Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் காணிகளை அபகரிக்கவே... யாழில் இருந்து இரவோடு இரவாக ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன- சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தமிழர்களின் காணிகளை அபகரிக்கவே... யாழில் இருந்து இரவோடு இரவாக ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன- சுமந்திரன்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகின்றமையை, அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதன் ஒரு கட்டமாகவே தாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இளந்தலைவர்களை சந்திப்பதற்கு இந்திய தூதுவர் அதிக ஆர்வம் காட்டியமையினால் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், இளையவர்கள், பெண் உறுப்பினர் உள்ளிட்ட அனைவரும் 1 மணிநேரம் உரையாடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டோம்.

இதன்போது இளந்தலைவர்கள் அரசியல் நிலைப்பாடு, தற்போது தமிழ் மக்களிடத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக தெரியப்படுத்தினர்.

இதனை செவிமடுத்த இந்திய தூதுவர், அவ்விடயம் தொடர்பாக அவரது நிலைப்பாட்டினை தெரிவித்தார்.

அரசியல் நிலைப்பாட்டில், வழமையான நிலைப்பாட்டினையே இந்தியா கொண்டுள்ளதாகவும் அபிவிருத்தி விடயத்தில் பங்களிப்பினை வழங்குவதிலும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,13 திருத்தத்தில் காணப்படுகின்ற பொலிஸ் காணி அதிகாரங்களை உடனடியாக அமுல்ப்படுத்தினால் சில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுக்க முடியுமென எமது தரப்பினர், தூதுவரிடம் தெரியப்படுத்தினர்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்படுவது, பெரும்பான்மை மக்களிடத்தில் தேவையில்லை என்ற கருத்தை பதிவு செய்வதற்கான  அரசாங்கத்தின் சூழ்ச்சியாகவே கருதுகின்றோம்.

ஆகவே, அத்தகைய நிலையேற்படாமல் தடுப்பதற்கு உடனடியாக மாகாண சபைத் தேரர்தலினை நடத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை சர்வதேச நீதிமன்ற பொறிமுறை அவசியம் என்பதை வெளிப்படுத்தி இருந்தோம். பொறுப்புக்கூறல் விடயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து வெளியே கொண்டுவர  வேண்டும்.

மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் அதனைப் பாரப்படுத்துவதற்கு ஏதுவாக செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைதான் எங்களது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

இந்த சபை சர்வதேச  நீதிமன்றத்தில்  எதனையும் பாரப்படுத்த முடியாது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஒவ்வொரு சபைக்கும் சில சில அதிகாரங்கள் இருக்கின்றன.

இந்த மனித உரிமை பேரவைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை பாரப்படுத்தும் அதிகாரம் கிடையாது. அந்த அதிகாரம் பாதுகாப்பு சபையிடம் மாத்திரம்தான் இருக்கின்றது.

இதனை பல தடவை மக்களிடம் தெளிவுப்படுத்தினோம். நாங்கள் கூறியது பொறுப்புக்கூறல் விடயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து வெளியே கொண்டு வாருங்கள்.

செயலாளர் நாயகத்தின் ஊடாக பாதுகாப்பு சபைக்கு கொண்டுச் சென்று, பொதுச்சபை, பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறே கூறி இருக்கின்றோம்

மேலும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைபில் நாங்கள் கேட்டுக்கொண்ட விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொறுப்புக்கூறல் இந்த பேரவையில் இருந்து வெளியே கொண்டு வரும் விடயம் தெட்ட தெளிவாக இருக்கின்றது.

இதேவேளை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே கொண்டுசெல்லப்படுகின்றமையை, அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதன் ஒரு கட்டமாகவே தாங்கள் பார்க்கின்றோம்.

ஆவணங்களை அனுராதபுரத்தில் வைத்துவிட்டு, தமிழ் மக்கள் தங்களின் தாயகம் என்று கூறும் நிலத்தை என்னவிதமாக அபகரிக்கலாம் என்ற திட்டங்களை வகுப்பதற்காகத்தான் குறித்த ஆவணங்கள் இரவோடிரவாக மாற்றப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தமிழர்களின்-காணிகளை-அபகர/

###############   #############

வடக்கின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறித்து  கேள்வி! - Vanakkam London

வடக்கின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறித்து மனோ கணேசன் கேள்வி!

வடக்கில் உள்ள நான்கு மாவட்டங்களின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக அனுராதபுர நாடாளுமன்ற உறுப்பினர் காணியமைச்சர் சந்திரசேன பதிலளிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ள மனோ, “யாழ்ப்பாணத்திலிருந்த வட மாகாண பிராந்திய காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம், இப்போது யாழ் மாவட்ட அலுவலகமாக குறைக்கப்பட்டு, வடக்கின் ஏனைய நான்கு மாவட்டங்களின் ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக அனுராதபுர நாடாளுமன்ற உறுப்பினர் காணியமைச்சர் சந்திரசேன பதிலளிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தமிழர் தாயகத்தின் வடக்கு மாகாணத்திற்குரிய அனைத்து காணிகளுக்கான ஆவணங்களும் அநுராதபுர மாவட்ட செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

கடந்த 4ஆம் திகதி ஆவணங்களை எடுத்துச் செல்ல முற்பட்ட போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பொது மக்களும் யாழ்.செயலக வாசலுக்கு முன்பாக ஒன்று கூடி கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

ஆனால் இது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் முடிவு என்றும் தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் அப்போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை அவசர அவசரமாக அனைத்து ஆவணங்களும் அநுராதபுர மாவட்ட செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வடக்கின்-காணி-ஆவணங்கள்-அ/

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது ஏன்? மனோ கணேசன்

 
1-96.jpg
 38 Views

வடக்கில் உள்ள நான்கு மாவட்டங்களின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக அனுராதபுர நாடாளுமன்ற உறுப்பினர் காணியமைச்சர் சந்திரசேன பதிலளிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தமிழர் தாயகத்தின் வடக்கு மாகாணத்திற்குரிய அனைத்து காணிகளுக்கான ஆவணங்களும் அநுராதபுர மாவட்ட செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

மேலும் இது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் முடிவு என்றும் தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் அப்போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை அவசர அவசரமாக அனைத்து ஆவணங்களும் அநுராதபுர மாவட்ட செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

 

இது தொடர்பாக ட்விட்டரில் “யாழ்ப்பாணத்திலிருந்த வட மாகாண பிராந்திய காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம், இப்போது யாழ் மாவட்ட அலுவலகமாக குறைக்கப்பட்டு, வடக்கின் ஏனைய நான்கு மாவட்டங்களின் ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக அனுராதபுர நாடாளுமன்ற உறுப்பினர் காணியமைச்சர் சந்திரசேன பதிலளிக்க வேண்டும்” என மனோ பதிவிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=44559

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் காணி ஆவணங்கள் இடமாற்றம் -பொ. ஐங்கரநேசன் கண்டனம்

 
1-114.jpg
 27 Views

வடக்கின் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் அநுராதபுரத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டமை தமிழர் நிலங்களை அபகரிப்பதற்கான திட்டமே என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்துக்குள் இயங்கி வரும் காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவின் வடமாகாணத்துக்கான அலுவலகத்தில் இருந்து காணி ஆவணங்கள் அநுராதபுர அலுவலகத்துக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு இடம்மாற்றப்படுவதற்குப் பலரும் எதிர்ப்பை வெளியிட்டபோதும், இரவோடு இரவாக யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களினதும் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தமிழ் நிலங்களை அபகரித்து தென் இலங்கை வாசிகளுக்குக் கையளிக்கும் அரசாங்கத்தின் கபடத் திட்டமே இதுவாகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

வடக்கின் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் அநுராதபுரத்துக்கு இடம் மாற்றப்பட்டமை தொடர்பாக பொ. ஐங்கரநேசன் இன்று  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் வசமுள்ள காணிகள் அரச காணிகள் என்றாலும் இவை மக்களின் உறுதிக் காணிகள் ஆகும். இவை 1972ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் அவர்களால் 50 ஏக்கர்கள் காணிக்கு மேல் ஒருவர் உரிமையாளராக இருக்க முடியாது என்று கொண்டுவரப்பட்ட நிலஉச்சவரம்புச் சட்டத்தின் காரணமாக அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட காணிகள். வடக்கில் எமது மக்களால் கையளிக்கப்பட்ட ஏறத்தாழ 12,000 ஏக்கர் பரப்புடைய காணிகளின் ஆவணங்களே இப்போது அநுராதபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவிடமுள்ள வடக்கு மாகாணக் காணிகள் பற்றிய விபரங்கள் எவையும் வடக்கு மாகாண சபையிடம் இல்லை. வடமாகாணக் காணித் திணைக்களம், வடமாகாண ஆளுநர் அலுவலகம் இவை பற்றிய விபரங்களைக் கோரியபோதும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு இவற்றைத் தெரியப்படுத்த மறுத்ததோடு, மிகவும் இரகசியமாகக் காணிகளைச் சிங்கள மக்களுக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு, பளையில் சிங்கள மக்களுக்குக் காணிகள் ஒதுக்கப்பட்டிருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒரு இலட்சம் காணித் துண்டுகளைச் சுயதொழில் முனைவோருக்குப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் வடக்கின் ஆவணங்கள் அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது, வடக்கில் சிங்கள மக்களுக்குக் காணிகளை வழங்கும் கரவான திட்டத்தின் முதற்படியேயன்றி வேறல்ல; இது, தமிழ் மக்களை அவர்களது பாரம்பரிய தாயகத்திலேயே சிறுபான்மையினராக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு நிகழ்ச்சி நிரலின் ஓரங்கம் ஆகும். இக்காணிகள் வடக்கைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளவர்களுக்கு மாத்திரமே பகிர்ந்தளிக்கப் படுவதைத் தமிழ்மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் எப்பாடுபட்டேனும் உறுதிசெய்ய வேண்டும்“ என்றார்.

https://www.ilakku.org/?p=44783

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.