Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகாரப்பகிர்வுக்கு வந்துள்ள அச்சுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரப்பகிர்வுக்கு வந்துள்ள அச்சுறுத்தல்

-என்.கண்ணன்

 ‘அதிகாரப் பகிர்வை சவாலுக்குட்படுத்தி விட்டு, சாதிய முரண்பாட்டைக் கிளறி, தப்பித்துக் கொள்ளும்,  அளவுக்கு யாழ்ப்பாணத்து அரசியல் சென்றிருக்கிறது’

மாகாண சபைகளை ஒழித்து விட்டு உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்து,  தற்போதைய அரசாங்கத்திடம் வலுவாக உள்ள நிலையில், இதே அரசாங்கம் தான், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களையும் பறித்தெடுக்கும் காரியத்தில் இறங்கியிருக்கிறது.

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை மதிக்காமல், செயற்படும் மத்திய அரசின் நிர்வாக அமைப்புகள், இதற்கு சவால் விடும் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட ஆரம்பித்துள்ளன.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் நடந்துள்ள சம்பவம் இவ்வாறானது தான். அச்செழுப் பகுதியில் உள்ள, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைப்பதற்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்திருந்தது.

spacer.png

இந்த திட்டத்தை செயற்படுத்துவற்கு முன்னோடியாக, பதாதையும் திறந்து வைக்கப்பட்டது. இது பிரதேச சபையயின் ஒப்புதலைப் பெறாமல், முன்னெடுக்கப்படும் திட்டம் என்பதைச் சுட்டிக்காட்டி, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பிரதேச சபை தவிசாளரால், தொலைநகல் மூலம் கடிதம் அனுப்பியும் பதிலளிக்கப்படவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து, அந்த பதாதை பிரதேச சபை தவிசாளரின் உத்தரவுக்கமைய, அகற்றப்பட்டது.

இதற்குப் பின்னர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன்,  மேலிடத்து அரசியல்வாதிகளின் அழுத்தங்கள் காரணமாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இரண்டு முறை தவிசாளர் நிரோசிடம் வாக்குமூலம் பெற்ற பொலிசார்,  அடுத்ததாக, அவரைக் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்தனர்.

அரசின் நடவடிக்கைகளைப் புரிந்து கொண்டு, சுதாகரித்துக் கொண்ட தவிசாளர், மல்லாகம் நீதிமன்றத்தை நாடி முன்பிணை அனுமதி பெற்றுக் கொண்டு, கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்திருக்கிறார். அவர் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக் கொண்ட மறுநாள், தூண்டி விடப்பட்ட ஒரு பகுதி மக்கள், தவிசாளருக்கு எதிராக சிறியளவிலான ஊர்வலம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

தவிசாளர் பிரதேச அபிவிருத்திக்கு எதிராக செயற்படுவதாக  குற்றம்சாட்டும் வகையிலும்,  அபிவிருத்தியைத் தடுக்க வேண்டாம் என்று கோரும் வகையிலும், அவர்கள் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

அத்துடன், சாதிய முரண்பாட்டை ஏற்படுத்தும் விதத்திலும் சிலர் சுலோக அட்டைகளை தாங்கியிருந்தனர். அதிகாரப் பகிர்வை சவாலுக்குட்படுத்தி விட்டு, சாதிய முரண்பாட்டைக் கிளறி, தப்பித்துக் கொள்ளும், அளவுக்கு யாழ்ப்பாணத்து அரசியல் சென்றிருக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதேச சபைக்கும் மத்திய அரசுக்கும் தான் பிரச்சினை. ஆனால், இந்த விவகாரத்தை திசை திருப்பவும், மக்களின் உணர்வுகளை தவறாக திருப்பும் நோக்கிலும், தான், இவ்வாறான மலினத்தனமான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

spacer.png

பிரதேசசபைக்கு ஒதுக்கப்பட்ட வீதியை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் அபிவிருத்தி செய்யும் போது, உரிய அனுமதியை பிரதேச சபையிடம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், எதேச்சாதிகார அரசாங்கத்தின் நிறுவனங்கள் அவ்வாறான அனுமதிகளை பெற வேண்டியது அவசியமில்லை என்ற தோரணையிலேயே செயற்பட முனைகின்றன. அதற்கு பிரதான காரணம், அரச நிறுவனங்களை வழிப்படுத்தும் அரசியல்வாதிகள் தான். பிரதேச சபைக்குரிய வீதியை புனரமைக்க பிரதேச சபையின் ஒப்புதலைப் பெறாமல், நடவடிக்கையில் இறங்கியது முதல் பிரச்சினை - தவறு.

இதனைச் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்குமாறு கோரிய போது, உரிய நேரத்தில் பதிலளிக்காமல், பிரச்சினை தீவிரமான பின்னர், முன் திகதியிட்ட கடிதம் அனுப்பி தப்பிக்க முயன்றது வீதி அபிவிருத்தி அதிகார சபை. இந்த சிக்கலில் இன்னொரு அதிகார அத்துமீறலும் நடந்தேறியிருக்கிறது.

எந்தவொரு விளம்பர பதாதைகளையோ, பலகைகளையோ, நிறுவுவதாயின், அந்தந்த உள்ளூராட்சி மன்றத்தின் தவிசாளர் அல்லது பொறுப்புவாய்ந்த அதிகாரியின் அனுமதியைப் பெறவேண்டும் என்று உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்களை வரையறுக்கும் சட்டங்கள் கூறுகின்றன.

இது தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்களுடன், வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் இதனைக் கண்டுகொள்வதில்லை. இருக்கின்ற அதிகாரங்களைக் கூடப் பயன்படுத்த துணிவதில்லை. ஏன் வம்பு என்று ஒதுங்கிப் போகவே, எத்தனிக்கின்றன.

இவ்வாறான கண்மூடித்தனமான போக்குத் தான், பல சமயங்களில் இருக்கின்ற அதிகாரங்களைக் கூட இழக்கின்ற நிலைக்குக் கொண்டு போய் விடுகிறது.

விளம்பர பதாதைகளை அமைப்பதற்கு முன்னர், பிரதேச சபையின் அனுமதியை வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரியிருக்கவில்லை.

இவ்வாறான நிலையில், குறித்த விளம்பர பதாதையை அகற்றிய தவிசாளருக்கு எதிராக அரசாங்க சொத்தை சேதப்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அவரை பிணையில் வெளிவர முடியாமல், விளக்கமறியலில் தடுத்து வைக்கவும் முயற்சிக்கப்பட்டது.

ஆனால், வாழைச்சேனை பிரதேச சபையின் வாயிற் கதவை, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும், தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான சந்திரகாந்தன் தலைமையில், அவரது கட்சியினரே, பிரதேச சபையின் கதவை உடைத்துக் கொண்டு, உள்ளே சென்று கூட்டத்தை நடத்தியிருந்தனர்.

அங்கு அரசாங்க சொத்தான பிரதேச சபைக் கதவுகள் உடைக்கப்பட்டதை பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அரசாங்க சொத்தை சேதப்படுத்துவது என்பது. அதனை யார் செய்கிறார்கள் என்பதை பொறுத்தே, குற்றமா இல்லையா என்ற தீர்மானிக்கப்படுகிறது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் அரசாங்க சொத்தை சேதப்படுத்தியது, தண்டனைக்குரிய குற்றம் எனின், அரசாங்க சொத்தை தவறாக பயன்படுத்துவதும் குற்றமே.

இந்தக் குற்றச்சாட்டில் பல முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் கூட சிறைக் கம்பிகளை எண்ணியிருக்கிறார்கள். இப்போதும் சிலர் உள்ளே இருக்கிறார்கள்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் ஒரு அரசாங்க சொத்தை சரியான முறையில்- சட்டத்துக்கு உட்பட்ட வகையில் பயன்படுத்தியிருக்க வேண்டும். அது தான், அரசாங்க சொத்தை சரியாக பயன்படுத்தும் வழிமுறை.

சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் அரசாங்க சொத்து ஒன்றைக் கையாண்டு விட்டு, அதனை சேதப்படுத்தியதாக முறையிடுவது சரியானதா என்ற கேள்வி எழுகிறது.

இந்த பதாதை விவகாரத்தில் அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் உள்ளன. அதையும் தாண்டி நிற்பது அதிகாரப்பகிர்வு குறித்த சர்ச்சை தான்.

இந்த சர்ச்சையை மறைப்பதற்கும், தாங்கள் தப்பிக் கொள்வதற்கும், மக்களை தவறாக வழிநடத்துவதற்கும், சாதிய முரண்பாட்டைக் கிளறி விட்டு குளிர்காய முயன்றிருக்கிறார்கள் அரசியல் புள்ளிகள்.

தமிழ் மக்களைப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தவதற்கு அண்மைக்காலங்களில் அரசியலில் இவ்வாறான ஆயுதங்கள் கையாளப்படுகின்றன.

தமிழ்த் தேசியத்தின் மூலம் ஒருமைப்படுத்தப்பட்டிருந்த மக்கள் கூட்டத்தை, சிதறடிக்க சிங்களப் பேரினவாதத்துக்கு துணை போகின்றவர்கள் இதுபோன்ற பலவீனங்களை பயன்படுத்திக் கொள்ள முனைகின்றனர்.

இவ்வாறான சூழல் அதிகாரப்பகிர்வுக்கு மாத்திரம் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அல்ல, தமிழ் மக்களின் ஒற்றுமை, உரிமைப் போராட்டம், எல்லாவற்றுக்குமே விடுக்கப்பட்டுள்ள சவால், அச்சுறுத்தல் தான்.

போருக்குப் பிந்திய சூழலில் தமிழ் மக்களை நசுக்குவதற்கும், தமிழர் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கும் இதுபோன்ற பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன. அதற்காக பலர் களமிறக்கியும் விடப்பட்டுள்ளார்கள்.

தனிநாட்டுக்காக போராடிய தமிழ் மக்கள், சமஷ்டிக்காக, மாகாணசபைக்காக 13 ஆவது திருத்தத்துக்காக போராடி இப்போது, பிரதேச சபைகளின் அதிகாரங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் போராட வேண்டிய நிலை உருவாகியிருப்பது துரதிஷ்டம்.

தமிழ்ப் பிரதேசங்களின் மீது முழுமையாக தனது அதிகாரத்தை நிலைப்படுத்த அரசாங்கம் எத்தனையோ உத்திகளை கையாளுகிறது.

இவ்வாறான உத்திகளுக்கு துணை போகிறவர்களாக, கருவிகளாக தமிழர்களே இருப்பது தான் தமிழினத்தின் சாபக்கேடு.

 

https://www.virakesari.lk/article/96912

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.