Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“புத்தம் புதுக் காலை” (அமேசான் பிரைம் - OTT வெளியீடு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8B5A1451-9B0A-4EC7-A8AD-B36D1BF62A1C.jpeg
 

 

 ஐந்து குறும்படங்களையும் படங்களையும் பார்த்தேன். பலரும்சொல்வதைப் போல பழமை வீச்சம், தேய்வழக்குகள் அதிகம். எனக்கு அதை விட இப்படங்களின் திரைக்கதை அவசரமாய்உருவாக்கப்பட்டதைப் போலத் தோன்றுகிறது. ஓரளவுக்குநன்றாக வந்த Coffee, Anyone? கூட கிளைமேக்ஸை கோட்டைவிட்டதை போலத் தோன்றுகிறது. அப்படத்தைப் பற்றி முதலில்சொல்லுகிறேன்.

 

சுஹாசினி எழுதி இயக்கிய இப்படத்தில் மற்ற படங்களை விடதிரைக்கதை மேலாக இருக்கிறது. மூன்று சகோதரிகளின்வாழ்வில் வரும் சிறிய நெருக்கடிகள், அதை அவர்கள் ஒரேசம்பவத்தின் - அம்மா கோமாவுக்கு சென்று, வீட்டில் வைத்துஅப்பாவால் கவனிக்கப்பட்டு, அதிசயமாய் மீண்டு வருவது - பின்னணியில் எப்படி வெற்றிகொள்கிறார்கள் என்பதே ஒற்றை வரி. சகோதரிகளாக வரும் சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதிஹாசனின்வாழ்க்கைப் பின்னணி, அடிப்படையான இயல்புகள், வாழ்க்கைப்பிரச்சனைகள் தெளிவாக சொல்லப்பட்டு விடுகிறன. இங்கிலாந்தில் வாழும் சுஹாசினிக்கு தன் மகனை போதுமானஅளவுக்கு கவனிக்க முடியவில்லை, அவனுக்கு டிஸ்லெக்ஸியாஎனும் ஆற்றல் குறைபாடு உள்ளது எனும் குற்றவுணர்வு, அனுவுக்குநீண்ட கால முயற்சிக்குப் பின்னரும் மகப்பேறு இல்லை எனும்இயலாமை, ஸ்ருதிக்கு தன் விருப்பங்களை தாய் புரிந்து கொண்டுஆதரிக்கவில்லை எனும் கோபம். உறவுகள் மீதான புரிதல்கள், வாழ்க்கை மீதான நம்பிக்கை, குடும்பத்தின் மீதான பாசம் தோன்றிஇவர்கள் நெருக்கடியை கடப்பதே கதை. இதை ஒரு வசனத்தின்மூலம் சாதிக்கிறார்கள் என்பது நம்பும்படியாய் இல்லையென்றால்படத்தில் ஓரளவுக்கு இதை சமாளித்து விடுகிறார்கள். இறுதிக்காட்சியில் அம்மா கோமாவில் இருந்து முழுமையாய் மீண்டும்தனக்கு ஒரு கப் காப்பி வேண்டும் எனக் கேட்பதைபார்வையாளனுக்கு இன்னும் திருப்தி ஏற்படும்படிஅமைத்திருக்கலாம் - அம்மாவின் நிலை மோசமாகி பின்னர்எதிர்பாராமல் சீராவதைப் போல அல்லது வேறு விதங்களில்(தேய்வழக்குதான், ஆனால் வேலை செய்யும்.).

இப்படத்தின் ஒளிப்பதிவு, framing, blocking மற்ற படங்களைவிட சிறப்பாக உள்ளது. அதாவது மணிரத்னம் ஸ்டைலில், ஒவ்வொரு கடையும் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம் என்பதைப்போல உள்ளது. .தா., சுஹாசினி தன் அம்மாவை வீட்டில்வைத்து, மருத்துவ கவனிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வதைவிரும்பவில்லை; அவர் சற்று எதிர்மறையாக அதிசயங்களில்நம்பிக்கை இல்லாதவராக உள்ளார். இதைக் காட்டுவதற்காகஇவர் ஆரம்பத்தில் தோன்றும் காட்சிகளில் சட்டகத்தில் பாதிதிறந்த கதவின் பக்கத்தில் நிற்பது போல அமைத்திருக்கிறார்கள். அன்பின் மகத்துவத்தை அவர் புரிந்து கொண்ட பின் அவர் திறந்தசட்டகங்களில் தோன்றுகிறார்.    

 

 ஸ்ருதி ஐபேட் வழியாக தன் அம்மாவுடன் பேசும் போது அவரது கைமட்டும் சத்தம் வருகிற திசையாக எழுந்து தொட முயலும். இக்காட்சி ஒரு உருவகம் போல உள்ளது - ஒரு சிறு அசைவால்காலம் ஏற்படுத்தும் தொலைவைக் கடந்து எளிதில் அன்பைத்தொட, உணர்த்த முடியும் என்பதற்கான உருவகம். அதை ஒருநகைமுரணாகவும் (திரையில் தோன்றும் வெர்ச்சுவல் உண்மையைதொட முடியாதே), அவரது ஆசீர்வாதமாகவும் கூட தோன்றுகிறது.

 

இப்படியான நுணுக்கங்களை மற்ற படங்களில் காணமுடியவில்லை. ஒரே குறை நீளமான வசனங்கள். வசனங்களைக்குறைத்தால் படத்தை இன்னும் சிக்கனமாக பண்ணியிருக்கலாம்.

 

கார்த்திக் சுப்புராஜின் Miracle ஒரு வித்தியாசமான சமூகப் பகடி. அவரது படங்களின் டிப்பிக்கலான ஸ்டைல் அம்சங்களும் உண்டு - பழைய பாடல்களை எதிர்பாராத இடங்களில் ஒலிக்க விடுவது, குறைந்த ஒளியில் அதிரடிக் காட்சிகள், அசமந்தமானநகைச்சுவை என. ஒரே குறை உணர்ச்சி ஆழம் இல்லாதது. படம்முடியும் போது கிளைமேக்ஸ் நம்மை ஆச்சரியப்படுத்துகிறதேஒழிய திருப்தி அளிக்கவில்லை. சமூகப் பகடி எனும் போது ஒருசமூகத்தீமையை சித்தரித்து, அதனால் ஏற்படுகிற பாதிக்களைசுருக்கமாய் காட்டி இறுதியில் வில்லன் தமாஷாக இழப்பைசந்தித்து பல்ப் வாங்குவதாய் காட்டலாம். இதில் வில்லனுக்குஇழப்பு நேரும் போது அவன் அதனால் வருத்தப்படுகிறானாஇல்லையா, அவன் சாமியாரா அல்லது வட்டிக்கு விட்டு, மக்களைவாட்டி சம்பாதிக்கிற கொடூரனா என்பது தெளிவாக இல்லை. (எல்லா கார்த்திக் சுப்புராஜ் படங்களையும் போல இதிலும்வில்லன் யார், ஹீரோ யார் எனும் குழப்பம் உள்ளது.) கிளைமேக்ஸ்நேரம்”, “சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களைநினைவுபடுத்துகிறது.

 

சுதா கொங்கோராவின் இளமை இதோ இதோ ரொம்பபலவீனமான திரைக்கதையைக் கொண்ட படம். பிரதானபாத்திரங்களுக்கு எந்த பெரிய சவால்களும் இல்லை என்பதுபடத்தை ஆட்டை முழுங்கிய மலைப்பாம்பைப் போல படுக்கவைக்கிறது.

அவரும் நானும் - அவளும் நானும் கௌதம் மேனனின் படம் எனஎன்னால் நம்ப முடியவில்லை. அவரது முத்திரை இல்லாத படம் பேத்தி வீட்டுக்கு வந்ததும் அந்த தாத்தா தன் மனத்தடைகளைகடந்து ஏற்கப் போகிறார் என்பது ஒற்றைவரி. ஆனால் இக்கதைமுதல் ஐந்து வினாடிகளுக்குள் முடிந்து போகிறது. அதன் பிறகுமுழுக்கவே அழுகைப் படலம் தான். ஆனாலும் சில இடங்கள்நம்மை நெகிழ வைக்கின்றன, எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பு அவ்வளவுஅழகாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

 

ராஜீவ் மேனனின் Reunion தான் இருப்பதிலே மட்டமான படம் - அது யாருடைய கதை? போதைப் பழக்கத்தில் இருந்து மீளவேண்டிய ஆண்டிரியாவின் கதையா? எனில் ஏன் அவ்வளவுநேரத்தை லீலா சேம்சன், குரு சரணில் வீணடிக்க வேண்டும்? ஆண்டிரியா போதைக்கு அடிமையாகக் காரணம் தன் கலைவாழ்வில் பெரிய வெற்றி பெற முடியவில்லை என்பது. அதுவேஅவரது சவால். அதைக் கடப்பதே அவருக்கான அடிப்படைவிழைவு. ஆனால் அதை குருசரண் லவ் யூ சொன்னதும், லீலாசேம்சன் அன்புடன் பராமரித்ததும் அவரால் கடந்து விட முடியும்என்பதை நம்ப முடியவில்லை. கிளைமேக்ஸை வேறுவிதமாய்அமைத்திருக்கலாம் - குரோசாவாவின் இகிரு போல.

 

இக்கதைகளை வீட்டுக்குள் வைத்து எடுத்தது மற்றொருபிரச்சனை - அது இயல்பாகவே கதைகளை குடும்பத் தளத்துக்குள்முடக்கி விடுகின்றன. இந்த கொரோனா காலத்தில் வெளியேஎத்தனையோ பிரச்சனைகள், எதிர்பாரா அனுபவங்கள்ஏற்பட்டதைப் பார்த்தோம். ஊருக்கு நடந்தே போக முயன்றுவழியில் செத்துப் போன மக்கள், சிகிச்சைக்காக மாநிலஎல்லைகளுக்கு, இடையே பாஸ் வாங்கி அலைபாய்ந்த மக்கள், நிறுவனங்களின் ஊழல், மருத்துவர்கள், செவிலியரின் தியாகம், பயணத்தின் போது விடுதியில் கட்டாய தனிமைப்படுத்தலுக்குஆளானவர்கள் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்கள் எனசமூகவலைதளங்களிலேயே சினிமாவுக்குப் பொருத்தமானஎத்தனையோ முக்கியமான ஒற்றை வரிகளைப் பார்த்தோம். எதிர்காலத்தில் இவ்வகையான கொரோனா கதைகளைஇயக்குநர்கள் எடுக்க முயல வேண்டும்.

 

 

இந்த 5 படங்களில் முதல் மார்க் வாங்கி பாஸ் ஆகிறவர் சுஹாசினிதான். என்னாலே நம்ப முடியவில்லை! இவ்வளவு நல்லதிரைமொழி சுஹாசினியிடம் உண்டா? உண்மையானமிராக்கிள் இதுதான்.
 

 

http://thiruttusavi.blogspot.com/2020/10/ott.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.