Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முககவசங்கள் இன்றி தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை ஊழியர்கள் அட்டகாசம்- குடி நீரை துண்டித்ததால் மக்கள் அவதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முககவசங்கள் இன்றி தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை ஊழியர்கள் அட்டகாசம்- குடி நீரை துண்டித்ததால் மக்கள் அவதி

1-43-696x376.jpg
 51 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், எந்த வித முன் அறிவிப்பும் இல்லாது முக கவசங்கள் இன்றி வீட்டு வளாகத்திற்குள் நுழையும் தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை ஊழியர்கள் குடிநீர் இணைப்பை துண்டித்து வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கொரோனா வைரஸ் தாக்கம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக தினம் தினம் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எந்த வித மனிதாபிமானமும் இன்றி மட்டக்களப்பு மாவட்ட நீர்வழங்கல் அதிகாரசபை, பணம் செலுத்தாது இருந்த பல சமூர்த்தி உதவி பெறும், வறுமையான குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டித்து வருகின்றனர்.

இவ்வாறு குடி நீர் இணைப்பை துண்டிக்க வரும் மட்டக்களப்பு மாவட்ட நீர்வழங்கல் அதிகாரசபை ஊழியர்கள் எந்த வித சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளையும் கைக்கொள்ளாது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து குடிநீர் இணைப்பை துண்டித்து வருகின்றனர்.

3-1.jpg

மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. சுகாதார நடைமுறைகளை மீறி அவசர அவசரமாக குடிநீர் இணைப்பை துண்டித்து வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு புறம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்,மறு புறம் கொரோனா அச்சம் காரணமாக பல குடும்பங்கள் வருமானத்தை இழந்து தவிக்கும் நிலையில், குடி நீரை துண்டித்து விட்டு இரண்டு நாட்களுக்குள் முழுக் கட்டணத்தையும் செலுத்தினால் தான் குடி நீர் இணைப்பை தருவோம் என்று கூறுவது இந்த அனர்த்த காலத்தில் எந்த வகையில் நியாயம்.

2-1.jpg

வீடுகளில் உள்ள கிணறுகள் எல்லாம் வெள்ளத்தில் நிறம்பி பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் குடிநீரை துண்டிக்க வேண்டாம் அரைவாசி பணத்தை செலுத்துகிறோம் மீதியை பின்னர் செலுத்துகிறோம் என்று வறுமையில் உள்ள குடும்பங்கள் கெஞ்சிய போதும் “அதெல்லாம் எங்களுக்கு தெரியாது அரசாங்கம் ஓடர் போட்டுள்ளது அதைதான் நாங்கள் செய்வோம்” என்று எந்த வித மனிதாபிமானமும் இன்றி குடிநீரை துண்டித்து விட்டு சென்றுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு, பொதுமக்களின் வாழ்வாதார குறித்து செயற்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா செயலணி இது போன்ற மனிதாபிமானம் அற்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய செயற்பாட்டிற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகின்றது. மாவட்ட அரசியல் தலைவர்கள் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகின்றார்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

https://www.ilakku.org/?p=38758

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.