Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நினைவேந்தலை நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நினைவேந்தலை நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி

1584673327-court-2.jpg
 14 Views

பொலிஸாரின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால், அவர்களைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணித்த நீதிவான் , நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்க மறுத்து கட்டளை வழங்கினார்.

நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகளை எதிர்வரும் 27ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உள்ளபட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் நடத்த தடை விதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காங்கேசன்துறை பொலிஸார் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையை மன்று நேற்றைய தினத்துக்கு திகதியிட்டு ஒத்திவைத்தது. இதனடிப்படையில் மனு மீதான விசாரணை நேற்று, மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது.

பொலிஸாரினால் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்த இலங்கை குற்றவியல் நடபடிக் கோவை 106ஆம் பிரிவின்கீழான சட்ட ஏற்பாடுகளை மீறல் மற்றும் இலங்கை ஜனநாயகச் சோசலிசக் குடியரசினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் கூறப்பட்டதடை செய்யப்பட்ட இயக்கங்களின் சின்னங்கள், கொடிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நிகழ்வுகளை நடத்தினால் மீறுபவர்களை கைது செய்துமன்றில் முற்படுத்துமாறு நீதிவான் கட்டளையில் குறிப்பிட்டார்.

அத்துடன் , பொதுக் கூட்டங்களை நடத்துவதனால் பிரிவின் பிரதேச மருத்துவ அதிகாரியின் அனுமதியுடனயே முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டார். எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான விஸ்வலிங்கம் திருக்குமரன், வி.மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள், இலங்கையின் சட்டதிட்டங்களை மீறமாட்டோம் என வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டளை வழங்கப்பட்டது.

 

https://www.ilakku.org/சட்ட-ஏற்பாடுகளை-மீறாமல்/

 

நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை- சட்டத்தரணி வி.மணிவண்ணன்

1-134.jpg
 60 Views

யாழ்.மேல் நீதிமன்றின் இன்றைய கட்டளை மூலம் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை என மனு தாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு நீதிப் பேராணை மனு யாழ். மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.

”எம்மால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்காக அரச சட்டத்தரணிகளின் விசேட அணி ஒன்று கொழும்பில் இருந்து வந்து முன்னிலையாகி இருந்தனர்

எங்களுடைய விண்ணப்பம் தொடர்பில் அவர்கள் பூர்வாங்க ஆட்சேபனையை தெரிவித்தனர். அதாவது வடமாகாண மேல் நீதிமன்றில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை என்று.

இந்த வழக்கானது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டது எனவும், இவ்வாறான வழக்குகளை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றிலையே தாக்கல் செய்ய முடியும் என்றும் கூறி இந்த வழக்கினை இந்த நீதிமன்றில் எடுத்துக்கொள்ள முடியாது என அவர்களால் தெரிவிக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனையின் அடிப்படையிலையே இந்த வழக்கு விளகப்பட்டது. அது தொடர்பில் மாத்திரமே மன்றினால் கட்டளை ஆக்கப்பட்டு இருந்தது.

அந்த கட்டளையில் மன்று தெரிவித்திருப்பது, இந்த வழக்கின் விடயப் பொருள் தேசிய பாதுகாப்புடன் தொடர்பு உடையது என்பதனால் தமக்கு அதிகாரம் இல்லை என சொல்லியிருக்கிறது. அதனை தவிர வேறு எந்த விடயமும் கட்டளையாக்கப்படவில்லை.

சிலர் கருத கூடும் இந்த கட்டளையானது நினைவேந்தலுக்கு தடையாக உள்ளது என அவ்வாறு எந்த தடையையும் மேல் நீதிமன்று விதிக்கவில்லை.

எமது மனுவில் எதிர் மனு தாரர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் எமக்கு தடை விதிக்க கூடாது என்றே கோரி இருந்தோம். எமது மனு மீதான விசாரணை எதிர் மனு தாரர்களின் பூர்வாங்க ஆட்சேபனையை ஏற்று மனு தள்ளுபடி செய்யப்பட்டதே தவிர நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை ”என்றார்.

அதேவேளை மேல் நீதிமன்றினால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து ஊடகங்களுக்கு பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிக்கையில், இது ஒரு  வரலாற்று தீர்ப்பு எனவும், புலிகளை நினைவு கூறும் எந்தவொரு நிகழ்வையும் பொலிசார் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/நினைவேந்தலுக்கு-தடை-விதி/

மாவீரர் நினைவு கூரல் மனு யாழ். மேல் நீதிமன்றால் தள்ளுபடி

 
1-133-696x398.jpg
 59 Views

மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு மனு யாழ். மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது இ மனு தாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன், தி. அருச்சுனா, வி.திருக்குமரன், செல்வி த.துளசி, திருமதி. க.திருக்குமரன் மற்றும் கே.சஜந்தன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

எதிர் மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்

பிரதிவாதிகள் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/மாவீரர்-நினைவு-கூரல்-மனு/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.