Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை

 

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று(வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது.தொழிநுட்ப கோளாறு காரணமாக கை உயர்த்தும் அடிப்படையில் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.இதற்கமைய ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 97 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக விவாதங்கள் இடம்பெற்ற நிலையில், நேற்றைய வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்திருந்தனர்.நாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-31/

 

  • கருத்துக்கள உறவுகள்

வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு – கூட்டமைப்பும், இந்தியாவும் ஆடிய நாடகம்

 
625.500.560.350.160.300.053.800.900.160.
 146 Views

சிறீலங்கா அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது கட்ட வாசிப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. கடந்த வியாழக்கிழமை (10) இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனும் கலந்துகொள்ளவில்லை.

எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ. கஜேந்திரன் ஆகியோர் அதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

பாதுகாப்புக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தை தமக்கு வாக்களித்த மக்களுக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை.

ஊடகவியலாளர் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூர் பிரமுகர் ஒருவரை தொடர்புகெண்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திக்கு எதிரானது அல்ல. வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கு ஆதரவானது என்பதற்காக கடந்த ஆட்சிக் காலத்தின் போதும் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் மாகாணசபை தேர்தலை தொடர்ந்து பிற்போட்டுவரும் அரசின் வரவு-செலவுத் திட்டத்தை தமது கட்சி மௌனமாக ஆதரித்துள்ளது என்பதை அவர் கூறவில்லை. எனினும் மாகாணசபைக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் உண்மையில் என்ன இடம்பெற்றது என்பதை அவர் இந்த கலந்துரையாடலில் கூறிவிட்டார். வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவு ஏற்கனவே புதுடில்லியில் எடுக்கப்பட்டு விட்டதுடன், அது தொடர்பில் கூட்டமைப்புக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சிறீலங்காவில் உள்ள இந்தியா கவுஸ் இல் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்திருந்தார். அது மட்டுமல்லாது கூட்டமைப்புக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான சந்திப்பு ஒன்றும் விரைவில் இடம்பெறவுள்ளது. இந்தியா மீண்டும் தனது பழைய கொள்கையை பயன்படுத்துகின்றது. தமிழ் மக்களின் அரசியலை பயன்படுத்தி சிறீலங்கா அரசுக்கு செய்தியை அனுப்ப முற்பட்டுள்ளது.

எனவே தமிழ் அரசியல் கட்சிகளின் பேச்சுக்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்களும், தேசியச் செயற்பாட்டாளர்களும் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டம் ஏற்பட்டுள்ளது என அரசியல் அவதானி ஒருவர் இலக்கு மின்னிதழுக்கு தெரிவித்துள்ளார்.

 

 

https://www.ilakku.org/வரவு-செலவுத்திட்ட-வாக்கெ/

 

 

 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவு ஏற்கனவே புதுடில்லியில் எடுக்கப்பட்டு விட்டது

spacer.png

Edited by Kavi arunasalam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.