Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னணி : கட்சியா - அமைப்பா? - கபில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னணி : கட்சியா - அமைப்பா? - கபில்

அண்மைக்காலத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், வெளிச்சத்துக்கு வந்த போது, அது ஒரு அரசியல் கட்சியா அல்லது அமைப்பா (இயக்கம்) என்ற சந்தேகமே மேலெழுந்தது.

ஏனென்றால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதுவரையில் தம்மை ஒரு அரசியல் கட்சியாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்து கொள்ளவில்லை.

அவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்த மணிவண்ணன் வலியுறுத்த ஆரம்பித்ததும் கூட, அவருக்கு எதிரான நடவடிக்கை, எடுக்கப்படுவதற்கு காரணமாக இருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை போலவே, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், ஒரு அரசியல் அணியாக செயற்பட விரும்பினாலும், அதனை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து கொள்வதற்கு, இரண்டு கட்சிகளின் தலைமைகளுமே விரும்பியதில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்தால், அதில் தமிழரசுக் கட்சி செலுத்திவரும் மேலாதிக்கம் உடைந்து போய்விடும் என்ற அச்சமே, அதனை பதிவு செய்வதற்கு தயக்குவதற்குக் காரணமாகும்.

ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தவரையில், அவ்வாறான காரணம் இல்லை.

ஏனென்றால் அது தனி ஒரு கட்சி. கூட்டாளிகள்- பங்காளிகள் யாரும் கிடையாது. ஆனால், அங்கே உள்ள முக்கியமான பிரச்சினை, கட்சித் தலைமைக்கு தனக்கு கீழ் உள்ளவர்கள் மீது நம்பிக்கை கிடையாது.

அந்த நம்பிக்கையீனம் தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்து. பரந்துபட்ட கட்டமைப்பை உருவாக்கும் இலக்குகளுக்கு சவாலாக இருக்கிறது. அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்த மணிவண்ணன், கட்சியை பிரதேச ரீதியாக நிறுவன மையப்படுத்தி கட்டமைக்கின்ற முயற்சிகளை ஆரம்பித்த போது, அதற்கு கட்சித் தலைமை தடைவிதித்தது.

தாங்கள் ஒரு அரசியல் கட்சி அல்ல என்றும், இயக்கமே என்றும், அந்த தருணத்தில் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியதாக மணிவண்ணன் உள்ளிட்ட பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

அவர் இயக்கம் என்று கூறியதன் அர்த்தம், விடுதலைப் புலிகளை அடிப்படையாகக் கொண்டு தான். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தாங்களே விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் ஒரே இயக்கம் என்றே கூறிக் கொள்கிறது. விடுதலைப் புலிகள் தமக்குள் எவ்வாறு ஒரு இறுக்கமான ஒழுக்கக் கட்டுப்பாடுகளை, கட்டமைப்புகளை வைத்திருந்தார்களோ அதுபோன்ற ஒரு கட்டமைப்புக்குள் தாங்களும் செயல்படுகிறோம் என்ற மாயைக்குள் இருக்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி. அடுத்த நிலையில் உள்ளவர்கள் வளர்ச்சி பெறுவது கட்சியின் தலைமைக்கு ஆபத்தாக உருவெடுக்கும் என்ற அச்சம், அவர்கள் மத்தியில் உள்ளது.

அதனால் தான், கட்சியை வளர்க்காமல், அதனை ஒரு வெறும் அமைப்பாக - அல்லது இயக்கமாக வைத்துக் கொண்டு, அரசியலில் அதிகாரம் செலுத்துவதற்கே விரும்புகிறார்கள்.

 இந்த இடத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பும் சரி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சரி, தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்கான அரசியலில் அமைப்புகளோ, தனிநபர்களோ, முக்கியமானதல்ல என்பதை உணரத் தயாராக இல்லை.

கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் இடையில் உள்ள முக்கியமான வேறுபாடு, கட்சிகள் பிரதேச, பிராந்திய மட்டங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட கிளைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அமைப்புகள், இயக்கங்களுக்கு பரந்துபட்ட கிளைகள், கட்டமைப்புகள் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. உறுதியான தலைமையும், தலைமையின் முடிவுகளை செயற்படுத்தக் கூடிய அர்ப்பணிப்புள்ள தொண்டர்களும் இருந்தால் போதும். விடுதலைப் புலிகள் அவ்வாறான கட்டமைப்பைத் தான் வைத்திருந்தார்கள்.

அவர்களும் ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சியை உருவாக்கி அதனூடாக பரந்துபட்ட ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு முற்பட்டார்கள். அதற்காக சிற்றூர் அவை, வட்டவை, போன்ற பிரதேச மட்டத்திலான கட்டமைப்புகளை உருவாக்கி இருந்தார்கள்.

எனினும் போர் மற்றும், வேறு சில காரணிகளால் அந்த கட்டமைப்பு குறுகிய காலத்திலேயே செயலிழந்து போனது. எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் மக்களுக்கும் இடையில் தெளிவான ஒரு பிரிகோடு வரையப்பட்டிருந்தாலும்,

அவர்கள், மக்களுடனான பிணைப்பை தொடர்ந்து உறுதியாகப் பேணினார்கள். அதனால் தான், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தொடர்ந்து மக்களின் ஆதரவு கிடைத்து வந்தது.

இப்போதும் அவர்கள் மீதான மதிப்பு நிலைத்து இருக்கிறது. விடுதலைப் புலிகளின் பாணியிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும், வைத்திருக்கும் எண்ணத்தில்தான், அதன் தலைமை இருக்கிறது.

அதனால் தான், கட்சியாக உருவாக்காமல், தமது வட்டத்துக்குள் புதிதாக யாரையும் நுழைய விடாமல் பார்த்துக் கொள்கிறது.

அந்த வட்டத்துக்குள் நுழையும் புதியவர்களால், கட்சித் தலைமைக்கு ஆபத்து வந்து விடும் என்று அஞ்சுகிறது.

மாற்றுக் கருத்துக்களை, முன்வைப்பவர்கள், விடுதலைப் புலிகளின் பாணியில் காற்று பிடுங்கப்படுகிறார்கள். வெளியேற்றப்படுகிறார்கள்.

இது தான் மணிவண்ணனுக்கும் நடந்தது. விடுதலைப் புலிகள் ஆயுத பலம் கொண்ட அமைப்பாக இருந்தார்கள். ஆயுதமேந்திப் போராடினார்கள். அதனால் அவர்களுக்கு பரந்துபட்ட எதிரிகளும் இருந்தார்கள். ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவ்வாறில்லை. எனினும், தம்மை உலகமே குறிவைத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் தங்களுக்குத் தாங்களே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பிரமை தான், அவர்களை , அவர்களுக்குள்ளேயே எல்லோரையும் நம்பாத - எதிரிகளாக பார்க்கின்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறான நிலையே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஒரு பரந்துபட்ட- மக்கள் செல்வாக்குப் பெற்ற, கட்டமைப்பாக உருவாக்குவதற்கு இருக்கின்ற தடையாகும்.

மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் அமைப்பாக கட்சியை உருவாக்க வேண்டும் என்ற இலக்கு கட்சித் தலைமையிடமும் இல்லை. அவ்வாறான அமைப்பு உருவாக்கப்பட்டால், அதிகாரம் தங்கள் கையை விட்டுப் போய் விடும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது.

அதனால் தான், ஒரு பக்கம் தமிழ்க் காங்கிரஸ் இன்னொரு பக்கம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என இரண்டு தோணியில் பயணம் செய்ய முனைகிறது.

தமிழ்த் தேசிய அரசியல் பற்றிப் பேசப்படும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவுகள் பற்றி மட்டுமே பெரும்பாலானவர்களால் பேசப்படுகிறது.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்க் காங்கிரசில் இருந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து வெளியே போனவர்கள், ஒதுங்கிக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம் என்பது பலருக்குத் தெரியாது.

அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சி.வி.கே.சிவஞானம், நல்லையா குமரகுருபரன், வரதராஜன், இராஜகுமாரன், என்று மணிவண்ணன் வரை நீளுகிறது இந்தப் பட்டியல்.

இதற்குக் காரணம், ஒரு வட்டத்துக்குள் மாத்திரம் சுற்றிக் கொண்டிருக்க முனைகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. இந்த வட்டத்தை தாண்டி வெளியே வர வேண்டும்.

அதனை விட்டு வெளியேறாமல், தமிழ்த் தேசிய அரசியலில் முன்னணியினால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பாத்திரத்தை வகிக்க முடியாது.
 

https://www.virakesari.lk/article/91810

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.