Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரியாலை கிழக்கு பிரதேசம் கடல் நீரால் அழியும் அபாயம்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரியாலை கிழக்கு பிரதேசம் கடல் நீரால் அழியும் அபாயம்.!

Screenshot-2020-10-16-10-47-14-114-com-a நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அரியாலை கிழக்கு பிரதேசத்தில் சட்டத்திற்கு உட்பட்டும், சட்ட விரோதமாகவும் மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.

நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் இந்த மணல் அகழ்வு இடம்பெறுகின்றது. இரவு வேளைகளில் களவாக தனியார் காணிகளில் இவ்வாறு மணல் அகழ்வு இடம்பெறுவதோடு, பொய்யான காணி உறுதிகளையும், முறையற்ற காணிமாற்று முறைகளையும் பயன்படுத்தி கனியவள திணைக்களத்தில் அனுமதிபெற்று பெறப்பட்ட அனுமதிக்கு மேலாகவும் மணல் அள்ளப்படுகின்றது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினராலும் முடியாதுள்ளது. காவல்துறையினர் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவங்களும், மணல் கொள்ளையர்மீது துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்ற சம்பவங்களால்கூட எதுவும் நடைபெறவில்லை.

இந்த மணல் அகழ்வில் யாழ்ப்பாண மாநகரசபையின் உறுப்பினர்களும் ஈடுபட்டிருப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இப்பிரதேசத்தின் மணல் அகழ்வு தொடர்பான பல வழக்குகள் நடைபெற்று வருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு நீதிமன்றம், ஆளுநர் அலுவலகம், மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம், கனியவள திணைக்களம், கடற்றொழில் அமைச்சு என்பன விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கிராம மக்கள் வினயத்துடன் கோரிக்கை விடுத்துள்ளதோடு இதனை வெளிப்படையாக வெளிப்படுத்த அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதைவிட இப்பிரதேசத்தில் நல்லூர் பிரதேசசபையின் உறுப்பினர் ஒருவரும் நிரந்தர குடியிருப்பாளராக இருக்கிறார். குறித்த விடயங்கள் தொடர்பில் அப்பகுதி மக்கள் ஊடகங்களுக்கு தமது கருத்துக்களை வெளியிடவும் பீதி அடைந்த நிலையில் காணப்படுகின்றார்கள்.

அவ்வாறு கருத்து தெரிவிப்பவர்களின் வீடுகள் இரவு வேளைகளில் விஷமிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://aruvi.com/article/tam/2020/10/16/17990/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணல் கடத்தல்காரர்களை தட்டிக்கேட்டவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்..! யாழ்.வரணியில் சம்பவம்..

 

mob-attack_710x400xt.jpg

யாழ்.வரணிப் பகுதியில் திருட்டு மணல் ஏற்றியவர்களிற்கு பாதை விட மறுத்தவர் மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின்போது வரணியை சேர்ந்த கே.கலாசுதன் வயது 46 என்பவர் மீதே மண்வெட்டிப் பிடியால் தாக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைநில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வரணிப்பகுதியில் அகலம் குறைந்த பாதை ஒன்றின் ஊடாக திருட்டு மணல் ஏற்றியவாறு ஐந்து உழவு இயந்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து பயணித்துள்ளன.

அதன்போது அப்பாதையால் இரவு வீடு நோக்கிப் பயணித்தவர் அதனை அவதானித்து கேள்வி கேட்டுள்ளார். இதனால் பாதைவிடுமாறு திருட்டு மணல் ஏற்றியவர்கள் தர்க்கம் செய்துள்ளனர்.

இதன்போது திருட்டு மண் ஏற்ற அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தமையினால் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்ற வைத்திருந்த மண் வெட்டியின் பிடியை கழட்டி வந்து தாக்கியுள்ளனர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் தொலைபேசி மூலம் தனது உறவுகளிற்கு தகவல் வழங்கிய நிலையில் அவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன்,

பொலிசாரிடமும் முறையிட்டனர். குறித்த முறைப்பாட்டின் பெயரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் தாக்குதல் மேற்கொண்ட மணல் கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில் தேடுதல் நடத்திய பொலிஸார் ஒரேயொரு உழவு இயந்திரத்தை மட்டும் பொலிஸார் மீட்டுச் சென்றுள்ளனர்.

https://jaffnazone.com/news/21001

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.