Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

‘இலங்கையில் இன சுத்திகரிப்பு’?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘இலங்கையில் இன சுத்திகரிப்பு’?

இலங்கைப் பேரினவாதத்தின் குரூரமுகம் மேலும் ஒருமுறை வெளிப்பட்டிருக்கிறது. தமிழர்களை வெட்டிக்கொன்று, ‘‘இங்கே தமிழன் கறி கிடைக்கும்’’ என்று எழுதி வைத்த ஜூலைப் படுகொலைகள் நடந்து இருபத்து நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. இருந்தாலும் அந்தப் பேரின வாதத் துக்கு இன்று வரையில் யாராலும் முடிவுரை எழுத முடியவில்லை. அந்த நெருப்பு தமிழர்களின் ரத்தத்தை பெட்ரோலாக்கி மேலும் மேலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிக்கிறது என்பதுதான் நிஜம்.

அண்மையில் கொழும்பு நகருக்குள் தங்கியிருக்கும் ஏதுமறியா அப்பாவித் தமிழர்களை கைது செய்து பலவந்தமாக இலங்கைப் போலீஸார் வெளியேற்றி உள்ளனர்.

மருத்துவம் செய்து கொள்ளவந்த முதியோர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்பி வருகின்ற தமது உறவினர்களை வரவேற்க வந்தவர்கள், விசா வாங்குவதற்காக வந்தவர்கள், திருமணம் செய்து கொள்ள வந்த ஒரு பெண் என சகலபேர்களையும் பேருந்துகளில் ஆடு மாடுகளைப் போல அடைத்து போர் நடந்து கொண்டிருக்கும் தமிழர் பகுதிகளுக்கு கொண்டு சென்று அனாதரவாக இறக்கி விட்டுத் திரும்பி இருக்கிறார்கள். அங்குள்ள சில தொண்டு நிறுவனங்கள்தான் அவர்களுக்கு இடமும், உணவும் கொடுத்து பாதுகாத்து வருகின்றன.

கொழும்பில் பேட்டை என்ற பகுதியில் சுமார் முந்நூறு பேரை பேருந்தில் அனுப்புவதற்காக அடைத்து வைத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தாமே விரும்பி முன்வந்தவர்களை மட்டுமே அழைத்துச் சென்றதாக சிங்கள போலீஸ் சொல் கிறது. ஆனால், அதனைப் பச்சைப் பொய் என்கிறார்கள், இப்படி வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.

சர்வதேச நியதிகளுக்கு விரோத மான இந்த ‘இன சுத்திகரிப்பு’ நடவடிக்கையை அமெரிக்கா, நார்வே, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உலக நாடுகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. ‘‘இது இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஒப்பானது’’ என இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே மிகக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

கொழும்பிலிருந்து பலவந்தமாக தமிழர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தும்படி ‘மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்’ என்ற அமைப்பு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததையட்டி, சிங்கள போலீஸின் இந்த நடவடிக்கைக்கு தற்போது இலங்கை உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

‘‘இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு குடிமகனும் இலங்கையின் எந்தப்பகுதியிலும் வாழ் வதற்கான உரிமை உள்ளது’’ என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகள் 12, 13 மற்றும் 14&ன்படி இலங்கையின் பிரஜைகளுக்கு அந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வசிப்பதற்கான உரிமையென்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் விளைவாக இப்போது வெளியேற்றப்பட்டத் தமிழர்களை மீண்டும் கொழும்பு நகருக்குக் கொண்டு வரும் முயற்சியில் சிங்கள போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச கண்டனத்தைக் கண்டு அஞ்சிய இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே இப்போது போலீஸ் உயர் அதிகாரி மீது விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

‘ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் தவிர வேறு எவரும் இருக்கக்கூடாது’ என்ற எண்ணத்தோடு மற்ற இனத்தவரைப் பலவந்தமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையே ‘இன சுத்திகரிப்பு’ என்று அழைப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விதிகளின்படி இது மனித குலத்துக்கு எதிரான குற்றமாகும். ஐ.நா. சபையும் இதை இன அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு இணையான குற்றமென்று வகைப்படுத்தியிருக்கிறது.

இலங்கை உச்ச நீதிமன்றம் இப்படி இடைக்காலத் தடை வழங்கும் என சிங்கள ஆட்சியாளர்கள் எதிர்பார்த் திருக்க மாட்டார்கள். தமது அரசியல் நோக்கத்துக்கு அனுசரணையான தீர்ப்புகளையே இதுகாறும் வழங்கி வந்த நீதிமன்றம் இப்போது தடை ஆணை பிறப்பித்திருப்பது அவர் களுக்கு வியப்பாகத்தான் இருக்கும்! தற்போது வழக்கு தொடுத்துள்ள மாற்று கொள்கைகளுக்கான நிலையம் என்ற அமைப்பு, அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையன்றில், இலங்கை உச்ச நீதிமன்றம் அரசியல் மய மாகி வருவது குறித்தும், நீதித்துறையின் சுதந்திரம் சீரழிந்து வருவது பற்றியும் ஆதாரங்களோடு எடுத்துக்காட்டிக் கவலை தெரிவித்திருந்தது. 1987&ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய&இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததற்கு எதிராக இலங்கையின் வடக்கு&கிழக்கு பிராந்தியங்களைப் பிரித்து இலங்கை உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபரில் தீர்ப்பு வழங்கியதையும் அந்த அறிக்கை கண்டித்திருந்தது. அது மட்டுமின்றி சுனாமி மறுசீரமைப்புக்காக வந்த பணத்தைத் தனது சொந்த வங்கிக் கணக்கில் போட்டுக்கொண்டாரென்று தற்போதைய இலங்கை அதிபர் ராஜபக்ஷே மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ராஜபக்ஷேவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கியதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.