Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிக்கான போராட்டத்தில் நாம் தமிழ் மக்களுடன் நிற்போம் – பிரித்தானியா எதிர்க்கட்சித் தலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதிக்கான போராட்டத்தில் நாம் தமிழ் மக்களுடன் நிற்போம் – பிரித்தானியா எதிர்க்கட்சித் தலைவர்

 
Keir-Starmer-696x308.jpg
 18 Views

அனைத்துலக விசாரணை தொடர்பான முன்னெடுப்புக்களில் பிரித்தானியா தொடர்ந்து பயணிக்கும். இந்த விடயத்தில் தொழிற்கட்சி தமிழ் மக்களுக்கு துணையாக நிற்கும் என பிரித்தானியா தொழிற்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான கேயர் ஸ்ராமெர் தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் தைபொங்கல் தொடர்பில் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பிரித்தானியாவின் தொழில் கட்சி சார்பாக நான் தமிழ் மக்களுக்கு தை பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ் மக்கள் பிரித்தானியாவுக்கு அதிகளவான பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர், மருத்துவத்துறை, கல்வி மற்றும் பொருளாதார துறைகளில் அவர்களின் பங்களிப்பு அதிகமானது.

கோவிட்-19 நெருக்கடியிலும் அவர்கள் பிரித்தானியாவுக்கு மருத்துவத்துறையில் அதிக பங்களிப்புக்களை வழங்கிவருகின்றனர். பலர் அதில் பங்கெடுத்து மரணத்தையும் தழுவியுள்ளனர்.

எனவே அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. தமிழ் மக்கள் சிறீலங்காவில் பெருமளவான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். நீதிக்கான அவர்களின் போராட்டத்தில் பிரித்தானியா துணைநிற்கும். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு வெளியேறியது கவலை தருகின்றது.

எனினும் அனைத்துலக விசாரணை தொடர்பான முன்னெடுப்புக்களில் பிரித்தானியா தொடர்ந்து பயணிக்கும். இந்த விடயத்தில் தொழிற்கட்சி தமிழ் மக்களுக்கு துணையாக நிற்கும் என அவர் தெரிவித்துள்ளதுடன். தை பொங்கல் வாழ்த்துக்கள் என தமிழிலும் கூறி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=39492

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனநல்லிணக்கத்திற்கு நினைவாலயங்கள் முக்கியமானவை – கனடா பிரதமர்

 
justin-696x452.jpg
 10 Views

இனங்களின் நல்லிணக்கப்பாட்டுக்கு நினைவாலயங்கள் முக்கியமானவை என கனடா பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற தமிழர் திருநாளாம் தைபொங்கல் விழாவை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“கனடாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தினர் இந்த வாரம் தைப்பொங்கலைக் கொண்டாடுகிறார்கள்.

“வழக்கமாக இந்த நான்கு நாள் பண்டிகையின்போது குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்றுசேர்ந்து அமோகமான விளைச்சலுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இனிப்பான பொங்கலையும் பகிர்ந்துகொள்வார்கள். கோவிட்-19 இன் பரவலைத் தடுப்பதற்காக நாம் பொதுச் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதால் இவ்வாண்டில் நிலைமை மாறுபட்டதாக இருக்குமென்றாலும், இந்தப் பண்டிகையின் முக்கிய விடயங்களான சமாதானம், சமூகம் ஆகியவற்றை முதன்மைப்படுத்துவதற்கு மக்கள் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பார்களென்பது எனக்குத் தெரியும்.

“ஜனவரி மாதம் கனடாவில் தமிழ் மரபுரிமைத் திங்களாகவும் விளங்குகிறது. மேம்பட்டதும், அதிகம் நியாயமானதும், அனைவரையும் அதிக அளவில் உள்வாங்கியதுமான நாட்டை உருவாக்குவதில் தமிழ்க் கனேடியர்களின் பங்களிப்பை இந்த மாதத்தில் நாம் நினைவுகூருகிறோம். கனடாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள உயிர்த்துடிப்புள்ள தமிழ்ச் சமூகத்தின் வரலாறு, மீண்டுவரும் வல்லமை, பலம் என்பன குறித்து அறிந்து கொள்ளுமாறு அனைத்துக் கனேடியர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்தும், அதை மீண்டும் அமைக்குமாறு கோரியும் கனடா முழுவதும் உள்ள தமிழ்க் கனேடியர்கள் அண்மையில் ஒன்று திரண்டதை நாம் கண்டோம். மீளிணக்கத்திற்கு நினைவுகூருதல் முக்கியமானதென்பதை இது எம் அனைவருக்கும் நினைவுபடுத்துகிறது.

“கனடாவிலும், உலகெங்கிலும், தைப்பொங்கலைக் கொண்டாடும் அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக, துணைவியார் சோஃபியும் நானும் அமைதிக்கும், உடல்நலத்துக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். –இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.”

 

https://www.ilakku.org/?p=39488

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.