Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழரின் பணத்தைப் பலவந்தமாய்ப் பறிப்பதே ஒரு செழிப்பான தொழில்! - தமிழ் கார்டியன் இணைய தளம் செய்திமடல்!

Featured Replies

தமிழரின் பணத்தைப் பலவந்தமாய்ப் பறிப்பதே ஒரு செழிப்பான தொழில்! - தமிழ் கார்டியன் இணைய தளம் செய்திமடல்!

ஜ வியாழக்கிழமைஇ 21 யூன் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

கொழும்பு நகரின் இதயம் போன்ற மையப் பகுதியில், ?மைதிலி ஜுவல்லர்ஸ்? என்னும் நகைக் கடையின் உரிமையாளராக ஏகாம்பரம் பழநிராசா என்பவர் அறுபது வயதாகும் முதியவராவார். கடந்த ஆண்டு(2006) செப்டம்பர் 12ஆம் நாள் அவர் காணாமல் போய்விட்டார். அவருடைய 23 வயது மகன் பால சரவணன் மற்றும் வேலையாள் கணேச முகுந்தன் ஆகியோரும் மாயமாய் மறைந்து விட்டனர்.மூ இலங்கை தலைமையமைச்சரின் அலுவலகத்திலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் இரவு ஒன்பது மணியளவில் தங்கள் வீட்டுக்குத் திரும்பி வரும்பொழுதே அந்த மூன்று பேரும் அப்படிக் கடத்தப்பட்டனர். இரண்டு நாள்களுக்குப் பின்னர் வடக்கு மத்திய மாகாணத்தில் உள்ள பொலன்னறுவ நகரில், கொழும்பிலிருந்து 250 கிலோ மீற்றர் தொலைவில் பழனிராசா விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அவருடைய மகனையும், பணியாளரையும் விடுவிப்பதற்கு, ?வெளியில் சொல்லக்கூடாத? மிகப்பெரிய மீட்பு விலைப் பணத்தைத் தந்தாக வேண்டும் என்று அவர் கட்டளையிடப்பட்டார். பல இலட்சக்கணக்கான ரூபாக்களை பறித்துக் கொண்ட பிறகே, கடத்தல்காரர்கள் அந்த இரண்டு இளைஞர்களையும் விடுதலை செய்தனர். ஆனால் அவர்களின் வாகனத்தைத் தாங்களே வைத்துக்கொண்டு விட்டனர். இலங்கையில் தற்காலிகமான சண்டை நிறுத்த அமைதிநிலையைக் கொண்டு வருவதற்கு சிங்கள அரசு, விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகிய இரண்டுமே உதட்டு அளவில் தொடர்ந்து பேசி வந்தாலும், கடந்த 2006ஆம் ஆண்டு யூலை மாதம் முதலே உண்மையான போரில்தான் நாடே சிக்கியுள்ளது. அதுவும் சென்ற சில மாதங்களாக, வாழ்க்கை என்பது இரவில் தாங்கள் இறுக்கி அமுக்கப்படுவது போன்ற ஒரு தீய கனவைக் காணுவதாகவே குடிமக்களைத் திணறும்படி அச்சுறுத்துகிறது. போர்ப்படைகளின் தாக்குதல்களை மேலும் மேலும் விரிவாக்கிக்கொண்டே போவதற்கு அப்பால் - திடீர்ப் பரபரப்பான தீய கொடுமைகளும் இழைக்கப்படுகின்றன. வலுக்கட்டாயமான மனிதர்களின் மறைவுகள், பலவந்தமான பணப்பறிப்புகள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பொதுவான துன்புறுத்தல்கள், அச்சுறுத்தி மிரட்டி பணிய வைத்தல்கள் - என்றெல்லாம் அந்த அட்டூழியங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. இன்றைக்கு இலங்கையிலே மிகப்பெரிய அளவில் பேசப்படுகின்ற மனித உரிமைகள் மீறல்களில் எல்லாம் மிக மிக முக்கியமானதாகவும், அதே வேளையில் மிகவும் மறைக்கப்பட்;ட குறைந்த தகவல்களைக் கொண்டதாகவும் நடைபெறுகின்ற ஓர் மனித உரிமை மீறல் குற்றம் என்ன தெரியுமா? பணச் செழுமை கொண்ட கொழும்புப் பகுதியில் இருக்கும் தமிழ் வணிகர்கள்( வியாபாரிகள்) மனிதக் கடத்தலுக்கும், பலவந்த பணப்பறிப்புக்கும், பணியவைக்கும் மிரட்டலுக்கும் பலியாக்கப்பபடுவதுதான். திடுக்கிடச்செய்யும் இந்த அற்புதக் கொடுமைக் காட்சிதான் - ?செழுமையாக வளரும் தொழில்? என்பதாக அண்மைக்காலமாக சுட்டிக்காட்டப்படுகிறது. பழநிராசா ? மிகச் சிலராக உள்ள நல்வாய்ப்புக்காரர்களில்( அதிருஸ்டசாலிகளில்) ஒருவர் ஆவார். மனிதத் தலைக்கு மீட்பு விலையாக எத்தனையோ இலட்சக்கணக்கில் பணத்தொகைகளை வாரிக் கொடுத்தப் பிறகும் கூட, கடத்தப்பட்ட ஏராளமான தமிழர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவே இல்லை! எஸ். சிறிகந்தராஜா, ஒரு முன்னணி சர்க்கரை வணிகர் ஆவார். அவரும் அவருடைய கார் ஒட்டுநரும் 2006 யூலை மாதத்தில் கடத்தப்பட்டனர்.

ஆனால், அவர்களுடைய விடுதலைக்காக இலங்கையின நாணய ரூபாயில் முப்பது மில்லியன்கள் கொடுத்துவிட்ட பிறகும் அவர்களது விடுதலையைப் பெறுவதில் தோல்வியே ஏற்பட்டது. ஒரு வெற்றிக்கரமான தமிழ் வணிகர் திருநாவுக்கரசு புவனேசுவரன் இலங்கை ரூபாயில் ஒன்றரை இலட்சத்தை மீட்பு விலையாய் பறிகொடுத்த பின்னரே விடுவிக்கப்பட்டார். அதே வேளையில், கடத்தல்காரர்களால் கேட்கப்பட்ட பெரும் பணத்தை வங்கியில் சேமிப்புத் தொகையாகச் செலுத்திய பிறகும் கூட, வணிகரான மேக்சி போல்டன், இதுவரையிலும் விடுவிக்கப்படவே இல்லை. கொழும்பில் நடைபெற்றுவரும் மனித மறைவுகள் என்னும் திடுக்கிடும் திகைப்பு நிகழ்ச்சிகளால், அங்கே பெரும் எண்ணிக்கையில் பொருளாதார வலிமை படைத்த தமிழர்களே அச்சத்தின் உச்சத்திற்கே சென்று குலை நடுங்குகின்றனர். இலங்கை இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாகக் கடத்தப்படும் மனித மறைவுகள் மட்டுமே இந்தத் தமிழ் வணிகச் சமூகத்தை அச்சுறுத்தல் பாதிப்புக்கு ஆளாக்கவில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டுப் பிரிந்த கருணா குழுவினரும், அந்தக் கருணா குழுவினருடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறப்படும் ?ஈழ மக்கள் சனநாயக் கட்சி? (ஈ.பி.டி.பி.) சில நேரங்களிலும் இந்தத் தமிழ் வணிகர்களின் வியாபார வெற்றிக்கு ஆபத்தை விளைவிக்கின்றனர். கடுமையான எச்சரிக்கைகளுக்குப் பிறகே கடத்தப்பட்டவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில், அவ்வாறு சிக்கிச் சீரழிந்த மற்றத் துன்புற்றவர்களின் சிதைக்கப்பட்ட உடல்கள், மதகுப் பாலங்கள், வாய்க்கால் ஓரங்கள், நெல் வயல்கள், சாலை ஓரங்கள் முதலான இடங்களில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன. அந்த உருக்குலைந்த உடல்களோ, வாழ்க்கை எவ்வளவு துன்பமான நிலையற்றது என்னும் வலிமையான ஒரு செய்தியைப் பரப்புகின்றன. 2006ஆம் ஆண்டு யூலை மாதத்தில் உண்மையான போர்க்கால நிலைமைகள் மறுபடியும் புத்துயிர் பெற்றுவிட்டதிலிருந்து, மனித கடத்தல்களும் மிகுதியாகிவிட்டன. கொழும்பு நகரங்களிலும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் பணிபுரிகின்ற பல கட்சிகள் இணைந்த மனித உரிமைகள் அமைப்புப் பிரிவான உள்ளாட்சி நிருவாக(சிவில்) செயல் எச்சரிக்ககைக் குழு(ஊஐஏஐடு ஆழுNஐவுழுசுஐNபு ஊழுஆஆஐவுவுநுநு ஸ்ரீ ஊஆஊ) தனது ஆய்வின்படி எண்பதுக்கும்(80) மேற்பட்ட மனித மறைவுகளைப் பதிவு செய்துள்ளது. அண்மைக்காலமாக, கடத்தப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கையைப் பற்றிய எண்ணிக்கையில் மேலும் கீழும் போகாத ஒரு தேக்கமான நிலை இருந்த போதிலும் கூட பலவந்தப் பணப்பறிப்புப் போக்கு மேலும் மேலும் கூடிக்கொண்டேதான் போகிறது. இந்தத் தீவு நாட்டை விட்டுத் தப்பி ஓடும் இலங்கைத் தமிழ் வணிகக் குடும்பங்களின் எண்ணிக்கைக் கூடுதலும், உச்சநிலை அச்சுறுத்தலுக்கு அடையாளச் சான்றாகவே சுட்டிக்காட்டுகிறது. ?உள்ளாட்சி நிருவாகச் செயல் எச்சரிக்கைக்குழு(சி.எம்.சி) பதிந்துள்ள ஆவணங்களின் படியும் இலங்கைத் தமிழ் வணிகர்கள், தங்கள் வணிகச் செயல்பாடுகளின் அடிப்படைத் தளங்களை, இ;ந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அய்ரோப்பா, அல்லது மேற்கு ஆசியா போன்ற நாடுகளுக்கு இடமாற்றம் செய்வதில் முற்பட்டு உள்ளனர். இந்த வகையில், கடந்த இரண்டு மாதங்களில் முப்பதாயிரத்துக்கும் (30,000) மேற்பட்ட தமிழ் வணிகர்கள் இந்தத் தீவு நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

இந்தத் துன்புற்றவர்களோ, கருணா குழுவினர் மீதே குற்றம் சுமத்துவதில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தப்படியாகக் குறைந்த அளவில், இராணுவத்தை விட்டுத் தப்பி ஓடியவர்களையும், ஈ.பி.டி.பி. இயக்கத்தவர்களையும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் கூறுகின்றனர். இன்றைக்குக் கொழும்பு நகரில், கருணா குழுவினர்தான் மற்றப் போராளிக் குழுக்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இலங்கை அரசின் பாதுகாப்பு படையினருடைய கூட்டு ஒத்துழைப்போடு பலவந்தப் பணப்பறிப்புகளை நடத்தி வருகின்றனர். 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்துதான், துன்பநிலைக்கு உள்ளான தமிழ் வணிகர்களில் ஏராளமானவர்கள் தீவு நாட்டுக்குத் திரும்பி வந்துள்ளனர். அவர்களது உள்நோக்கமோ, தங்களின் தாயக நாட்டில் மீண்டும் தொழில் முதலீடுகள் செய்யலாம் என்பதுதான்! இலங்கைத் தமிழர் ஒருவர், பிரித்தானியா நாட்டிலும், இலங்கையிலும் சொந்த வீடுகள் வைத்துள்ளார். தம்முடைய பெயரை வெளியில் சொல்ல விரும்பாத இவர் ? தமது கொழும்பு வீட்டின் அருகே அண்மைக்காலமாக அடிக்கடி ஒரு வெள்ளைநிற வாகனம் காணப்படுவதாக கூறுகிறார். இந்த மனிதர் பிரித்தானியா நாட்டிலிருந்து திரும்பி வந்ததுப் பற்றியும், இலங்கையில் உள்ள இவருடைய வணிகத் தொழில் பற்றியும்கூட, அந்த வாகனத்தில் வரும் பயணிகள், இவர் அண்டைவீட்டுக்காரர்களிடம் கேள்விகள் எழுப்பியுள்ளனர். தமது அவல நிலை குறித்து இந்தத் தமிழ் வணிகர் இவ்வாறு விளக்குகின்றார்:

?ஒரு தொழில் திட்டத்தை உருவாக்குவதற்காக இரண்டு ஆண்டு காலத்தை நான் எடுத்துக்கொண்டேன். அமைதி ஒப்பந்தத்தால் உண்டாக்கப்பட்ட வணிகப் பருவநிலைதான், பிரித்தானியா நாட்டிலிருந்து பல பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைத் திரும்புவதற்கு உரிய ஊக்க உணர்வைக் கொடுத்தது. இப்போது அப்படித் திரும்பி வந்ததற்குப் பலனாக, என்னுடைய தொழில் முதலீடுகளைப் பற்றிய விவரங்களை வேவு பார்க்கும் வெள்ளை நிற வாகனங்களால் வேட்டையாடப்படுகின்றேன். தற்போது, தமது துணிவான இலங்கைத் தொழில் முயற்சியைக் கைவிட்டு விடுவதைப் பற்றியும், பிரிட்டன் நாட்டுக்கே திரும்பிச் சென்றுவிடுவது பற்றியும் இவர் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டு இருக்கிறார். மற்றத் தமிழ் வணிகர்களில் ஏராளமானவர்கள், நடைமுறை நிலையில், இலங்கையில் இருந்து ஈவு இரக்கமற்றுத் தூக்கி எறியப்பட்டுவிட்டார்கள். புகழ்பெற்ற ஒரு கொழும்பு நகைக்கடை வணிகருக்கு, பல இலட்சம் உரூபாக்களை வற்புறுத்திக் கேட்கின்ற அச்சுறுத்தல் தொலை பேசிகள் நிறையவே வந்த வண்ணம் இருக்கின்றன. அவரோ, இனிமேலும் இலங்கையில் தமது வணிகத் தொழிலைத் தொடர்வது முடியாது என்று கூறுகிறார். ?என்னுடைய வணிகத் தொழிலை சென்னையில் புதுப்பித்து நடத்துவதற்கு இடம் ஒன்றையும் தேர்ந்தெடுத்துவிட்டேன். நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஏனெனில், கொழும்பு நகரில் முப்பது ஆண்டுகளாக இரண்டு நகைக்கடைகளை எந்தத் தொல்லைச் சிக்கலும் இல்லாமல் நடத்தி வந்தேன். 1983ஆம் ஆண்டில் வெடித்த இனச் சண்டைகளக்குக் கூட ஈடுகொடுத்து உயிர் வாழ்ந்தேன். இப்போதோ சூழ்நிலை அடியோடு மாறிவிட்டது? என்றும் அவர் சொன்னார். கொழும்பு மாவட்ட சட்டமன்ற உறுப்பினராகவும், உள்ளாட்சி நிருவாகச் செயல் எச்சரிக்கைக் குழு அமைப்பாளராகவும் மனோ கணேசன் இருக்கின்றார். அவர் இப்படிக் கூறுகின்றார்.

?கொழும்பில் உள்ள தமிழ் வணிகர்கள், தாங்கள் உடல் அளவிலும், தொழில் அளவிலும் மிரட்டப்படும் அச்ச உணர்வோடுதான் வாழ்கிறார்கள் என்பது மட்டுமல்ல, காவல்துறையினரின் குறிப்பிடத்தக்க செயலற்ற போக்கும் சிக்கல்களைக் கூடுதலாக்கிக் குற்றங்களைப் பெருக்குகின்றன. ? சட்டம் - ஒழுங்கு நிலைமை முழுக்கவும் சீர்குலைந்து விட்டது உறுதிடயாக நடைபெற்ற சில நிகழ்வுகளில் அதிகாரிகளுக்கு உதவும் பொருட்டு, பலவந்தப் பணம் பறிப்பாளர்களின் தொலைபேசி எண்களையும், வங்கிக் கணக்கு எண்களையும் கொடுத்துள்ளோம். (குற்றச்செயல்களைக்) கண்கூடாகக் கண்ட சாட்சிகளைப் பற்றிய விவரங்களையும் தெரிவித்து இருக்கிறோம். என்றாலும் குற்றவாளிகளைக் கைது செய்ய முழுமையான முறையில் எந்த நடவடிக்கையையுமே காவல் துறையினர் எடுக்கவில்லை? இவ்வாறெல்லாம் திரு. மனோ கணேசன் அவர்கள் சொல்லியுள்ளார். கண்டனப் புகார்களின் தாக்குதல் கூடுதலாகப் பாயவே, இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தியாளர் கெகலிய ரம்பூகல, ?சில சிக்கல்கள்? உள்ளதாக ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால், ?பணப்பறிப்புகள் போன்ற? குற்ற நிகழ்வுகள் தொடர்பாக ஒரு விசாரணைக்குழு குடியரசுத் தலைவர் அவர்களால் நியமனம் செய்யப்படும் என்று கூறினாலும், அந்த விசாரணை எப்பொழுது நடைபெறும் என்பதைப் பற்றிவிவாதிக்க அந்த அதிகாரி மறுத்துவிட்டார். உரிய நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது என்று பரவலாகப் பேசப்படும் குற்றச் சாட்டையும் கூட அவர் ஏற்க மறுத்தார். இலங்கை அரசில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நுட்பப் பயிற்சித் துறை என்பதன் துணையமைச்சராக இருப்பவர் ? பி. இராதாகிருஸ்ணன். அவரும் ஒரு தமிழரே. பலவந்தப் பணப்பறிப்புகள், சொந்தத் துயர மிரட்டல்கள் போன்றவை பற்றித் தமிழர்களிடம் இருந்து வந்த பதிவு செய்யப்பட்ட புகார்கள் தமக்கு வந்ததை ஒட்டி, அமைச்சர் இராதாகிருஸ்ணன் குடியரசுத் தலைவர் ராஜபக்சே அவர்களை நேரில் சந்தித்து இந்தக் குற்ற நிகழ்வுகளைப் பற்றிப் பேசினார். பணம் பறிப்பாளர்கள் சிலருடைய தொலைபேசி எண்களையும் அவரிடம் அளித்து, உடனடியாகத் தலையிடுமாறும் முறையீடு செய்தார். அதனால் ஏற்பட்ட ஒரே விளைவு:

குடியரசுத் தலைவரிடம் தந்த தொலை பேசி எண்களைத் தாம் எப்படிப் பெற்றார் என்பதற்கு விளக்கம் கூற வேண்டும் என்பதற்காக, அமைச்சர் இராதாகிருஸ்ணன் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இலங்கை அரசு, குற்றச் செயல்களின் நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்டுவிட்டதால் எதிர்க்கட்சிகள் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர். உலக நாடுகள் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைக்கின்றனர். மனித மறைவுகளைப் பற்றி முதன்மைப்படுத்திச் செய்தி பரப்புவதில், உலக நாடுகளின் ஈடுபாடும் இயலக் கூடியதுதான் - நிறைவேறக் கூடியதுதான் - என்பது, துன்புற்றவர்களின் குடும்பங்களுக்கும் கூட சில நம்பிக்கை உணர்வுகளை ஏற்படுத்தி இருப்பதாகச் சட்ட மன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறுகிறார். ?இத்தகைய சிக்கலின் (பிரச்சினையின்) முக்கியக் கடுமையான நிலைமையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், நாம் கேட்கின்ற தீர்வுநிலை எவ்வளவோ குறைவானதுதான். ?ஆனால், முற்றிலும் செயலற்ற தன்மையாலும் குற்றங்களைத் தூண்டிவிடுவதிலேயே குறியாக நம்பியுள்ள ஓர் அரசுக்கு - இந்த எளிய தீர்வு நிலையைக் காண்பது கூட இயலாத உண்மையாகவே தோன்றும்.? என்றும் மனோ கணேசன் இடடித்துச் சொல்கிறார்.

நிதர்சனம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.