Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட எமது பிரதேசங்களை தொடர்ந்து இவ்வாறு தானா வைத்திருக்கப் போகின்றீர்கள்?: கலையரன் எம்.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட எமது பிரதேசங்களை தொடர்ந்து இவ்வாறு தானா வைத்திருக்கப் போகின்றீர்கள்?: கலையரன் எம்.பி.

எமது பிரதேசங்கள் தொடர்ந்து முப்பது வருடங்களாக யுத்தம் நடந்த பிரதேசங்கள், முப்பது வருடங்களாக அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட பிரதேசங்கள். அந்தப் பிரதேசங்களைத் தொடர்ச்சியாக இவ்வாறான நிலைமையில் தானா வைத்திருக்கப் போகின்றீர்கள்? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

IMG_2866-300x232.jpg

நேற்று செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நெடுஞ்சாலைகள், கிராமிய வீதிகள், ஏனைய உட்கட்டமைப்பு, போக்குவரத்து, கூட்டுறவு அமைச்சுகளின் குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய நாட்டைப் பொறுத்தமட்டில் நாங்கள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நீண்டகாலமாக ஓர் அழிவைச் சந்தித்தவர்கள். தற்போது அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திகள் தொடர்பில் பேசப்படுகின்றன. அந்த அடிப்படையில் எமது பிரதேசம் சார்ந்த விடயங்களை இவ்விடத்தில் பேசுவது பொருத்தமாக இருக்கும்.

அந்த அடிப்படையில் அம்பாறை மாவட்டத்திலே கல்முனை, நாவிதன்வெளி என்ற பிரதேச செயலகப் பிரிவுகளை இணைக்கின்ற ஓர் இடமாக கிட்டங்கி என அழைக்கப்படும் தாம்போதி ஒன்று இருக்கின்றது. இது காலத்துக்குக் காலம் மழை பெய்கின்ற போது ஒரு கிலோமீற்றர் வீதி அளவுக்கு ஐந்து அடி உயரத்துக்கு மேல் நீர் எழுவது வழமை. இதன்போது பல உயிரிழப்புகளும் அப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

கல்முனை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது. நாவிதன்வெளி பிரதேசம் விளைநிலங்களின் இடமாக இருக்கின்றது.

நாவிதன்வெளியில் உள்ள விளைபொருட்களை சந்தைப்படுத்தும் இடமாகக் கல்முனை இருக்கின்றது. அதனடிப்படையில் நாளாந்தம் கல்முனைக்குச் செல்வது மாத்திரமல்ல. நகர்ப் புறத்தில் இருந்து அதிகளவானவர்கள் அரச உத்தியோகத்தர்களாகவும் இருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் அந்த கிட்டங்கி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.

இதனை அடிப்படையாக வைத்து இப்பகுதியில் ஒரு பாலம் அமைத்துத் தரப்பட வேண்டும் என நாங்கள் நீண்ட காலமாக முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தோம். ஆனால் அங்கு ஒரே ஒரு சிறிய பாலம் மாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சொல்ல முடியாத பெருந்துயரங்களை எமது மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அந்த இடத்துக்குப் பொருத்தமானதொரு பாலத்தை அமைத்து அவ்விரு பிரதேசங்களும் இயல்பாக இயங்குவதற்கு இந்த உயரிய சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக இந்த நாட்டிலே ஆயிரம் கிலோமீற்றர் கொங்கிறீட் பாதைகள் செப்பனிட்ட காலகட்டத்தில் கூட எமது பிரதேசங்களில் அவ்வாறான அபிவிருத்திகள் நடைபெறவில்லை. உண்மையில் அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் அந்த அந்த அமைச்சுகளில் இருந்த அமைச்சர்கள் அந்த அந்த பிரதேசங்களையே குறிப்பாக அபிவிருத்தி செய்திருக்கின்றார்கள்.

குறிப்பாக எமது கிராம பிரதேசங்கள் அந்த அபிவிருத்தியிலே புறந்தள்ளப்பட்டிருக்கின்றன. தற்போது எங்களுடைய பிரதமர் பேசுகின்ற போது ஒரு லட்சம் கிலோமீற்றர் காப்பெட் வீதிகள், பத்தாயிரம் வேலைவாய்ப்புகள் என்பன தொடர்பில் கூறியிருந்தார்கள். ஆனால் எமது பிரதேசங்களில் ஒரு வேலைத்திட்டமாவது ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்றால் அது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இவ்வாறான நிலைமைகளைக் களைய வேண்டும்.

ஏனெனில் இந்தப் பிரதேசம் தொடராக முப்பது வருடங்களாக யுத்தம் நடந்த பிரதேசம், முப்பது வருடங்களாக அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட பிரதேசம். அந்தப் பிரதேசத்தை தொடராக இவ்வாறான நிலைமையில் தானா நீங்கள் வைத்திருக்கப் போகின்றீர்கள்? இந்த நிலைமை மாற்ற வேண்டும். அந்த மக்களையும் இந்த நாட்டின் பிரஜைகளாக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த உயரிய சபையிலே ஒரு குழுவை அமைத்து எமது பிரதேசத்தில் இருக்கும் குறைகளை அறிய வேண்டும்.

நாங்கள் தொடராக இந்தச் சபையிலே எமது மக்களின் குறைகளைச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. வீதிப் போக்குவரத்து மாத்திரமல்லாமல், ஏனைய அபிவிருத்திகளிலும் எமது மக்கள் பின்தள்ளப்படுகின்றார்கள். ஐ ரோட் திட்டத்திலும் கூட நாங்கள் மாகாண சபையில் இருக்கும் போது கல்முனைப் பிரதேசத்தில் பல்வேறு வீதிகளைத் தெரிவு செய்தோம். ஆனால் தற்போது அநேகமான வீதிகள் அந்தத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டவையாகக் காணப்படுகின்றன.

பெரியநீலாவணை, பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை என்று சொல்லப்படுகின்ற எமது பிரதேசங்களின் அபிவிருத்திகள் பெயர்ப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு அபிவிருத்திகளே காணாத நிலைமை இருக்கின்றது. திருக்கோவில், ஆலையடிவேம்பு, வீரமுனை போன்ற பிரதேசங்களிலும் இவ்வாறான நிலைமைகளே காணப்படுகின்றன.

குறிப்பாக எமது தமிழ்ப் பிரதேசங்களில் பல கிராமிய வீதிகள் செப்பனிடப்பட வேண்டி இருக்கின்றன. இவ்வாறு உட்கட்டமைப்பு அதிகளவில் தேவைப்படுகின்ற பிரதேசங்களாக எமது பிரதேசங்கள் இருக்கின்றன. இந்த நிலைமை மாற வேண்டும்.

இங்கு ஆளுந்தரப்பில் இருந்து பலர் பேசும் போது தங்கள் தங்கள் பிரதேசங்களில் வீதிகள் செப்பனிடப்பட்டது பற்றி கூறியிருந்தீர்கள். அது சந்தோஷமான விடயம். ஆனால் எமது பிரதேசங்களில் வீதிகள் செப்பனிடப்பட்டிருக்கின்றனவா என்பது கேள்விக்குறியான விடயமே. எமது ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீதிகள் எமது பிரதேசங்களிலே செப்பனிடப்பட வேண்டி இருக்கின்றது.

அது மாத்திரமல்ல பஸ் போக்குவரத்து சம்மந்தமாகவும் பேச வேண்டியவனாக இருக்கின்றேன். நாவிதன்வெளி மத்தியமுகாம் 02 என்று சொல்லப்படுகின்ற இடத்தில் பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட்டது. கல்முனைக்குச் செல்வதற்கும் அதேபோன்று அம்பாறைக்குச் செல்வதற்கும் அமைக்கப்பட்டிருந்தது.

அவை சீராக இயங்க முடியாத நிலையில் இருக்கின்றன. அதே போன்று திருக்கோவில், விநாயகபுரம் பிரதேசத்திலே அங்கிருந்து கல்முனைக்கும், பொத்துவில்லுக்குமாக பஸ் போக்குவரத்துகள் இடம்பெற்றன. இவை சீராக இயங்குவதற்கும் இவ்வுயரிய சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது மக்களின் தேவைகள் அதிகமாக இருக்கின்றன. எதிர்காலத்தில் உரிய முறையில் அந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அந்தப் பிதேசங்களும் இந்த நாட்டிலே வளம்மிக்க பிரதேசங்களாக உருவாக்குவது மாத்திரமல்லாமல், அந்த மக்களும் இந்த நாட்டின் பிரஜைகளாக வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட எமது பிரதேசங்களை தொடர்ந்து இவ்வாறு தானா வைத்திருக்கப் போகின்றீர்கள்?: கலையரன் எம்.பி. – Thinakkural

த.தே.கூ எம்.பியின் இரகசியம் நாமலால் அம்பலம்

 

 

பா.நிரோஸ் 
நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று (08) கலந்துக்கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், அரசாங்கத்தின் ஒரு கிலோமீற்றர் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் ஒரு கிலோமீற்றர் பாதைக்குகூட செப்பனிடப்படவில்லை எனக் குற்றஞ்சுமத்தினார். 

மேலும், அம்பாறை மாவட்ட கிராமப் பிரதேசங்கள், அபிவிருத்திப் பணிகளில் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றிய அமைச்சர் நாமல் ராஜப்க்ஷ,''2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளை, அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தடுத்து நிறுத்தியிருந்தது. வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள வீதிகளை உள்ளிடக்கியே, ஒரு இலட்சம் கிலோமீற்றர் பாதை அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும். எந்தவொரு விதத்திலும், வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை புதிய அரசாங்கம் கைவிடவில்லை.

 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை, தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும்' என்றார். 

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், 'தவராசா கலையரசன் கூறுவது என்னவென்றால், இவரது பிரதேசத்தில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் காபட் பாதை அபிவிருத்தித் திட்டம் அரசியல் ரீதியாகவே முன்னெடுக்கப்படுகிறது. எனவே, இவரது பிரதேசத்தில் உள்ள பாதைகளில், 10 -15 கிலோமீற்றர்களையேனும் புனரமைத்துத் தாருங்கள்' என்றார்.

 இதற்குப் பதிலளித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, 'பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க வரும்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனையும் அழைத்து வாருங்கள். அப்போதுஇ பிரதமர் அதனை செய்துகொடுப்பார். தனியாக வரவேண்டாம். அவரையும் அழைத்து வாருங்கள்' என்றார். 

Tamilmirror Online || த.தே.கூ எம்.பியின் இரகசியம் நாமலால் அம்பலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.