Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு ஐ.நா.மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள்: அனைத்துலக மன்னிப்புச் சபை வலியுறுத்தல்

Featured Replies

இலங்கைக்கு ஐ.நா.மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள்: அனைத்துலக மன்னிப்புச் சபை வலியுறுத்தல்

இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களை அனுப்ப வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

அனைத்துலக மன்னிப்புச் சபையின் செயலாளர் நயாகம் ஐரின் கான் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வர அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட முயற்சியில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு மகிந்த வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கொல்லப்பட்டுள்ளனர். ஆட்டிலறி குண்டுத் தாக்குதல்கள், விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல், பழிவாங்கல் ஆகியவற்றின் மூலம் பொதுமக்கள்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளக இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை இருமடங்காக- 80 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். படுகொலைகள் மற்றும் பொதுமக்கள் கடத்தல் சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகளும் படையணிகளில் சிறார்களை சேர்ப்பதற்கு கருணா குழுவும் பொறுப்பாவர்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளுக்கு உள்ளாகும் அச்சமான சூழ்நிலை இலங்கையில் நிலவுகிறது.

திருகோணமலையில் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கொழும்பிலிருந்து ஜூன் 7ஆம் நாள் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். விடுதலைப் புலிகளின் போர் நடவடிக்கைகள் மற்றும் சிறார் படை சேர்ப்பிலிருந்து தப்பிய அப்பாவி மக்களே இந்நடவடிக்கைக்குள்ளாகியுள்

  • தொடங்கியவர்

இலங்கையின் மனித உரிமை நெருக்கடி; ஐ.நா.வை களத்தில் இறக்குமாறு கோரிக்கை -ஜனாதிபதியை கேட்கிறது மன்னிப்புச் சபை

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக `கள நடவடிக்கை'யை மேற்கொள்வதற்கு நிறைவேற்றதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா.வை வரவழைக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்திருக்கிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை வியாழக்கிழமை ஜெனீவாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஐரீன் கான், இலங்கையில் மனித உரிமை நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி தனிப்பட்ட முன் முயற்சியை மேற்கொள்வது அவசியமென வலியுறுத்தியிருக்கிறார்.

நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தி ஐ.நா.வை ஜனாதிபதி ராஜபக்‌ஷ வரவழைக்க வேண்டும். அதன்மூலம் வலுவான முறையில் மனித உரிமைகள் தொடர்பான கள நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நாடு பூராவும் சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் பாரதூரமான மனித உரிமை துஷ்பிரயோகங்களை அடையாளம் காணவும் அவை தொடர்பாக விசாரணை நடத்தவும் இந்தப் பலம்வாய்ந்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினரால் உதவ முடியும் என்றும் ஐரின் கான் தெரிவிக்கிறார்.

கடந்த ஒரு வருடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமற் போயிருப்பதாகவும் மேலும் ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கண்மூடித்தனமான ஆட்லறி குண்டு வீச்சுக்கள், புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், பதில் பழிவாங்கல் கொலைகள் என்பவற்றால் பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கிடையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இடம்பெயர்ந்த மக்கள் தொகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 80 ஆயிரம் பொது மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

`இலங்கையில் அச்ச சூழ்நிலை ஆதிக்கம் செலுத்துகின்றது. மனித உரிமைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். தாக்குதலுக்குட்படுகின்றனர். இம்சைப்படுத்தப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர். மனிதாபிமானப் பணியாளர்களும் இதற்கு விதி விலக்கல்ல' என்று ஐரின் கான் கூறியுள்ளார்.

பாரபட்சமான முறையில் கொழும்பிலிருந்து ஜூன் 7 இல் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர். இது மோதல்களில் சிக்கியுள்ள சாதாரண தமிழ் மக்களுக்கு உரிய முறையில் பாதுகாப்பு இல்லாத தன்மையையே வெளிப்படுத்துகின்றது.

`கடந்த 18 மாதங்களாக அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்கள், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் நீதி வழங்குவதற்குமான நடைமுறைகளில் முழுமையாக போதாத தன்மை உள்ளதையே தெளிவாகக் காட்டுகின்றது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தடுப்பதிலும் தோல்வி நிலையே காணப்படுகின்றது' என்றும் ஐரின் கான் சுட்டிக்காட்டியுள்ளார்.

`கடந்த வருடம் ஜனாதிபதியால் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவும் சிறப்புரிமையடிப்படையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை குறைப்பதில் தோல்வி கண்டுள்ளது. உண்மையிலேயே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழுவினரால் இந்த ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை மற்றும் வினைத்திறன் தொடர்பாக சவால் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசமடைந்துவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை துஷ்பிரயோகங்களை கண்காணிக்கவும் விசாரணை செய்யவும் சுயாதீனமான அமைப்பின் பிரசன்னம் மிகவும் முக்கியமானதாகும்.

ஆதலால், மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்துடன், உடனடியாக ஜனாதிபதி ராஜபக்‌ஷ பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் மனித உரிமை மீறல்களை கண்காணித்து விசாரணை நடத்துவதற்கு சர்வதேச கள நடவடிக்கையை போதிய அதிகாரத்துடன் உருவாக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்துகின்றது.

குறிப்பிடத்தக்கதும் சுயாதீனமானதும் வெளிப்படைத் தன்மை கொண்டதும் முழுமையான வளங்களைக் கொண்டதுமான சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் கள நடவடிக்கையானது தேசிய மட்டத்திலான நிறுவனங்கள் பதிலளிக்கும் கடப்பாடுடையனவாக செயற்படுவதற்கு வலுவூட்டும் என்பதுடன் நீதியையும் கொண்டுவரும். இந்த நடவடிக்கை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் விரிவுபடுத்தப்படுவது அவசியம்' என்றும் ஐரின் கான் கூறியுள்ளார்.

அதே சமயம், `அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் போதாதவை என்பது கவலைக்குரியதாகும். இதனை மாற்றியமைப்பதற்குரிய சந்தர்ப்பம் ஜனாதிபதி ராஜபக்‌ஷவுக்கு உள்ளது' என்றும் சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

http://www.thinakkural.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.