Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புத்தர் சிலையும் நினைவுத் தூபியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிலையும் நினைவுத் தூபியும்
============================

யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் இடித்து அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இருந்த இடத்தில் மீண்டும் இடித்த கைகளே அடிக்கல் நாட்டப்பட்ட நாளில் இருந்தே இன்னமும் அது கட்டப்படுமா? இல்லையா? என்ற விவாதம் ஒருபுறமும் அது நினைவுத் தூபியாகக் கட்டப்படாது. மாறாக அது சமாதானத் தூபியாக கட்டப்படும்; அதன் மூலம் தூபி எதற்காகக் கட்டப்பட்டதோ அந்த நோக்கம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு விடும் என்ற இன்னொரு விவாதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இந்த விவாதங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கிளிநொச்சியில் யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட செய்தி வேறு வேறு அனுமானங்களையும் சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. இந்தச் செய்திகளை சில தமிழ் ஊடகங்களே தவறாகக் கையாண்டதையும், தவறான தகவல்களை மக்களிடையே பரப்பியதையும் பார்க்க முடிந்தது. 

1. ஒரு இணைய பத்திரிகை “நேற்று கிளிநொச்சி வளாகத்தில் இருந்த புத்தர் சிலை உடைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னரே தமிழ் மாணவர்கள் யாழ் பல்கலைக் கழகத்தில் கட்டியிருந்த நினைவுத் தூபி உடைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத் தக்கது” என்று செய்தி வெளியிட்டிருந்தது. 

2. இன்னொரு இணையப் பத்திரிகை, கிளிநொச்சி வளாகத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதைக் குறிப்பிட்டதோடு இந்த புத்த கோவில் பல இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஒன்று என்றும் ஏனைய மதத்து மாணவர்கள் சிறு கொட்டில்களியே தமது கடவுள் அடையாளங்களை வைத்து இன்றுவரை வழிபட்டு வருவதாகக் குறிப்பிட்டிருந்தது.  

இந்த இரண்டு செய்திகளையும் வாசிக்கும் ஒரு பொதுமகன் என்ன செய்தியைப் பெற்று கொள்வார்? இந்த இரண்டு வகையான செய்திகளும் அவற்றை வாசிப்பவர்களை ஒரு திசையிலேயே இழுத்துச் செல்கின்றன. முதலாவது செய்தி, நினைவுத் தூபி உடைக்கப்பட்டதன் எதிரொலியே கிளிநொச்சி வளாக சம்பவம் என்ற தகவலையும் இரண்டாவது செய்தி, இலங்கை அரசின் பாரபட்சம் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்களின் வணக்கத் தலங்களை அமைத்துக் கொடுப்பதிலும் தொடர்கிறது என்ற தகவலையும் மறைமுகமாகச் சொல்லும் வகையிலேயே அமைந்துள்ளன. 

நினைவுத் தூபி உடைக்கப்பட்டதற்கு மறுநாளே உபவேந்தர் மீண்டும் அதனைக் கட்டித் தருவதாக வாக்களித்ததுடன் அடிக்கல்லும் நாட்டிய நிலையில் மாணவர் போராட்டத்தைக் கைவிட்டிருந்தனர். இந்த நிலையில் அதற்குப் பழிவாங்கும் வகையில் கிளிநொச்சி வளாகத்தில் உள்ள புத்தர் சிலையை உடைக்கும் அளவிற்கு பல்கலைக் கழக மாணவர்கள் அவ்வளவு முட்டாள்களா? புத்தர் சிலையை உடைப்பதன் மூலம் தமது கோரிக்கை நிறைவேறாதென்று அவர்களுக்குத் தெரியாதா?

ஆனால் இந்தத் புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட விவகாரத்தை மிகச் சாதரணமான ஒன்றாகக் கருதி புறக்கணிக்கவும் முடியாது. இன்று இலங்கையில் உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வடக்கில் இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கில் இது திட்டமிடப்பட்டே இடிக்கப்பட்டதா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது. இலங்கையில் புத்தர் சிலை சேதமாக்கப்படுவது இதுதான் முதல் தடவையல்ல. கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திலும் மாவனல்ல பகுதியிலும் வேறு பல பகுதிகளிலும் இவ்வாறு புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டிருக்கின்றன. 

குறிப்பாக மானவல்ல பகுதியில் புத்தரின் சிலைகள் சேதமாக்கப்பட்ட நிலையில் பதினைந்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் சந்தேகத்தில் கைதாகி இன்றுவரை தடுப்புக் காவலில் இருக்கிறார்கள். ஆனால் அண்மையில் மாவன்னல்ல, ஹிகுல பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் சிங்களவர் என்றும், அவர் மதுபோதையில் இருந்ததாகவும் அத்துடன் அவர் தெருவோரம் உள்ள வணக்கத்தலங்களின் உண்டியல்களை உடைத்துப் பணம் திருடுபவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தக் கைதும் செய்தியும், தமிழர்களும் முஸ்லிம்களும்தான் புத்தர் சிலைகளைச் சேதமாக்குகின்றனர் என்ற பிரச்சாரத்தினை கேள்விக்கு உள்ளாகிய ஒரு நிகழ்வாகும். இந்த நிகழ்வுகளின் அடிப்படையிலேயே நாமும் கிளிநொச்சி புத்தர் சிலை சேதமாக்கப்பட்டதை நோக்க வேண்டும். 

இது ஒருபுறம் இருக்க, இரண்டாவது செய்தியில் குறிப்பிட்டது போல கிளிநொச்சி வளாக புத்தர் கோவில் பல இலட்சக் கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கலாம். ஆனால் அந்தப் பத்திரிகை தவறாக வழிநடத்த முயற்சிப்பது போல இது கிளிநொச்சி வளாகத்தில் யாழ் பல்கலைக் கழகமோ இலங்கை அரசோ கட்டிக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. இது இராணுவம் இந்த வளாகத்தில் இருந்த காலத்தில் அவர்களால் கட்டப்பட்டதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படி இருக்கையில் சிங்கள மாணவர்களுக்கு மட்டும் அதிக பணச் செலவில் வழிபாட்டுத் தலம் கட்டிக் கொடுக்கப்பட்டதான வியாக்கியானம் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது. 

இவ்வாறான செய்திகளைப் பார்க்கும்போது தமிழ் ஊடகங்கள் எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற வகையில் இயங்குவதோடு, மக்களையும் திசை திருப்பி இவ்வாறான உணர்ச்சிவசப்படுத்தும் வகைச் செய்திகளின் அடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகின்றனவா? என்ற கேள்வியைத் தமிழ் ஊடகங்கள் முன்வைக்க விரும்புகின்றோம். பொதுவாக மக்கள் அரசியல்வாதிகள் சொல்வதை விட ஊடகங்கள் சொல்வதையே அதிகம் நம்புகிறார்கள். இதனை உணர்ந்து, அனைத்து ஊடகங்களும் அறம் சார்ந்தும் சமூகப் பொறுப்புணர்வோடும் இயங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் வேண்டுகோளும் ஆகும்.

 

https://www.facebook.com/101881847986243/posts/256635022510924/?d=n

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய ஊர் செய்திகளின் படி இடிக்கப்பட்ட இடத்தில் நினைவு சின்னம் வரும். ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவுச்சின்னம் அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.