Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டோர் மேற்கு நாடுகளில் அகதி அந்தஸ்து கோருவதற்கு வாய்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Mon Jun 18 8:04:25 EEST 2007

கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டோர் மேற்கு நாடுகளில் அகதி அந்தஸ்து கோருவதற்கு வாய்ப்பு

தலைநகர் கொழும்பிலிருந்து பொலி ஸாராலும், படையினராலும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட ஈழத்தமிழர்கள், அந் தக் கொடூரத்தின்போது பெரும் மன உளைச் சலையும் அசௌகரியங்களையும் அனு பவித்தார்களாயினும், "இழப்பிலும் நன்மை' என்பது போல இச்சம்பவம் அவர்களுக்கு நல்லதோர் பிரகாசமான எதிர்காலத்துக்கும் வழிகோலியிருப்பதாகச் சுட்டிக்காட்டப் படுகின்றது.

இவ்வாறு தலைநகர் விடுதிகளிலி ருந்து விடியற்காலை வேளை, அச்சுறுத்த லுக்கு மத்தியில் பலவந்தமாக வெளியேற் றப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழர்கள், மேற்கு நாடு ஒன்றுக்குச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் அல்லது அகதி அந்தஸ்து கோரினால், மேற்படி பலவந்த வெளியேற்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து அகதி அந்தஸ்தை அந்நாடுகளில் பெறும் வாய்ப்பு அவர்களுக்கு பிரகாசமாக இருப் பதாகக் கூறப்படுகின்றது.

இத்தகையோர் அரச படைகளாலும், பொலிஸாராலும் தாங்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள் என்ற ஆதா ரத்தை உறுதிப்படுத்தும் சான்றுகளை இதற்காக இப்போதே சேகரித்துக் கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்படு கின்றது. இந்தப் பலவந்த வெளியேற்றத்தை யொட்டி, தாங்கள் கொழும்பில் அல்லது வவுனியாவில் கொடுத்த வாக்குமூலத்தின் உண்மைப் பிரதி, தாங்கள் தங்கியிருந்த விடுதி உரிமையாளர் மேற்படி பலவந்த வெளியேற்றத்தை உறுதிப்படுத்தி அளிக்கும் சத்தியக்கடதாசி போன்றவை பொருத் தமான ஆவணங்களாக அமையக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

வெளியேற்றத்துக்கு எதிராக

உயர் நீதிமன்றத்தில் வழக்குகள்

மேலும் இந்தப் பலவந்த வெளியேற் றத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தனித் தனி அடிப்படை உரிமை மீறல் வழக்கு களைத் தாக்கல் செய்வதற்கான கூட்டு முயற்சிகளை சில தமிழ்க்கட்சிகளும், அமைப்புகளும் ஆரம்பித்திருக்கின்றன. அவற்றுடன் தொடர்புகொண்டு இவ்வாறு பலவந்தமாக வெளியேற்றப்பட்டோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்கு களைத் தங்களது பெயர்களில் தொடர்வார் களாயின் அது இரண்டு விதத்தில் அவர் களுக்கு உதவக்கூடும் என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

ஒன்று வெளிநாட்டில் அகதி அந்தஸ்து அல்லது அரசியல் தஞ்சம் கோருவதற்கு மிக முக்கிய சட்டரீதியான சான்றாதார மாக அந்த வழக்குக் கோவைகள் அமையும்.

அடுத்தது மேற்படி அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளிவரும் வரை அந்தக் கையோடு முன்னைய சந்தர்ப்பத்தைப் போன்று மீண்டும் பலவந்தமாக படைத்தரப்பு வெளியேற்ற முடியாது. அவர்கள் சம்பந் தப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலு வையில் இருப்பதால்.

அத்துடன், அரச பாதுகாப்புத் துறையின் உயர்மட்ட நடவடிக்கைக்கு எதிராக நாட் டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக் கல் செய்த காரணத்தால் தமது நாட்டில் வசிப்பதற்கு தமக்கு ஆபத்து உள்ளது என சம்பந்தப்பட்டவர் மேற்கு நாட்டுக்குச் சென்று அங்கு வாதிட்டால், அந்த வாதத்தை மேற்கு நாடு நிராகரிக்க முடியாது என்றும் அகதிகள் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டு கின்றனர்.

எனவே, பலவந்த வெளியேற்றம் பாதிக் கப்பட்டோருக்கு ஒரு வகையில் உதவியா கவும் வந்து அமைந்திருக்கின்றது என்பது உண்மைதான்.

நன்றி - உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Mon Jun 18 8:04:51 EEST 2007

தமிழரின் அகதி மனுக்களை மறுக்கமுடியாத இக்கட்டான நிலை மேற்குலக நாடுகளுக்கு! இலங்கை அரசின் இனப்பாகுபாட்டுப் போக்கால்!!

இலங்கையில் ஈழத்தமிழருக்கு எதிரான இனப்பாகுபாட்டுப் போக்கைக் கொழும்பு அரசு பகிரங்கமாகவே வெளிப்படையாகவே கடைப்பிடிப்பதால், மேற்குலகம் புதிய சிக்கலை எதிர்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. இலங்கையில் இனப்பாகுபாடு காட்டப்படுவதாகத் தெரி வித்து, மேற்குலக நாடுகளில் அரசியல் தஞ்சம் அல்லது அகதி அந்தஸ்து கோரும் ஈழத்தமிழர்களின் விண்ணப்பங்களை, நிராகரிக்கவே முடியாத புதிய இக்கட்டு அந்தந்த நாடுகளுக்கு ஏற்பட்டிருக் கின்றது.

மேற்கு நாடுகளில் அகதி அந்தஸ்து கோரும் ஈழத் தமிழர்களின் விண்ணப்பங்களைக் கையாளும் ஆர்வலர்கள் சிலர் இத்தகலை வெளியிட்டிருக்கின்றனர்.

இலங்கையிலிருந்து சென்று மேற்கு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரிய கோரு கின்ற ஈழத் தமிழர்கள் பலரும், தத்தமது தாயகப் பிரதேசங்களில் பெரிய எடுப்பில் யுத்தம் இடம்பெறுவதால் தமது தாய் நாட் டுக்குத் தாங்கள் திருப்பி அனுப்பப்பட் டால் தங்களுக்கு உயிராபத்து நேரும் என்ற வார்த்தையையே தங்களின் அகதி அந்தஸ் துக் கோரும் விண்ணப்பம் தொடர்பாக முன்வைக்கின்றார்கள்.

இத்தகைய விண்ணப்பங்களை நிராகரிக்கும் சமயங்களில் மேற்குலக நாடுகள் அதற்கான விளக்கத்தைக் கொடுக்கின்றன.

""உங்கள் தாயகமான வடக்கு, கிழக் கில் யுத்தம் நடந்தாலும், கொழும்பு உட் பட நாட்டின் ஏனைய பகுதிகளில் நீங்கள் அமைதியாக வாழலாம். அங்கு பிரச்சினை கள் ஏதும் இல்லை.

எமது நாட்டில் தஞ்சம் பெறாமல், உங் கள் நாட்டிலேயே யுத்தப் பிரதேசத்துக்கு வெளியில் நீங்கள் வசிக்க முடியும். எனவே நாட்டுக்கு உங்களைத் திருப்பி அனுப்பினால் யுத்தப் பிரதேசத்துக்குப் போய் உயிராபத்தை எதிர்கொள்ள வேண்டி நேரும் என்ற உங்கள் வாதம் ஏற்றுக்கொள் ளத்தக்கதல்ல.'' என்று தெரிவித்தே பெரும் பாலான அகதி அந்தஸ்துக் கோரும் விண் ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

ஆனால் இந்த நிலைமையை கொழும் பிலிருந்து தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றும் தனது நடவடிக்கை மூலம் மாற்றிவிட்டது இலங்கை அரசு என்கின் றனர் மேற்குலக நாடுகளில் அகதி விட யங்களைக் கையாளும் ஆர்வலர்கள்.

""வடக்கு, கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், அவர்கள் யுத் தம் இடம்பெறும் அவர்களது தாயகப் பிர தேசத்துக்கே கொழும்பு அரசால் பலவந்த மாக அனுப்பப்படுவார்கள் என்ற கருத்தை மறுக்க முடியாத நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து தமிழர் களை வெளியேற்றும் தமது நடவடிக் கையை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்தி யும், இது விடயத்தில் மேற்குலகின் கரி சனையை உதாசீனப்படுத்தியும் இலங் கைப் பாதுகாப்புத்தரப்பின் உயரதிகாரி கள் கருத்து வெளியிட்டு வருகின்றமை மேற்கு நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்து விட்டுக் காத்திருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சட்டச் சூழலை உருவாக்கியிருக்கின்றது.'' என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

""ஏற்கனவே அகதி அந்தஸ்துக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அந்த முடிவுக்கு எதி ராக மேன்முறையீடு செய்துவிட்டு ஏக்கத் துடன் காத்திருக்கும் பலருக்கு, கொழும்பு அரசின் தற்போதைய வெளிப்படை யான இனப்பாகுபாட்டுப் போக்கு, அகதி அந்தஸ்துக் கிடைப்பதற்கான புதிய நம்பிக்கையைத் துளிர் விடவைத்திருக் கின்றன.'' என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

உதயன்

அதுதான் பிரித்தானிய தூதுவர் சொல்லிப்போட்டார் தங்களுக்கு தமிழர் பிரச்சனை நேரடி பாதிப்பை தருகிறது என்று. ஈழத்தமீழர் பெரிய சமூகமாக ஜரோப்பிய நாடுகளில் வளர்ந்து வருகிறார்கள் .அரசியல் மாற்றங்கள் இவர்களின் பங்கும் உண்டு என நினைக்கிறார்கள்.

கனடாவில் நடந்த வெல்க தமிழ் நிகழ்வில் அதில் பங்கு பற்றி உரையாற்றிய தமிழர் படைப்பாளிகள் தலைவர் எங்கள் சுதந்திரதிற்காக போராடும் அமைப்பை கனடாவில் தடை செய்தவர்களுக்கு வருங்காலத்தில் ஈழத்தமிழர் வாக்கு கிடையாது என்று திட்டவட்டமாக கூறினார்.

இலண்டனும் இதற்கு பொருந்தும் இப்போ நடக்கின்ற சுழற்சி முறை கவனயீர்ப்பு போராட்டம் நடை பெறும் மாநகரங்கள் பல அரசியல் கட்சிகள் வந்து தங்களது ஆதரவை பாகுபாடின்றி தெரிவிக்கின்றார்கள்.

ஒன்று பட்டால் பலம் உண்டு

Edited by நேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.