Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ட்றம்பின் பழிவாங்கல் | இரவிரவாகக் கொலைக் களங்களாகும் அமெரிக்கச் சிறைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ட்றம்பின் பழிவாங்கல் | இரவிரவாகக் கொலைக் களங்களாகும் அமெரிக்கச் சிறைகள்

மாயமான்

தனது பதவிக்காலம் முடிவதற்குள்ளாக, அமெரிக்க மத்திய சிறைகளில் மரணதண்டனை விதிக்கப்பட்டு நீதிக்காகவும் மன்னிப்புக்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கும் கைதிகளை இரவோடிரவாக ‘முடித்து’ விடுவதில் இன்பம் கண்டுவருகிறார் ட்றம்ப். இரண்டாம் உலகப் போரிற்குப் பிறகு அதிக மரணதண்டனைகளுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதியென்ற பெயர் அவருக்குப் போகிறது.

இந்த அவசரக் ‘கொலைகளுக்கு’ ட்றம்ப் மட்டுமல்ல தம்மை நாணயஸ்தராகக் காட்டிக்கொண்டு பதவியைத் துறக்கும் சட்டமா அதிபர் வில்லியம் பார் முதல் ‘கண்ணீர் மன்னன்’ பராக் ஒபாமா வரையில் எல்லோரும் காரணகர்த்தாக்கள் தான்.

இதில் கொடுமை என்னவென்றால் இந்த அவசர பலிபீடத்துக்கு இன்றிரவு யாரைக் கொண்டுபோவது என்பது அதிகாரிகளின் விருப்பு வெறுப்புக்களைப் பொறுத்தது. அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரென்பதையும் தண்டனை தீர்க்கப்பட்டவர்கள் யாரென்பதையும் முழு அமெரிக்காவுமே அறியும்.

கைதிகளுக்கு விஷ ஊசி ஏற்றுவதன்மூலமே தற்போது மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த முறையைப் பரிந்துரைத்தவர்கள் இரண்டு பேராசிரியர்கள். இப்படியான ஒரு கொலை சமீபத்தில் பிழைத்துப்போனதுமுண்டு.

தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான நாளை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்காடிக்கொண்டிருக்கும்போது அவரைக் கட்டிலில் பிணைத்தபடி கொலைக்களத்துக்குக் கொண்டுபோகக் காத்திருந்தார்கள். இன்னொருவரது மேல்முறையீட்டுக்காகக் காத்திருந்தபோது அவரது மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. புதிய ஜனாதிபதி பைடன் நிர்வாகம் இவர்களை மன்னித்துவிடும் என்ற அச்சம். ‘கைக் காசுக்கு’ பிரத்தியேக கொலைகாரர்களைப் பிடித்து இரவோடிரவாகத் தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. கொலைக்குப் பாவிக்கப்படும் மருந்து சட்டவிரோத மருந்தகத்திலிருந்து பெறப்படுகிறது.


 


மரண தண்டனைக்குப் பாவிக்கப்படும் மருந்தை உறுதிப்படுத்துவது முதல், மரணதண்டனைகளை அத்தாட்சிப்படுத்துவதுவரை அமெரிக்க சட்டமா அதிபரினால் செய்யப்படுகிறது. தற்போது கடமையிலிருக்கும் சட்டமா அதிபர் வில்லியம் பார், ஜனாதிபதி ட்றம்புடன் கொண்ட கருத்துவேறுபாட்டினால் நாளை (புதன்) கிழமை தனது பதவியிலிருந்து விலகுகிறார். தற்போது நிறைவேற்றப்பட்டுவரும் தண்டனைகள் எல்லாவற்றையும் அத்தாட்சிப்படுத்திய பாருக்கும் இக் கொலைகளில் ஓரளவு பங்கு உண்டு.

மரண தண்டனைகள் மீளக்கொண்டுவரப்பட்டது ஜோர்ஜ் ட்பிள்யூ புஷ் (2003) காலத்தில். ஆனால் பராக் ஒபாமா (2011) காலத்தில்தான் இதற்கான அடித்தளம் போடப்பட்டது. ட்றம்ப் பதவியேற்றதும் இக்காரியம் முடுக்கப்பட்டது. 1994 இல் பில் கிளின்ரனால் கொண்டுவரப்பட்ட சட்டம் அமெரிக்கச் சிறைகளைக் கறுப்பின மக்களால் நிரப்பியது. எல்லா ஜனாதிபதிகளுமே தாங்கள் குற்றவாளிகளுக்கு எதிரானவர்கள காட்டுவதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு முன்நின்றனர். ஒபாமா அதற்கெதிராகப் போராடவில்லை. அதனால் அவரது காலத்திலும் கிளின்ரனது கொள்கை மிக உக்கிரமாகப் பிரயோகப்படுத்தப்பட்டது. கொலைக்குத் தேவையான மருந்து தட்டுப்பாடு காரணமாக ஒபாமாவினால் மரணதண்டனைகளை நிறைவேற்ற முடியவில்லை. ஜோ பைடன், தான் ஜனாதிபதியானால் மரண தண்டனையை ஒழிப்பேன் எனப் பிரசாரம் செய்தவர். ஜனவரி 20 இல் அவர் ஜனாதிபதியாகிறார். இதற்காகத்தான் ட்றம்ப் நிர்வாகம் அவசரம் அவசரமாக மரணதண்டனைகளை நிறைவேற்றுகிறது.

அமெரிக்க சனத்தொகை, உலக சனத்தொகையின் 5% மட்டுமே. ஆனால் உலக சிறைக்கைதிகளின் 25% அமெரிக்க சிறைகளில் இருக்கிறது. இவர்களைச் சிறைக்குள் தள்ளியதில் நீதித் துறை, சட்டத்தரணிகள், சிறையதிகாரிகள், பேராசிரியர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என எல்லோருக்கும் பங்குண்டு. ட்றம்ப் காலத்தில் மன்னிப்பு கொடுப்பது குறைந்து, மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது அதிகரித்திருந்தது. ஆனால் அவர்களை உள்ளே தள்ளியதில் ட்றம்பிற்கு அதிக பங்கு இல்லை.

ட்றம்ப் நிர்வாகம் இதுவரை 10 பேரைக் கொன்றிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களுக்குள் 3 பேரைக் கொல்வதற்குத் திட்டமிட்டுள்ளது.

https://marumoli.com/ட்றம்பின்-பழிவாங்கல்-இர/?fbclid=IwAR0AtdWN0rJl7yAYnAi-FwryQ_l1GTIjKAdDObk-HXwPjaDNIce5IK5NyrI

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.