Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெவண்டனுக்குச் சென்ற தீயணைப்பு படை ஏன் நிவ்வெளிக்கு வரவில்லை – உறுப்பினர் ராம் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெவண்டனுக்குச் சென்ற தீயணைப்பு படை ஏன் நிவ்வெளிக்கு வரவில்லை – உறுப்பினர் ராம் கேள்வி

 

இராஜாங்க அமைச்சரின் வெவண்டன் வீட்டுக்குச் சென்ற தீயணைப்புப் படை ஏன் நிவ்வெளி தோட்டத்துக்கு வரவில்லை என தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

new-vevendon.jpg

கடந்த 27 ஆம் திகதி இரவு நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட நிவ்வெளி – தொழிற்சாலைப் பிரிவில் லயன் குடியிருப்பொன்று தீ விபத்துக்குள்ளானதில் 12 குடியிருப்புகளும் முற்றாக எரிந்து நாசமாகின.இதனால் உடைமைகளை இழந்து 50 பேர் வரையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மலையகத்தில் மக்கள் வாழும் குறிப்பாக லயன் குடியிருப்புகள் தீ விபத்துக்குள்ளாவது அடிக்கடி நடந்தேறி வருகின்றது. மின்னொழுக்கே இதற்கான காரணம் என தீர்ப்பும் கிடைக்கின்றது. இவ்வாறான தீர்ப்பு வழமையானதும் கூட. இத்தகைய அசம்பாவிதங்களில் இருந்து மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் தனி வீட்டுத் திட்டமே சிறந்த தீர்வு என பலராலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

127158634_3659794647375119_5223656573667

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த அமைச்சர் திகாம்பரத்தின் கீழ் இயங்கி வந்த மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு இந்த தனி வீட்டுத்திட்டத்தை சிறப்பாகவும் கிரமமாகவும் முன்னெடுத்த வந்ததையும் இவ்விடத்தில் நினைவு கூர விரும்புகின்றேன்.
ஆனாலும் தீ விபத்து ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உரிய பகுதிக்குப் பொறுப்பான உள்ளூராட்சி மன்றங்கள் எடுக்க வேண்டியது அவசியம்.

ஆனால், வழமையாக இடம்பெறும் இவ்வாறான அசம்பாவிதங்கள் குறித்து அதிகாரத்திலுள்ள தரப்பு கண்டும் காணதது போல எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருப்பது கவலையளிக்கிறது.

கடந்த 27 ஆம் திகதி நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட நிவ்வெளி தொழிற்சாலைப் பிரிவில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின் போது தீயணைப்புப் படைகளை வருவிக்க நோர்வூட் பிரதேசசபை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

04-2-300x182.jpg

அன்மையில் இராஜாங்க அமைச்சரின் பூர்வீக வீடு தீ பற்றியதும் நுவரெலியாவியிலிருந்து 34 கிலோமீற்றர் தொலைவிலுள்ள வெவண்டன் தோட்டத்துக்கு தீயணைப்பு படை வருவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 12 குடியிருப்புகளைக் கொண்ட லயன் தொகுதிக்கு யாரும் பொறுப்புக் கூறவில்லை.

தோட்டங்களுக்கு தீயணைப்பு படைகள் சேவையாற்ற முடியாதென்றால் தோட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள அமைச்சரின் வீட்டிற்கு தீயணைப்பு படை எவ்வாறு வருவிக்கப்பட்டது.

தோட்டப் புறங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு சேவையாற்றக் கூடியவாறே உள்ளூராட்சி மன்ற சட்டத் திருத்தம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எனவே பிரதேச சபைகளினூடாக இந்த தீயணைப்பு சேவைகளை பெருந்தோட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்க எந்தத் தடையும் இல்லை.

நுவரெலியா மாவட்டத்தில் அதிக உள்ளூராட்சி சபைகளை தன் வசம் வைத்திருக்கின்ற இ. தொ. கா. எங்களுடைய சபை என மார்தட்டிக்கொள்ளும் சபைத் தலைவர்களும் உப தலைவர்களும் தீயணைப்பு சேவையைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதும் உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பே என்பதை ஏன் உணர மறந்து விட்டனர்.

இனி வரும் காலங்களிலாவது அமைச்சரின் வீட்டுக்கு மட்டும் சேவையாற்றுகின்ற தீயணைப்பு சேவை பெருந்தோட்ட மக்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.
இவ்வளவு காலமும் பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புகள் தீ விபத்தில் சிக்குண்டால் எல்லா உடைமைகளும் இழந்த பின் அனுதாபம் தெரிவிக்கும் நிலைமையே உள்ளது.

அவ்வாறு அல்லாமல் தீயணைப்பு சேவையைப் பெற்றுக்கொடுப்பதோடு அது தொடர்பான விழிப்புணர்வும் மக்களுக்கு வழங்குகின்ற பட்சத்தில் பெருந்தோட்ட மக்களின் உடைமைகள் இழப்பைக் குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்றார்.

வெவண்டனுக்குச் சென்ற தீயணைப்பு படை ஏன் நிவ்வெளிக்கு வரவில்லை – உறுப்பினர் ராம் கேள்வி – Thinakkural

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.