Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழீழம்" உருவாவதை சிறிலங்கா அரசு அங்கீகரித்து விட்டதா?: விஜயகாந்த்.

Featured Replies

"தமிழீழம்" உருவாவதை சிறிலங்கா அரசு அங்கீகரித்து விட்டதா?: விஜயகாந்த்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியதன் மூலம் "தமிழீழம்" உருவாவதை சிறிலங்கா அரசு அங்கீகரித்துவிட்டதா? என்று தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறிலங்காவின் தலைநகரான கொழும்பிலிருந்து தமிழர்கள் சிங்கள அரசால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். விடியற்காலை 3 மணிக்கு தட்டி எழுப்பி அரை மணி நேரம் கூட அவகாசம் தராமல் வீட்டைக் காலி பண்ணச் சொல்லி துப்பாக்கி ஏந்திய சிங்கள காவல்துறை தமிழர்களை பேரூந்துகளில் ஏற்றிக்கொண்டு கொழும்பு மாநகரத்திற்கு அப்பால் கொண்டு போய் விட்டுள்ளது. அவர்கள் மீண்டும் கொழும்புக்கு வராமல் இருக்க தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கள அரசு சொல்கின்ற காரணம் கொழும்பில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமானவர்கள் கொழும்பில் உள்ள சில தமிழர்கள் தான் என்று கூறுகிறது. குற்றம் செய்தவர்களை கண்டுபிடிக்க காவல்துறை உள்ளது. குற்றம் செய்யக் கூடியவர்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள உளவுத்துறையும் அரசிடம் உள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தை வெளியேற்றுவது அரசின் கையாலாகாத தனத்தை மட்டும் அல்ல அதனுடைய இனவெறிக் கொள்கையையும் எடுத்துக் காட்டுகிறது.

வெளியேற்றப்பட்ட தமிழர்களின் உடைமைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. அதே நேரத்தில் எந்த ஊருக்கு போய் எப்படி வாழ்க்கை நடத்துவது என்பதும் கேள்விக்குறியாகி விட்டது. இலங்கை குடிமக்கள் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால் தமிழர்கள் கொழும்பு நகரில் தங்க கூடாது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தான் வாழ வேண்டும் என்று சிங்கள அரசு விரட்டுவதன் மூலம் ஒரு வேளை சிறிலங்கா அரசு தமிழீழம் உருவாவதை அங்கீகரித்து விட்டதா?

மருத்துவ வசதிக்காகவும், கல்வி வசதிக்காகவும் கொழும்பில் தங்கியிருந்த அப்பாவி தமிழர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர். பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசே தமிழர்களின் உடைமைகளையும், வாழ்வுரிமையையும் பறிப்பது காட்டுமிராண்டித் தனத்தையே காட்டுகிறது. மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசு தலையிட்டு இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

சிறிலங்கா அரசிற்கு இந்தியா வழங்கிவந்த இராணுவ ஆலோசனைகளின் அடிப்படையில் தான் தமிழர்கள் கொழும்பிலிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டார்கள் என்று அரசுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது. அடிப்படை மனித உரிமைகளை மீறும் இந்நடவடிக்கை இந்தளவுக்கு சர்வதேச எதிர்ப்பைப் பெறும் என்பதை மகிந்தன் கனவிலும் நினைக்கவில்லைப் போலும்.

என்ன இருந்தாலும் முதலாவதாக குரல் கொடுத்தவர் விஜயகாந்தான் அவருக்கு நன்றிகள்

விஐயகாந்திற்கு எமது நன்றிகள்

ஆனாலும் மகிந்தவைப் போல ஓரு அருமையான எருமையான ஐனாதிபதி இனி சீறிலங்காவிற்கு கிடைக்க போவதில்லை.

சிறிலங்கா அரசிற்கு இந்தியா வழங்கிவந்த இராணுவ ஆலோசனைகளின் அடிப்படையில் தான் தமிழர்கள் கொழும்பிலிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டார்கள் என்று அரசுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது. அடிப்படை மனித உரிமைகளை மீறும் இந்நடவடிக்கை இந்தளவுக்கு சர்வதேச எதிர்ப்பைப் பெறும் என்பதை மகிந்தன் கனவிலும் நினைக்கவில்லைப் போலும்.

ஜப்பானின் பாரிய நிதியுதவி, அகாசி புலிகளினுடனான சந்திப்பை இரத்துச் செய்தது போன்றனவும், அகாசி கொழும்பில் நிற்கும்போதே தமிழர்களை வெளியேற்றுவதற்கான துணிவை மகிந்தாவுக்கு அளித்திருக்கும்.

ஜப்பானின் பாரிய நிதியுதவி, அகாசி புலிகளினுடனான சந்திப்பை இரத்துச் செய்தது போன்றனவும், அகாசி கொழும்பில் நிற்கும்போதே தமிழர்களை வெளியேற்றுவதற்கான துணிவை மகிந்தாவுக்கு அளித்திருக்கும்.

ஏனைய நாடுகள் இலங்கையின் மனிதஉரிமை மீறல்களை கண்டித்து நிதிமுடக்கம் செய்தபோது,

நிதி அதிகரிப்பை செய்ததோடு, புலிகளுடனான சந்திப்பை இரத்துச் செய்து விட்டு இராணுவம் கைப்பற்றிய பிரதேசங்களுக்குச் சென்று இராணுவத்தளபதிகள், மற்றும் கொழும்பில் கெலஉறுமய பிக்குகள், ஜே.வி.பி போன்றவற்றை சந்தித்ததன் மூலம் யப்பான் அரசின் முகத்தை வெளிக்காட்டி விட்டார். இவருக்கு இனி வன்னியில் வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகமே!

அகாசியின் சாதானத்தூதுவர் சாயம் வெளுத்து விட்டது!

இனி புதுமுகம் ஒன்றின் வரவை எதிர்பார்க்கலாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜயகாந்துக்கு நன்றி.

மஹிந்தாரின் அராஜாக்கததை அமெரிக்கா, உட்பட பலரும் கண்டிக்கும் போது பாரதம் வாய் மூடி மௌனமாய் இருப்பது பெரும் சந்தேகத்தை உண்டாக்குகிறது.

புரட்சிக்கலைஞனுக்கு நன்றிகள்..

கவுத்த குடத்திலே தண்ணியஊத்தி இன்னா லாகம்கிறேன்..

குடத்தை உதைச்சா திரும்புங்கிறேன்...

தலைவர் இருக்கார்ங்கிறேன்..

இருக்கு மகிந்தாக்கு ஆப்புங்கிறேன்..

கவுத்த குடத்திலே தண்ணியஊத்தி இன்னா லாகம்கிறேன்..

குடத்தை உதைச்சா திரும்புங்கிறேன்...

தலைவர் இருக்கார்ங்கிறேன்..

இருக்கு மகிந்தாக்கு ஆப்புங்கிறேன்..

புரட்சிக்கலைஞனுக்கு நன்றிகள்

நீங்க சொல்லுறது என்னமோ உண்மைதான்...

கடைசியில் இன்னும் சிலர் தமிழ் உணர்வுடன் இங்கே உள்ளனர் என்பதே பெரிய விசயம். விஜயகாந்த சொந்த பணத்தில் பலருக்கு உதியவர், அனைவரும் ஊரான் பணத்தில் அரசியல் நடத்தும்போது, சொந்த பணத்தில் அரசியல் நடத்தும் ஒரே மனிதர்,

வாழ்க அவர் மக்கள் சேவை.

ஆனாலும் மகிந்தவைப் போல ஓரு அருமையான எருமையான ஐனாதிபதி இனி சீறிலங்காவிற்கு கிடைக்க போவதில்லை.

மகிந்த ஏற்படத்திய இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வி. புலிகள் தமிழ் மக்களுக்கு சாதகமான நடவடிக்கையில் உடன் இறங்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.