Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலைக்கழ வளாகத்தில்.. முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்கும் ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுத் தூபி அமைக்கும் ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பம்! - GTN

யாழ்.பல்கலைக்கழ வளாகத்தில்.. முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்கும் ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபடம் வரையும் பணி நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது.

மாணவர்களின் மேற்பார்வையோடு பொறியியலாளர், பல்கலைக்கழக கட்டட பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை பிரிவினரால் நில அளவுத்திட்ட பிரமாணங்கள் போன்றன கணிக்கப்பட்டன.

இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபியை அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

http://athavannews.com/யாழ்-பல்கலைக்கழ-வளாகத்தி/

 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கட்டி முடிக்கும் போது  வாழ்ததுவோம்

  • கருத்துக்கள உறவுகள்
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்து அழிக்கப்பட்டது தொடர்பாக யாழ் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா மற்றும் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரத்தினம் விக்கினேஸ்வரன் ஆகியோரை தொடர்பு கொண்டு CMR THAMIL FMஇன் கருத்துக்களம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன் முன்னாள் துணைவேந்தர் எப்பொழுது வேண்டுமானலும் தான் கலந்து கொள்வதாக சொன்னார் ஆனால் யாழ் பல்கலைகழக துணைவேந்தர் தன்னால் இப்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்த போது அவர் தெரிவித்த கருத்துக்கள்.
தமிழ் மக்களின் உணவுர்களை தாங்கி நிற்க்கின்ற நினைவு தூபியை இடிக்க எவ்வாறு அனுமதி வழங்கினீர்கள்?
சிறீசற்குணராஜா:மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணம்
மேலிடத்தில் உள்ளவர்கள் தூபி இடிப்பு விடயத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லையென தெரிவித்து விட்டார்களே ?
சிறீசற்குணராஜா:குற்றம் செய்தவர்கள் யார் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள்.
அப்படியானால் மேலிடத்தில் உள்ளவர்களை திருப்த்திபடுத்த நீங்கள் எடுத்த தனிப்பட்ட முடிவா?
சிறீசற்குணராஜா:நிச்சயமாக இல்லை அழுத்தம் காரணமாக இந்த நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.
உங்களுக்கு நிபந்தனையோடு துணைவேந்தர் பதவி வழங்கப்பட்டதா?குறிப்பாக தூபி இடிப்பு விடயம் முதன்மையாக சொல்லப்பட்டதா?
சிறீசற்குணராஜா:நிச்சயமாக இல்லை 40 ஆண்டுகள் பொதுச்சேவையில் இருக்கின்றேன் அப்படி ஒரு தேவை எனக்கில்லை.
இந்த விடயத்தில் நீங்கள் அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டீர்கள் இந்த விடயத்தை பொறுமையாக கையாண்டிருக்கலாம் அல்லவா?
சிறீசற்குணராஜா: ம்ம்ம் ........
இந்த விடயம் தொடர்பாக நான் எல்லோருடனும் ஆலோசித்து இறுதி முடிவெடுத்தேன் தூபி இடிக்கப்பட்டபோதும் நான் யாழ் பல்கலைகழத்தில்தான் இருந்தேன்.
உங்கள் செயலுக்கு வலுச்சேர்க்கும் விதமாக இது சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கருத்து தெரிவித்துள்ளீர்கள்?
சிறீசற்குணராஜா:ஆம் இது முறையாக அனுமதி பெற்று கட்டப்படவில்லை.
ஆனால் பல்கலைகழகத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு பல்கலைகழக நிர்வாகமே பொறுப்பு என சொல்லப்படுகின்றதே ?
சிறீசற்குணராஜா: ஆம் இந்த கருத்து எனது அடுத்த கட்ட நகர்வுக்கு வலுச்சேர்க்கும் இந்த விடயத்தில் நான் யார் மீதும் குற்றம் சொல்ல விரும்பவில்லை முழுப்பொறுப்பையும் நான் ஏற்க்கிறேன்.
உங்களுடைய ஒலிப்பதிவு ஒன்று உலாவருகின்றது அதில் இந்த போராட்டத்தை எப்படி நிறுத்துவது என்பது குறித்து எனக்கு தெரியும் என சொல்லி உள்ளீர்கள்?
சிறீசற்குணராஜா:தூபி உடைப்பு நடந்தபின்னர் நெருக்கடியான நிலை ஏற்பட்டது என்மீது அக்கறை கொண்ட மாணவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு பேசிய போது நான் நல்லவிதமாக தெரிவித்த கருத்து வேறுவிதமாக பிரதிபலித்திருக்கின்றது
அழுத்தம் காரணமாக முள்ளிவாய்க்கால் தூபி உடைக்கப்பட்டதாக சொன்னீர்கள் இப்போது மீண்டும்அழுத்தம் காரணமாக தூபிக்கான அடிக்கல் நாட்டியிருக்கின்றீர்கள் இது மாணவர்களுடைய போரட்டத்தை நிறுத்துவதற்க்கு நீங்கள் மேற்க்கொண்ட முயற்ச்சியா?
சிறீசற்குணராஜா:நிச்சயமாக இல்லை என்னுடைய மாணவர்களுடைய நலனின் அக்கறை கொண்டு இந்த முடிவுக்கு வந்தேன் சர்வதேச அழுத்தமும் ஒருகாரணம் எல்லாவற்றையும் விட என்னுடைய மாணவர்கள் எனக்கு முக்கியம்.
தூபிக்காண அடிக்கல் நாட்டப்பட்டதோடு நின்றுவிடுமா?
சிறீசற்குணராஜா:நிச்சயமாக இல்லை யாழ் பல்கலைகழகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் என்னோடு இருக்கின்றார்கள் கூடியவிரைவில் தூபி முறையாக கட்டி முடிக்கப்படும்.
அனுமதி பெறவேண்டும் மேலிடத்தில் இருந்து அழுத்தம் வருகிறது என காரணம் சொல்லி தூபி தொடர்பான வேலைகள் நிறுத்தப்படக்கூடிய நிலை வந்தால்?
சிறீசற்குணராஜா:நிச்சயமாக இல்லை...... எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கும் நன்றி.
கூடியவிரைவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.
Image may contain: 1 person, sitting
 
cmr.fm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.