Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாநகர சபை உறுப்புரிமை; மணிவண்ணனுக்கு எதிரான மனுவை மீளப் பெற்றார் சுமந்திரன்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாநகர சபை உறுப்புரிமை; மணிவண்ணனுக்கு எதிரான மனுவை மீளப் பெற்றார் சுமந்திரன்.!Screenshot-2020-10-13-11-48-28-980-org-m யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்காத ஒருவர் யாழ்.மாநகரச சபை உறுப்பினராக அங்கத்துவம் வகிக்க முடியாது என்பதால் அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று மீளப்பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த மனுவுக்கு அமைவான விசாரணையின் அடிப்படையில் மணிவண்ணன் மாநகரசபை அமர்வுகளில் பங்கேற்க கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

குறித்த இடைக்காலத் தடைக்கு ஆட்சேபனை தெரிவித்து வி.மணிவண்ணனால் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில், வி.மணிவண்ணன் மாநகர சபை உறுப்புரிமை வழங்கிய கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையால் குறித்த மனுவின் ஊடாக நீதிமன்ற நேரத்தை தான் விரயமாக்கவிரும்பவில்லை என்று தெரிவித்து சுமந்திரன் தமது மனுவினை மீளப் பெற்றுள்ளதாக மணிவண்ணன் தரப்பு சட்டத்தரணி அருவி இணையத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை குறித்த வழக்குத் தொடர்பில் அருவிக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன்,

குறித்த வழக்கு மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் நபர் ஒருவரால் என் ஊடாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது மணிவண்ணன் குறித்த கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் வழக்கை வாபஸ் பெறுமாறு வழக்குத் தாக்கல் செய்திருந்த நபர் என்னிடம் கோரியிருந்த நிலையில் வழக்கு வாபஸ் பெறப்பட்டது என்று தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களுக்கு இடையில் பிளவு நிலை காணப்படும் சூழலில் மணிவண்ணனை மீண்டும் மாநகரசபைக்குள் செல்ல வைப்பதற்கான உத்தியாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் நோக்கர்கள்.

http://aruvi.com/article/tam/2020/10/13/17882/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணி சார்பான 10 உறுப்பினர்களுக்கு இறுதி முடிவு கேட்டு கடிதம் எழுதினார் கஜேந்திரன் !

 Kajan-Copy_1080.jpg 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் வி. மணிவண்ணன் சார்பில் செயற்படும் 10 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களிடம் அவர்களின் இறுதித் தெரிவைத் தெரிவிக்குமாறு கோரி முன்னணியின் பொதுச்செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

“தாங்கள் எமது அரசியல் இயக்கத்துடன் தொடர்ந்து பயணிப்பது அல்லது பயணிக்காது விலகுவது தொடர்பான தங்களின் இறுதித் தெரிவைத் தீர்மானிப்பதற்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்படுகின்றது. இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்று 14 நாட்களுக்குள் தங்களின் இறுதித் தெரிவு தொடர்பாக எனக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், குறித்த உறுப்பினர்களுக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டுள்ள அந்தக் கடிதம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பு உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு தங்களது பெயர் எமது இயக்கத்தால் பரிந்துரைக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில் அந்தக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட சபைக்கு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள்.

எமது அமைப்பால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டவர்களுடன் தொடர்புபட்ட வகையில் எமது அரசியல் இயக்கத்துக்கும் அதன் தலைமைக்கும் எதிரான கருத்துக்களைப் பொது வெளிகளிலும் முகநூலினூடாகவும் தெரிவித்து வருகின்றீர்கள்.

எமது அரசியல் இயக்கத்துடன் தங்களை இணைத்துப் பயணிக்க நல்லிணக்கங்களைத் தாங்கள் தொடர்ச்சியாக மீறி வருகின்றீர்கள். எமது அரசியல் இயக்கத்தை மத்திய குழுவின் தீர்மானங்களே கட்டுப்படுத்துவதாகும். எமது அரசியல் இயக்கத்துடன் இணைந்து பயணிப்பதாயின் மத்திய குழுத் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்” – என்றும் பொதுச் செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதம் யாழ்ப்பாணம் மாநகர சபையில் இரு பெண் உறுப்பினர்கள் உட்பட மூவருக்கும், வலிகாமம் தெற்கு மற்றும் சாவகச்சேரி பிரதேச சபைகளின் 7 உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

https://thamilkural.net/newskural/mainnews/80799/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.