Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த அரசின் எதிர்காலமும் கள யதார்த்தங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அரசின் எதிர்காலமும் கள யதார்த்தங்களும்-புரட்சி (தாயகம்)-

கடந்த மே 20 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளிவந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரினால் வழங்கப்பட்ட செவ்வியானது கொழும்பில் உள்ள தூதுவராலய வட்டாரங்களினால் மிகவும் கவனமாக படிக்கப்பட்டு கருத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சமூகத்தின் சமாதான முன்னெடுப்புக்கள் விடயத்தில் அவர்கள் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் எவ்வாறு சமாதான முயற்சிகள் சீர்குலைக்கப்பட்டு சிறிலங்கா அரசு தனது போர் முயற்சிகளை முனைப்புடன் தீவிரப்படுத்த உதவியது என்பது தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்களானது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததென சில மேற்குநாட்டு இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

இக்கருத்தினை ஒட்டியதாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் ~கொழும்பின் இராணுவத்தீர்வின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதன் மூலமே தமிழ் மக்கள் நிரந்தரமான அமைதியைப் பெறமுடியும்| என்று தமிழ்நெற் இணையத்தளத்திற்கான கடந்த மே 23 ஆம் நாள் செவ்வியில் தெரிவித்திருந்தார்.

அண்மைக்காலங்களில் விடுதலைப் புலிகள் நடாத்திய வெற்றிகரமான வான், கடல் மற்றும் தரை நடவடிக்கைகள் காரணமாக சிங்கள தேசமானது முன்னெப்பொழுதும் இல்லாதளவிற்கு மிகவும் மோசமான நெருக்கடிகளையும் சவால்களையும் அரசியல், இராணுவ, மற்றும் பொருளாதார ரீதியாக எதிர்நோக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இத்தாக்குதல்களின் மூலம் விடுதலைப் புலிகள் உளவியல் போரிலும் வெற்றிபெற்றுள்ளதோடு முழு சிங்கள தேசத்தையும் ஒருவித தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளி விட்டுள்ளார்கள். இதன் பாதிப்பினை தற்போது சிங்களத் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று உதவிகேட்டு அலைந்து திரிவதில் இருந்தும் அவர்களது செவ்விகள் மற்றும் அறிக்கைகளில் இருந்தும் புரிந்துகொள்ளலாம்.

உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாறுகளை நாம் ஆராய்ந்து பார்ப்போமானால் அடக்குமுறைக்கு எதிரான மக்களின் போராட்டமானது கெரில்லாப் போராட்ட வடிவத்தில் இருந்து மரபுவழிப் போராட்டமாக, மக்கள் படைகளின் போராட்டமாக மாறாது தொடர்ந்தும் கெரில்லா போராட்ட வடிவத்திலேயே தேங்கியிருக்குமானால் அவ்விடுதலைப் போராட்டங்கள் காலவரையறையின்றி இழுபட்டுக்கொண்டே செல்லும். அத்துடன் விடுதலைப் போராட்டத்தினை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் அமைப்புக்களால் கொண்டுசெல்ல முடியாது போய்விடும். லத்தீன் அமெரிக்காவிலும் ஆபிரிக்க நாடுகளிலும் நீண்ட காலமாக இடம்பெறும் கெரில்லா போராட்டங்கள் இதற்கு உதாரணமாகும்.

மாறாக தமிழீழ விடுதலைப் புலிகள் தரை, கடல் மற்றும் வான் என முப்படைகளையும் கொண்ட ஒரு அரசு போன்று தமிழீழத்தில் செயற்படுவதோடு தமிழீழ அரசை இயக்குவதற்குத் தேவையான நிர்வாகக் கட்டமைப்புக்களையும் கொண்டிருப்பதால்தான் உலக விடுதலைப் போராட்டங்களிலே மிகவும் முற்போக்கானதாகவும் தனித்துவமானதாகவும் எமது போராட்டம் சர்வதேச ரீதியில் கணிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபுவழி படைபலங்களும் அவர்களின் மரபுவழி ரீதியிலான போரிடும் தகைமைகளுமே இலங்கைத்தீவிலே படைவலுச் சமநிலையை சிங்கள தேசத்திற்கு எதிராக தோற்றுவித்தது. அத்துடன் விடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசிற்கு நிகராக சமதரப்பாக சர்வதேச சமூகத்தாலும் அணுசரனையாளர்களாலும் கணிக்கப்படுவதற்கும் இவ்வலுச்சமநிலையும் புலிகளின் மரபுவழி போரிடும் தகைமைகளுமே காரணமாகும்.

விடுதலைப் புலிகள் மரபுரீதியிலான தமது போரிடும் தகைமைகளை வெளிப்படுத்துகின்ற அதேவேளை சமச்சீரற்ற போர் நடவடிக்கைகளிலும் தமது திறமைகளை பல்வேறு களங்களிலே வெளிப்படுத்தி வருகின்றார்கள். கடந்த மே 24 ஆம் நாள் நெடுந்தீவு ரேடார் நிலையம் மீதான வெற்றிகரமான தாக்குதலில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் விசேட அணியான ஈருடக படையணி முக்கிய பங்கினை ஆற்றியிருந்தது.

கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக சிங்களத் தலைவர்கள் விடுதலைப் புலிகளின் படைத்துறை வல்லாண்மையை அழிப்பதையே தமது பிரதானமான மூலோபாயமாக வகுத்திருந்தார்கள். எனினும் சிங்கள படைக் கட்டுமானங்களால் இதனை ஒருபோதும் செய்யமுடியாது என்பதனை பல்வேறு சமர்களில் துட்டகைமுனுவின் மைந்தர்கள் எதிர்கொண்ட படுதோல்விகளால் சிங்கள தலைமைப் பீடமானது உணர்ந்துகொண்டது. எனவே ~புலிகளைப் பலவீனப்படுத்தி பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவருதல்| என்ற புதிய தந்திரோபாயத்தினை கடைப்பிடிப்பதாக சர்வதேசத்திற்குப் பம்மாத்திக்கொண்டு முழு தமிழின அழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் எமது விடுதலைப்போராட்டத்தினை அழிக்க முயலுகின்றது.

உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் இது ஒன்றும் புதிய தந்திரோபாயம் அல்ல. காலம் காலமாக அடக்குமுறை அரசுகளால் பயன்படுத்தப்பட்ட உத்திதான். எனினும் சிலவேளை ராஜபக்ச சகோதரர்களுக்கு இது ஒரு புதிய விடயமாக இருக்கக் கூடும்.

உதாரணமாக வியட்நாமியர்களின் போராட்டம் மிகவும் முனைப்புப்பெற்றுக்கொண்டிரு

அரசில் அங்கம்வகிக்கும் மந்திரிகளிலிருந்து மகிந்தவின் நெருங்கிய உறவினர் மற்றும் ஆலோசகர்கள் இராணுவ தலைமைகள் அனைவரும் அடாவடித் தனத்தை நம்பியே காலத்தை ஓட்டிவருகிறார்கள்.

அக்கிரமமும் அநீதியும் இவ்வாறு கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில் அவர்பக்கத்தில் இருப்பவர்களாலேயே மகிந்தவின் உயிருக்கு ஆபத்துண்டு என்ற உண்மை விரைவில் உணரப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.