Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொறுப்பற்ற முறையில் பேசுவதுதான் அரசியலோ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பற்ற முறையில் பேசுவதுதான் அரசியலோ?

[18 - June - 2007]

இலங்கையின் தற்போதைய படுமோசமான மனித உரிமை மீறல்கள் நிலைவரம் தொடர்பாக சர்வதேச சமூகம் கடுமையான விசனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கத்தரப்பினர் அவ்வப்போது தெரிவித்து வருகின்ற கருத்துகள் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அமைந்திருக்கின்றன. அரசாங்கத்தின் அமைச்சர்களில் சிலர் நாட்டின் இன்றைய விபரீதமான நிகழ்வுப் போக்குகளின் பாரதூரத்தன்மையை புரிந்துகொள்ள மறுக்கின்றார்கள். உண்மையில் நித்திரை செய்பவர்களை தூக்கத்திலிருந்து எழுப்பிவிடலாம். ஆனால், நித்திரை செய்வதைப்போன்று பாசாங்கு செய்பவர்களை எழுப்பமுடியாது. நித்திரை செய்வதாக பாசாங்கு செய்பவர்களின் கைகளில்தான் இன்று அரசியல் அதிகாரம் சிக்கியிருக்கும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையையே காணக்கூடியதாக இருக்கிறது.

ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்கள், கடத்தப்பட்ட ஆட்களை விடுவிப்பதற்கு கடத்தல்காரர்கள் பெருந்தொகைப் பணத்தை கப்பமாக பெறுதல், படுகொலைகள் என்று மனித உரிமை மீறல்கள் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன. இத்தகைய கொடுமையான சம்பவங்கள் குறித்து ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெளியிடுகின்ற கருத்துகள் மனித உரிமை மீறல்களைச் செய்பவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கக் கூடியதாக அமைந்திருக்கின்றன. இது மிகவும் கவலைக்குரியதாகும்.

காணாமல் போனதாக கருதப்பட்ட யுவதி பின்னர் தனது காதலனுடன் ஓடிவிட்டதாகத் தெரியவந்த சம்பவமொன்று ஆட்கடத்தல்களையும் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்களையும் குறைத்து மதிப்பிடுவதற்கு அரசாங்கத்தரப்பினரால் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தாராளமாகவே பயன்படுத்தப்பட்டது. காணாமல் போனவர்கள் சகலருமே காதலனுடன் அல்லது காதலியுடன் ஓடிப்போயிருப்பார்கள் என்ற தோரணையில் அந்தக் கருத்துகள் அமைந்திருந்ததைக் கண்டோம். காணாமல் போனதாக முறையிடப்பட்டவர்களில் அநேகமானோர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள் என்றும் அண்மைக்காலமாக அரசாங்கத்தரப்பினரால் கூறப்பட்டு வருகின்றது. வேறுயாருமல்ல, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூட அண்மையில் சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இப்போது பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சர் டி.எம்.ஜெயரத்ன `புதிய கதை' யொன்றைக் கூறுகிறார். நேற்றைய தினம் `சண்டே ஒப்சேர்வர்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் சிலர் தங்கள் அழகிய காதலிகளுடன் சல்லாபிப்பதற்காக மறைவிடங்களுக்குச் சென்றுவிட்டு கடத்தப்பட்டதாகவும் காணாமல் போய் விட்டதாகவும் கதை விடுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இனந்தெரியாத குழுக்களினால் ஆட்கள் கடத்தப்படுகின்ற சம்பவங்கள் அரசியல் நோக்குடனானவை. கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட பெரும்பாலான தனவந்தர்கள் கடத்த ஒரு சில தினங்களில் பத்திரமாக வீடு திரும்பியிருக்கிறார்கள். அவர்கள் பெருந்தொகைப் பணத்தைக் கப்பமாக செலுத்தியிருந்தார்கள் என்பதற்கோ அல்லது அவர்கள் விடுவிக்கப்படுவதற்காக கடத்தல்காரர்களின் வேறு நிபந்தனைகளுக்கு இணங்கியிருந்தார்கள் என்பதற்கோ எந்தச் சான்றுமேயில்லை. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம் பெறுவதாக சர்வதேச அரங்கில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறிவருவதை நியாயப்படுத்துவதற்காகவே ஐக்கிய தேசியக்கட்சியினர் கடத்தல் நாடகங்கள் குறித்துப் பேசுகிறார்கள். அரசாங்கத்துக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவே மனித உரிமை மீறல்கள் குறித்து பெரிதாகப் பேசுகிறார்கள் என்று அமைச்சர் ஜெயரத்ன கூறியிருக்கிறார்.

தங்களது மனைவிமார்களிடமிருந்து விடுபட்டு அழகிய காதலிகளுடன் யாருக்கும் தெரியாத தொலைவிடங்களில் சல்லாபிப்பதற்காகவும் குறிப்பிட்ட சிலர் தற்போதைய நாட்டுச் சூழ்நிலையைப் பயன்படுத்துகிறார்கள். தற்போதைய நவீன தகவல் தொழில்நுட்பயுகத்திலே குடும்பத்தவர்களிடமிருந்து தூரவிலகியிருப்பதோ தொடர்பு கொள்ளாமல் இருப்பதோ கஷ்டமான ஒன்று. ஆட்கடத்தல் விவகாரம் இத்தகைய பேர்வழிகளுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. கேடு போலத் தோன்றும் சூழ்நிலை அவர்களுக்கு நலமாகிவிட்டது. ஒருவர் கடத்தப்பட்டு விட்டால் அவருடன் வேறுயாரும் தொடர்பு கொள்ளமுடியாது. ஆனால், கடத்தப் பட்டுவிட்டதாகக் கூறிக்கொண்டு மனைவிமாரின் பிடியிலிருந்து தப்பி காதலிகளுடன் தூரஇடங்களில் சிலர் சல்லாபிக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஆட்கடத்தல் நல்ல சாக்குப்போக்காகிவிட்டது என்றும் அமைச்சர் பேட்டியில் கூறியிருக்கிறார்.

அமைச்சர் ஜெயரத்ன இன்று நேற்று அரசியலுக்கு வந்தவரல்ல. அவர் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினர். திருமதி ஷ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலந்தொட்டு திருமதி குமாரதுங்கவின் ஆட்சிக்காலம் ஈறாக இன்றுவரை பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவிவகிக்கும் பழுத்த அரசியல்வாதி அவர். அத்தகைய அனுபவமுடைய ஒருவரிடமிருந்து நாட்டின் இன்றைய துரதிர்ஷ்டவசமான நிகழ்வுப்போக்கு குறித்து சிரிப்புக்கிடமான கருத்துகள் வருகின்றன என்றால், மற்றைய புதிய அரசியல்வாதிகள் பேசுகின்ற விதண்டாவாதங்களைப் பற்றி பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றே எமக்குத் தோன்றுகின்றது. குடும்பஸ்தர்கள் தங்கள் மனைவிமார்களிடமிருந்து தப்பி காதலிகளுடன் சல்லாபிப்பதற்கு தற்போதைய ஆட்கடத்தல் சம்பவங்களை சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற அமைச்சர் ஜெயரத்னவின் கூற்று உண்மையில் அவரது அரசியல் அனுபவம் முதிர்ச்சி குறித்து பலவிதமான கேள்விகளை எழுப்புகிறது. பொறுப்பற்ற முறையில் பேசுவதுதான் அரசியல் என்றாகிவிட்டதோ? நாடும் மக்களும் பாவம்!

நன்றி - தினக்குரல்

பொறுப்பற்ற முறையில் பேசுவதுதான் அரசியலோ?...

ஆ தினக்குரலுக்கு இப்படியும் ஒரு சந்தேகமா?

பொறுப்பற்ற முறையில் பேசுவதுடன் மட்டும் நின்றுவிடாது, பொறுப்பற்ற முறையில் செயற்படவும் வேண்டும். அதுதான் அரசியல்... :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.