Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை’ – இன்று ‘சே’-யின் நினைவு நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை’ – இன்று ‘சே’-யின் நினைவு நாள்

che-guevara455-14-1.jpg

சே குவேரா…,பல பேர் இவர் யாருன்னே தெரியாம அவர் படம் போட்ட பனியனோடு சுத்துவதைக் காணமுடியும். சே வரலாறு என்பதைப் பார்ப்பதைவிட அவரது சொற்கள் துப்பாக்கித் தோட்டாக்களைப் போன்றவை என்பதைப் பார்க்க வேண்டும்.

சே -வின் குரல் – எல்லா மனிதருக்கும் மனிதம், அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். போருக்குச் செல்லும் போது, கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும்.

நான் ஒரு கியூபன். நான் ஒரு அர்ஜெண்டைனன். நான் யாருக்கும் குறையாத லத்தீன் அமெரிக்க தேச பக்தன். இங்கே வந்திருக்கும் லத்தீன் அமெரிக்க முக்கிய மனிதர்கள் யாரும் தங்களை நான் அவமதித்து விட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் எதாவது ஒன்றின் விடுதலைக்கு எந்த பலனும் கேட்காமல், யாரையும் பலி கேட்காமல் நான் என்னையே தருவதற்கு தயாராக இருக்கிறேன்.

ஏகாதிபத்தியத்தை நிர்மூலப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொன்றாக, சிறு சிறு கட்டமாக மக்களை விடுவிக்க வேண்டும். எதிரியை அவன் பூமியில் இருந்து பெயர்த்தெடுத்து கடுமையான போராட்டத்திற்கு அழைக்க வேண்டும். அவனுக்குச் சாதகமான பகுதிகளையும் முகாம்களையும் அழிக்க வேண்டும்.

தோழரே! பட்டவர்த்தனமாக சொல்வதென்றால் ஸ்பெயினின் எந்தப்பகுதியிலிருந்து எனது மூதாதையர்கள் வந்தனர் என்பதை நான் அறியேன். நீண்ட காலத்திற்கு முன்பே அவர்கள் தங்கள் பூர்வீக வீட்டை விட்டு பிறந்தமேனியோடு வெளியேறிவிட்டனர். வசதியாக இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நான் அதுபோல கிளம்ப மாட்டேன். நாம் நெருங்கிய உறவினர்கள் இல்லை என நினைக்கிறேன். இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள். அதுதான் முக்கியமான விஷயம்.

ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்துபோவாயானால், நீ எனது தோழன். உலகின் எங்கோ நடக்கும் முறையின்மைக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனக்குத் தோழன்தான்.

புரட்சி என்பது தானாக மரத்திலிருந்து விழும் ஆப்பிள் அல்ல, நாம்தான் அதை விழச் செய்ய வேண்டும். மண்டியிட்டு வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல். நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்.

விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையேல் உரம். விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை. எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.

எதிர்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒரு நாணையத்தை சுண்டிப்போட்டு அதிர்ஷ்டத்தை நம்புவதைப் போல, அபாயத்தை எதிர்கொள்கிறான் போராளி. ஒரு கொரில்லாப் போராளிக்கு, ஒரு மோதலைத் தொடர்ந்து அவன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பது முக்கியமில்லாமல் போய்விடுகிறது

நமது போர்க்குரல் இன்னொரு மனிதனின் காதில் விழுமானால், நமது ஆயுதங்களை இன்னொரு கை எடுத்துக்கொள்ளுமானால், நமது இறுதிச்சடங்கில் இயந்திரத் துப்பாக்கியின் உறுமல்களோடும் புதிய போர்க்குரல்களோடும் இன்னும் பலர் கலந்துகொள்வார்களேயானால் திடீரென ஆச்சரியப்படுத்தும் மரணத்தைக்கூட, நாம் வரவேற்கலாம்.

சமூக ஊடக பதிவிலிருந்து…

 

https://www.ilakku.org/விதைத்தவன்-உறங்கினாலும/

சே குவேராவின் 53ம் ஆண்டு நினைவு நாள் இன்று!

October 9, 202000
SHARE0
che-guevara4-dead.jpg?189db0&189db0
 

எங்கோ பிறந்து இன்னோர் இனத்தின் விடுதலைக்காய் போராடிய தன்னிகரில்லா ஓர் மபெரும் போராளியின் சே குவேரா.

புரட்சியைப் புதைத்தபோது அதனை உயிர்க்கவைத்து இன்றைய இளைஞர்களின் இதயங்களிலும் வாழும் இந்த உன்னதப் புரட்சியாளன் கொல்லப்பட்டு இன்றுடன் 53 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

காலத்தை மாற்றித் திருத்திய அந்தக் காவியத்தின் பெயர் சேகுவேரா. எர்னெஸ்ற்றோ சேகுவேரா எனும் இந்த நாமம், புரட்சிக்கனல் கக்கும் ஓர் மாபெரும் புரட்சியாளனின் முகவரி மாத்திரமல்ல எக்காளமிட்ட ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் அச்சத்தின் எதிரொலி.

ஆர்ஜென்டீனாவில் 1928ம் ஆண்டு ஜூன் 14ம் திகதி பிறந்த சேகுவேரா, மாக்சியவாதி, மருத்துவர், இலக்கியவாதி, யுத்த வல்லுனர், இராஜதந்திரி எனும் பல்வேறு பரிணாமங்களைத் தன்னகத்தே கொண்ட புரட்சியாளர்.

மண்டியிட்டு வாழும் இலத்தீன் அமெரிக்க தேச மக்களின் வாழ்வின் எழுச்சிக்கான சிந்தனையில் ஆழ்ந்திருந்த சேகுவேரா, மெக்சிகோவில் கியூபப் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்து நட்புப் பூண்டார்.

பின்னர் கியூபாவில் கொடுங்கோன்மை புரிந்த பாடிஸ்டாவின் ஆட்சியைக் கவிழ்க்கும் ஃபிடலின் எண்ணத்தை அறிந்த சே, ஜூலை 26 இயக்கத்தில் இணைந்துகொண்டார். மேற்குலக ஆட்சியாளர்கள் அசாத்தியம் என நினைத்திருந்த புரட்சியை, கியூபாவில் சாத்தியப்படுத்தும் நோக்கில் செயற்பட்ட சே, காஸ்ட்ரோவின் தோளோடு மாத்திரமன்றி சன்னங்களின் சல்லடைக்கும் தோள்கொடுத்தார். விடுதலையும் பெற்றுக் கொடுத்தார்.

இந்த மாபெரும் புரட்சியாளன் 1967ம் ஆண்டு இதே நாள் சிஐடி மற்றும் அமெரிக்க சிறப்பு படைகளால் பெலிவியாவில் கொல்லப்பட்டார்.

https://newuthayan.com/சே-குவேராவின்-53ம்-ஆண்டு-நி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.