Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மனித உரிமை மீறல் குறித்து பிரித்தானியா கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மனித உரிமை மீறல் குறித்து பிரித்தானியா கவலை

1-24-696x464.jpg
 46 Views

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவமயமாக்கல் தொடர்பாகவும் சிவில் சமூகம் துன்புறுத்தப்படுவது தொடர்பாகவும் ஐக்கிய இராச்சியம் தனது அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்குரிய பணிமனைக்குரிய அமைச்சரான நைஜல் அடம்ஸ் (Nigel Adams) சிறீலங்கா அரசு சிவில் சமூகத்துக்குக் கொடுக்கும் தொல்லைகள் பற்றியும் சிவில் சமூகங்களுக்குரிய பணிகளை தொடர்ச்சியாக இராணுவமயப்படுத்தி வரும் அவர்களது செயற்பாடுகள் தொடர்பாகவும் தமது அரசின் அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிரித்தானியாவின் எதிர்க்கட்சியாக இருக்கின்ற தொழிற்கட்சியின் பாடசாலைகளுக்குரிய நிழல் அமைச்சராகப் பணியாற்றுகின்ற வெஸ் ஸ்ற்றீங் ( Wes Streeting) தொடுத்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது மேற்படி அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

‘சிறீலங்காவில் இராஜபக்ச அரசு, ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் சிறீலங்கா மேற்கொண்ட தீர்மானத்திலிருந்து விலகியிருக்கும் பின்னணியில், மேற்படி மனித உரிமைகள் ஆணையத்தில் நாங்கள் ஓர் புதிய தீர்மானத்தைக் கொண்டுவந்து வரலாற்று ரீதியாக சிறீலங்கா அரசுகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதற்கு முதல் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும், அதே நேரத்தில் சிறீலங்காவின் தற்போதைய அரசு மேற்கொண்டு வருகின்ற மனித உரிமை மீறல்களைத் தட்டிக்கேட்கவும் வேண்டிய தலைமைத்துவத்தை வழங்குமா? என்று வெளிநாட்டு விவகாரங்களுக்கான செயலரைக் கேட்கிறேன்.’ என்று பிரித்தானியாவின் எதிர்க்கட்சியாக இருக்கின்ற தொழிற்கட்சியின் பாடசாலைகளுக்குரிய நிழல் அமைச்சராகப் பணியாற்றுகின்ற வெஸ் ஸ்ற்றீங் ( Wes Streeting) கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலாக   ஆடம்ஸ் பதில் அளிக்கையில்,’மதிப்புக்குரியவர் எழுப்பிய விடயம் தொடர்பாக கேள்வி எழுப்ப அவருக்கு உரிமை இருக்கிறது. அதே வேளையில் தமிழருக்கான அனைத்துக்கட்சிக் குழுவில் அவரும் அவரது சகாக்களும் மேற்கொண்டு வரும் பணிகளை நான் பாராட்டுகின்றேன்.

மிகவும் முக்கியமான இவ்விடயத்தை எப்படிச் சிறப்பான விதத்தில் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக, நாங்கள் எங்கள் பன்னாட்டுப் பங்காளிகளுடனும் மனித உரிமைகள் ஆணையத்துடனும் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றுவோம். சிறீலங்கா விவகாரங்களுக்குப் பொறுப்பான விம்பிள்டனைச் சேர்ந்த அஹ்மட் பிரபு சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சரை நவம்பர் 5ம் திகதி சந்தித்த போது, சிவில் சமூகத்துக்கு அவர்கள் கொடுக்கும் தொல்லைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகள் இராணுவயமாக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் இனனும் பல விடயங்கள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார்.

சிறீலங்காவின் அரசுடன் நாங்கள் மேற்கொண்டு வரும் கலந்துரையாடல்களிலும் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்துடன் கடந்த பெப்ரவரி, ஜூன், செப்ரெம்பர் ஆகிய மாதங்களில் நாங்கள் மேற்கொண்ட கலந்துரையாடல்களிலும் மனித உரிமைகள் ஆணையத்தின் செயற்பாடுகள் தொடர்பான எங்களது ஆதரவை நாங்கள் வெளிப்படுத்தியிருக்கிறோம்.’ என்றார்....

 

https://www.ilakku.org/இலங்கை-மனித-உரிமை-மீறல்-க/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஹர சிறைச்சாலை விவகாரம்- மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

 
1-23-696x348.jpg
 45 Views

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது உயிரிழந்த கைதிகளின் உடல்களைப் பிரேத பரிசோதனை முடியும் வரை தகனம் செய்ய வேண்டாம் என்று இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மஹர சிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்தின் போது உயிரிழந்த கைதிகள் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்களா? இல்லையா? என பிரேத பரிசோதனை முடிவும் வரை தகனம் செய்ய வேண்டாம் என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

சிறைச்சாலையில் கைதிகளின் போராட்டத்திற்கும் அதன் பின்னர் ஏற்பட்ட மோதல்களுக்கும், அமைதியின்மைக்கும் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், சிறைச்சாலையில் கூட்ட நெரிசல் , கொரோனா தொற்று பரவல் குறித்த பயம் மற்றும் அதற்கு எதிராக மேற் கொண்ட பிரசாரம் ஆகிய மூன்று காரணங்களே என அதன் ஆணையாளர் ரமணி முத்தெடுவேகம தெரிவித்தார்.

அத்துடன், நவம்பர் 29 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு சிறைச் சாலைக்கு இரண்டு முறை சென்று விசாரணையை மேற்கொண்டு அதன் முதற்கட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

மஹர சிறைச்சாலை உள்ளிட்ட சிறைகளில் நெரிசலைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறை கைதிகளின் சுகாதாரம் மற்றும் சிகிச்சை குறித்து கவனம் செலுத்துதல் மற்றும் புதிய கைதிகளைச் சிறைச்சாலைக்கு அனுமதிக்கும் போது அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும்.

கைதிகள் மத்தியில் அச்சத்தைக் குறைக்க கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட அனைத்து கைதி களுக்கும் தனி சிகிச்சை மற்றும் வசதிகளை வழங்குவது.

அத்துடன், உயிரிழந்த, காயமடைந்த மற்றும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து கைதிகளின் குடும்பங்களுக்கும் துல்லியமான தகவல்களை வழங்கு வதோடு, உணவு, நீர், மின்சாரம் மற்றும் மருந்து ஆகிய வற்றைத் தொடர்ந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட சர்வதேச நீதி ஆணையம், இந்த விவகாரத்தில் முழுமையான, சுயாதீனமான விசாரணையை நடத்த வேண்டும்.

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ள சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும். சிறிய குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவிக்கும் சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும்” என  வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/மஹர-சிறைச்சாலை-விவகாரம்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.