Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கு நடவடிக்கை -கோவிந்தம் கருணாகரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி பி (B) வலயத்தில் வெளியாறுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதானது தமிழ் மக்களின் இனப்பரம்பலை திட்மிட்டு குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார்.

ஒன்றுபட்டு உரிமையைப் பெறுவோம்! அதற்காக எங்களது ஒவ்வொரு அடியையும் முன்னோக்கி  வைக்க வேண்டும். - ஜனா

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பண்ணையாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடுளே இடம்பெற்று வருகின்றன. மகாவலி பி வலயத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களே இவ்வாறு அபகரிக்கப்படுகின்றன. இதன் பின்புலத்தில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கடந்த 14ஆம் திகதி இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசாங்க அதிபர் என்னக் காரணத்துக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பதற்கு மேலாக கடந்த 12ஆம் திகதி காணி அபகரிப்பு இடம்பெற்றுவரும் மயிலத்தமடு, மாதனை பிரதேசங்களுக்கு அவர் களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். 13ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரை சந்தித்திருந்தோம். 14ஆம் திகதி கிழக்கு ஆளுனரையும் சந்தித்திருந்தோம்.

இரண்டு இலட்சம் மாடுகளை மேய்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை சேனை பயிர்ச்செய்கைக்காக 5 ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதால் குறித்த நிலப்பகுதியில் மாடுகளை மேய்க்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். 2010ஆம் ஆண்டு 27,311 ஹெக்டேயர் நிலம் மாடுகள் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 5 இலட்சத்திற்கும் அதிகமான மாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளன. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 34 இலட்சத்திற்கும் அதிகமான லீட்டர் பால் இங்கு உற்பத்திசெய்யப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தை மகாவலி வலயத்துக்குள் கொண்டு வந்து சிங்களக்  குடியேற்றம் செய்ய முயற்சி | வெளிச்சவீடு

இவ்வாறான நிலைகள் உள்ள போதிலும் வெளிமாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இலங்கை முழுவதும் மகாவலி வலயம் எனக் கூறப்படும் 10 வலயங்களில் 1,23,630 சிங்களக் குடும்பங்களுக்கு 96 சதவீதமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளன. 

12 சதவீதமாகவுள்ள தமிழ் மக்களுக்கு அதாவது இந்த வலயத்தில் உள்ள 1834 குடும்பங்களுக்கு 1.42 சதவீதமான நிலம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. 3000 முஸ்லிம் குடும்பங்களுக்கு 2.39 சதவீதமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி பி வலயத்தில் காணிகள் ஒதுக்கிக்கொடுக்கப்பட வேண்மென்றால் அவை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும்தான் ஒதுக்கிக்கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது.

13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுதான் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனையவர்களுக்கு காணிகள் ஒதுக்கிக்கொடுக்கப்படுவதானது திட்டமிட்ட இனவாத குடியேற்றமாகும் என்பதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும் என்றார். 

https://www.virakesari.lk/article/92582

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் மத்தியில் எம்மை இனவாதிகளாக காட்டுகின்றனர். - சாணக்கியன் குற்றச்சாட்டு

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் உள்ள மேய்ச்சல் நிலம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனருடன் நாம் நடத்தி சந்திப்பு தொடர்பில் ஆளுனர் வெளியிட்டுள்ள கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் எம்மை இனவாதிகளாக காட்டும் வகையில் அமைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். 

 வடக்கு கிழக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு இன்னொரு நீதியா- சாணக்கியன் காட்டம்!  | Athavan News

பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் உள்ள மேய்ச்சல் நிலம் கிழக்கு மாகாண ஆளுனர் வெளிடப்படவுள்ளதாக கூறும் வர்த்தமானி குறித்து எழுந்துள்ள சிக்கல் நிலைமைகளை கலந்துரையாடுவதற்காக கிழக்கு மாகாண ஆளுனர் அநுராத யாம்பத்தை கடந்த 14ஆம் திகதி காலை 10 மணியளவில் சந்தித்திருந்தோம். இந்தச் சந்திப்பு தொடர்பில் ஆளுனர் ஊடங்களுக்கு விடுத்து அறிவிப்பில், பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் இனங்கள் அடிப்படையில் இங்குள்ள மேய்ச்சல் நிலங்களை பிரித்துக்கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் இனங்கள் அடிப்படையில் காணிகளை ஒதுக்கீடு செய்வது எமது பணியல்ல எனவும் கூறியுள்ளார். இந்த செய்தி பல ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த செய்தி எனது சிறப்புரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளது. ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உரித்தான மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் மகாவலி பி பிரிவில் சில காணிகள் உள்ளன. இதில் 2 இலட்சம் பசு மாடுகள் மேய்க்கப்படுகின்றன. தினமும் 17ஆயிரம் லீட்டர் பால் உற்பத்தி இங்கு நடைபெறுகிறது. கிராம சேவகர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் ஆகியோரை சந்தித்தோம். இந்த பிரச்சினை தொடர்பில் பேசியதால் அரசாங்க அதிபரையும் மாற்றியுள்ளனர். மகாவலி திட்டத்திற்குப் பொறுப்பான பணிப்பாளரையும் சந்திதோம். அமைச்சர் சமால் ராஜபக்ஷவிடமும் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளோம்.

20ஆயிரம் ஏக்கர் நிலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து ஐந்து ஐந்து ஏக்கர் மாடு மேய்ச்சலுக்காக பிரித்துக்கொடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் கூறியுள்ளார். ஐந்து ஏக்கர் என்ற அடிப்படையில் பிரித்துக்கொடுப்பதால் அவை மேயும் மாடுகளுக்குத் தெரியுமா?. எனது சிறப்புரிமை தொடர்பில் பொய்களை கூறுகின்றனர். நான் பாராளுமன்றத்தில் சிங்கள மொழியிலும் உரையாற்றி இனவாதி என்பதை உணர்த்தியுள்ளேன். சிங்கள மக்களுக்கு தவறான செய்திகள் செல்லக்கூடும். குறிப்பாக தமிழ் எம்.பிகள் இனங்கள் அடிப்படையில் காணிகளை பிரித்துக்கொடுக்குமாறு கூறுவதாக செய்திகள் செல்லக்கூடும் என்றார்.

https://www.virakesari.lk/article/92586

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.