிறீஸ்தவர்களை  களையெடுக்க வேண்டியதுதானே   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

மொட்டை மொட்டை தான் 
எப்பிடி கொம்பு சீவி விடுது, முதலில்  தங்கள் பக்கம் உள்ள சிங்கள கிறீஸ்தவர்களை  களையெடுக்க வேண்டியதுதானே   

எப்படி பத்த வைக்கலாமென திரிகின்றார்கள் மொட்டை முதல் சிலர், நாமதான் கவனமாக கையாள வேண்டும். அதிலும் சிங்கள புலநாய்கள் இல்லாத இடமில்லை. ஏதவது செய்து போட்டு, மாற்றி போடவும் சந்தர்ப்பங்கள் அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்

எம்.சி.சி உடன்படிக்கை அரசியலாக்கப்பட்டது வெட்கக்கேடு- அமெரிக்க தூதுவர்

 

எம்.சி.சி உடன்படிக்கை இவ்வளவு தூரம் அரசியல்மயமாக்கப்பட்டமை வெட்கக்கேடான விடயம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“இலங்கையின் வேண்டுகோளை தொடர்ந்தே அமெரிக்கா எம்.சி.சி உதவிதிட்டத்தை இலங்கைக்கு வழங்க முன்வந்தது.  வறுமையை ஒழிப்பதும் அனைவரையும் உள்வாங்கிய பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் இலக்கை நோக்கமாக கொண்டே இந்த வேண்டுகோளை ஏற்றோம்.

உத்தேச எம்.சி.சி உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதா என்பதை தீர்மானிக்கவேண்டியது அரசாங்கமே.  அரசியல் நோக்கமற்று, தரவுகளை அடிப்படையாக கொண்டு கலந்தாய்வு கட்டமைப்புகளை அடிப்படையாகொண்டு அபிவிருத்தி திட்டங்கள் உருவாக்கப்படுவதை கருத்தில் கொள்ளும்போது எம்.சி.சி உடன்படிக்கை மிக அதிகளவிற்கு அரசியல் மயப்படுத்தபட்டுள்ளமை வெட்கக்கேடான விடயம்.

உத்தேச 480 மில்லியன் நன்கொடை-(கடனில்லை), போக்குவரத்து நெருக்கடியை குறைத்தல் மூலமும், வேளாண் பொருட்களை சந்தைக்கு கொண்டுசெல்வதற்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்குதல் போன்றவற்றின் மூலம் 11 மில்லியன் இலங்கையர்களுக்கு நேரடி நன்மைகளை வழங்குகின்றது.” என்றார்.

http://www.ilakku.org/sri-lanka-m-c-c-alaina-b-teplitz/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.