Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொல்பொருள் என்ற ரீதியில் மக்களின் காணி மட்டக்களப்பில் கபளீகரம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொல்பொருள் என்ற ரீதியில் மக்களின் காணி மட்டக்களப்பில் கபளீகரம்?

 

 

(வ.சக்திவேல்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் என்ற ரீதியிலும், வனப் பாதுகாப்பு என்ற ரீதியிலும் மக்களின் பூர்வீகக் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு வருவதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர். ஜி.பி.ஆர். தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பிலே இருந்து கொண்டு மட்டக்களப்பு மக்களின் பூர்வீக இடங்களை அடையாளமிடும் அதிகாரிகள்; மாவட்டத்திலுள்ள கிராமசேவையாளர் முதல் அரசாங்க அதிபர் வரையிலான எந்தவித அதிகாரிகளுக்கும் தெரியாமல் கொழும்பிலிருந்து வந்து தொல்பொருட் களுக்குரிய இடம் எனவும், வன இலாகாவுக்குரிய இடம் எனவும் அடையாளப்படுத்தி விட்டுச் செல்வதாகவும் அவ்வாறு அவர்களால் அடையாளப்படுத்தப்படும் இடங்களுக்குள் பொதுமக்கள் யாரையும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்து வதாகவும் பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.

batticaloa-land-7.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங் களை மையப்படுத்தி ஒவ்வொரு பிரதேசத்திலும் தலா 35 இற்கு மேற்பட்ட இடங்கள் இவ்வாறு தொல் பொருட்களுக்குரிய இடங்களாக அடையாளப்படுத்தப்படுவதாக வும் அறிய முடிகின்றது.

batticaloa-land-3.jpg
இது இவ்வாறு இருக்க தமிழ் மக்கள் வருடா வருடம் தமது கால்நடைகளை மேய்த்துவரும் மேச்சல்தரைப் பகுதிகளையும், வனப் பாதுகாப்பு என்ற போர்வையில் உரிய திணைக்களத்தினர் அப்பகுதிகளை அடையாளப்படுத்தி எல்லைக் கற்களை நட்டு உரிய பகுதிக்குள் கால்நடைகளை மேய்க்க வேண்டாம் எனவும், அவ்வாறு தவறி ஒரு கால்நடையாவது அப்பகுதிக்குள் சென்று மேய்ந்தால் அதனைக் கட்டி வைத்து நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான நிதி தண்டப்பணமாக செலுத்தி வருவதாகவும், பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

batticaloa-land-13.jpg
மட்டக்களப்பு மாவட்டம் விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைப் பிரதான தொழிலாகக் கொண்டு மக்கள் தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் தமது வாழ்வாதாரத்துக்கும், வாழ்விடங்களுக்கும் தகுந்த அதிகாரிகள் உந்துசக்தியளித்து, விருத்தி செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும். மாறாக ஜீவனோபாயத்தையும், வாழ்விடங்களையும் இல்லாமல் செய்து அரச சொத்துக்கள் என்ற போர்வையில் காணியை கபளீகரம் செய்வது எந்த வகையில் நியாயமானது? என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

batticaloa-land-12.jpg
மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான மயிலத்தமடு மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினரால் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இப்போது ஐயாயிரம் ஏக்கர் வரை அபகரிக்கப்பட்டு அங்கிருக்கும் தமிழ் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர்.

இது தொடர்பில் கிழக்கை மீட்போம் என மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்காது அரசாங்கத்துக்குப் பயந்து ஒளிந்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 28.11.2020 அன்று மாதவனை, மயிலத்தமடு பகுதிக்குச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பண்ணையாளர்கள் மத்தியில் இவ்வாறு தெரிவித்தனர்.

மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட காணிகளில் பரம்பரை பரம்பரையாக தமது கால்நடைகளை வளர்த்து எமது மாவட்டத்தின் எல்லைகளையும் பாதுகாத்து வருகின்ற பண்ணையாளர்கள் இந்த அரசாங்கத்தின் துணையுடன் பெரும்பான்மைச் சமூகத்தினரால் அடித்து விரட்டப்பட்டு வருகின்றனர்.

இதற்கு முன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் அப்பகுதிக்கு வந்த பெரும்பான்மை யினத்தைச் சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில் 2015ஆம் ஆண்டு நல்லாட்சிக் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசென்று குறித்த அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்தியதோடு, எமது மாவட்டத்தின் எல்லையை விட்டே வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

நல்லாட்சியில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முட்டுக்கொடுத்ததாக சிலர் தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்தார்கள். அந்த முட்டுக்கொடுப்பு எமது மக்களின் சுதந்திரமான செயற்பாட்டுக்கும், எமது மண்ணை பதுகாப்பதுக்குமே என்பதை இப்போது அறிவார்கள்.

அண்மைக்காலமாக வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வருவதோடு பண்ணையாளர்களையும் வெளியேற்றி வருகிறார்கள். இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கூட தீர்மானம் எடுப்பதற்கு இராஜாங்க அமைச்சர், அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் ஆகியோர் அஞ்சுகிறார்கள். இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் இவர்களால் எடுக்க முடியவில்லை.

batticaloa-land-6.jpg

தற்போது கடந்த இரண்டு நாட்களாக அந்தப் பகுதியில் உள்ள பண்ணையாளர்களை வெளியேறுமாறும், மாடுகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் கோரி அந்தப் பகுதியில் சட்ட விரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள்; சிலர் பண்ணையாளர்களை அச்சுறுத்தி வருவதோடு கால்நடைகளையும் துன்புறுத்தி வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இந்த அபகரிப்புக்கு எதிராகவும், பண்ணை யாளர்கள் தாக்குப்படுவதற்கு எதிராகவும் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது. இதற்கான ஆவணங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

batticaloa-land-5.jpeg
பறிபோகும் மட்டக்களப்பின் எல்லைப் பிரதேசம்? அத்து மீறும் பௌத்த பிக்கு… பின்னணியில் யார்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு தலைமையிலான சிலர் அத்துமீறி அபகரித்து துப்புரவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் பண்ணையாளர்கள் இணைந்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளர், ஏறாவூர் பற்று ஈரளக்குளம் கிராம சேவையாளர், கரடியனாறு பொலிஸார் ஆகியோரை சம்பவ இடத்திற்குச் சென்று சந்தித்து கலந்துரையாடியதோடு காணி அபகரிப்பில் ஈடுபடும் பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

batticaloa-land-11.jpg

இதன் போது அம்பாறை மாவட்டத்தின் தெகியத்தகண்டிய பிரதேசத்தில் இருந்து வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் 106 குடும்பங்களுக்கு 5 ஏக்கர் காணி வீதம் விவசாய செய்கைக்குத் தர வேண்டும் என்றும் நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.

குறித்த பகுதிக்குப் பொறுப்பான கிராமசேவையாளர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளர், பொலிஸார் இணைந்து, அவர்களிடம் நீங்கள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து வந்து மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது, உங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் காணி தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

குறிப்பாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் வலய முகாமையாளராக வந்திருந்த அதிகாரி, நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளுக்குள் உள்ள காணிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளீர்கள். இதில் இருந்து வெளியேறுங்கள் நாங்கள் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக அம்பாறை மாவட்டத்துக்குள் காணி தருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அதனை ஏற்றுக்கொள்ளாத காணி அபகரிப்பாளர்களில் ஒருவர் அந்த இடத்திலிருந்து நேரடியாக கிழக்கு மாகாண ஆளுநருடன் தொலைபேசியில் பேசி மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளரிடம் தொலைபேசியைக் கொடுத்து ஆளுநருடன் கலந்துரையாடக் கூறியுள்ளார்.

இதன் போது ஆளுநர் கட்டாயம் குறித்த சிங்களக் குடும்பங்களுக்கு விவசாயம் செய்ய காணி வழங்க வேண்டும் என்று அதிகாரியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் காணி வழங்குவதாக வலய முகாமையாளர் ஆளுநரிடம் தெரிவித்துள்ளார்.

இருந்த போதும் அதற்கு இணங்க மறுப்பு தெரிவித்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் எங்களுக்கு இந்த மாவட்டத்தில்தான் காணி வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன் பின்னர் குறித்த இடத்திலிருந்து அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் வெளியேறியுள்ளனர்.

batticaloa-land-1.jpg

ஆனால் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் அங்கிருந்து வெளியேறியதன் பின்னர் அங்கு இருந்த பலர் காணிகளை அளந்து பிரித்து அடைத்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்களுடன் அண்மையில் கலந்துரையாடியதன் படி குறித்த பகுதிக்குப் பொறுப்பான மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளரை அனுப்பி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம் பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் அவர் கலந்துரையாடியதன் பின்னர் காணி அபகரிப்பாளர்களை சந்தித்தும் பேசியுள்ளார்.

ஆனால் சட்டவிரோதக் காணி அபகரிப்பாளர்களை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியால் வெளியேற்ற முடியவில்லை. இதற்கு பின்னால் அரசியல் நிகழ்சி நிரல் ஒன்று உள்ளதைக் காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கால்நடைகளை மேய்க்கும் மேய்ச்சல் தரைப் பகுதியில் விவசாயம் செய்தால் அதை கால்நடைகள் சென்று சாப்பிடும் போது இரண்டு தரப்புக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் தமிழ், சிங்கள இன முரண்பாடுகள் ஏற்படக்கூடும்.

batticaloa-land-8.jpg
எனவே இந்த விடயம் குறித்து அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்தி தங்களது மேய்ச்சல் தரைக் காணியை காப்பாற்றித் தருமாறு பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது இவ்வாறு இருக்க மயிலத்தமடு, மாதவனை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு, மாதவனைப் பகுதியிலுள்ள பண்ணையாளர்களை 13.12.2020 அன்று மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு மீண்டும் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

மூன்று தலைமுறைகளாக தாங்கள் குறித்த பகுதியில் கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், தற்போது தங்களை அங்கு வரும் பெரும்பான்மையினர் அங்கிருந்து செல்லுமாறு அச்சுறுத்துவதாகவும் மாடு வளர்க்கும் தமது பகுதிகளை உழுது பயிர்செய்வதற்கு முயற்சிப்பதாகவும் பண்ணையாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த விடயத்தில் தங்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் எனவும் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்டத்தில் இவ்வாறு தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தும் இடங்களையும், ஏனைய காணி அபகரிப்புச் செய்யும் இடங்களையும் நான் நேரடியாகச் சென்று பார்வையிட்டு வருகின்றேன். கொழும்பிலிருந்து கொண்டு மட்டக்களப்பு மக்களின் பூர்வீக நிலங்களை மாட்டத்திலுள்ள அரச நிர்வாகத்திற்குத் தெரியாமல் எல்லையிட்டு, கையகப்படுத்துவதென்பதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். தமிழர்களின் பூர்வீக நிலங்கள், வழிபாட்டுத் தலங்கள், மேய்ச்சல் தரைப் பகுதி என்பன அவற்றுள் அடங்குகின்றன. மயிலத்தமடு, மாதவனை ஆகிய பிரதேசங்கள் எமது கால்நடைப் பண்ணையாளர்கள் மேச்சல்தரைக்காக காலாகாலமாக பயன்படுத்தி வருகின்ற ஒரு பகுதியாகும்.

ஆனால் இவ்வாறு காணி அபகரிப்புகளில் ஈடுபடுபவர்களால் அங்குள்ள பண்ணையாளர்களை அச்சுறுத்துவது, மிரட்டுவது, கால்நடைகளைச் சுடுவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இதற்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. இவ்விடயம் குறித்து நாம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றோம் என கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

batticaloa-land-3.jpeg

எது எவ்வாறு அமைந்தாலும் தமது பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து தற்போது வரைக்கும், தமது வாழ்வாதாரத்திற்காகவும், கால்நடை வளர்ப்புக்காகவும், விவசாயத்திற்காகவும், குடியிருப்புகளுக்காகவும், அமைந்துள்ள நிலத்தை அரசியல் அதிகாரத்தின் திணிப்பின் பெயரில் கையகப்படுத்தும் செயற்பாடுகளையும், குறித்த நிலப்பரப்புகளை அரச சொத்துக்கள் என்ற போர்வையில் கையகப்படுத்தி வேறு மாவட்டத்தினருக்குப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளையும், கட்சி பேதங்களைக் கடந்து மக்களிடம் கைகூப்பி வாக்குப்பெற்ற மக்கள் பிரதிநிதிகள் முன்னின்று செயற்பட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையே மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

 

https://thinakkural.lk/article/98102

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.