Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் அம்பிகைக்கு ஆதரவளித்த புலம்பெயர் தமிழர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, outdoors and text that says 'POLICE'

பிரித்தானியாவில் அம்பிகைக்கு ஆதரவளித்த புலம்பெயர் தமிழர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்

பிரித்தானியா – கெண்டனில் (Kenton) உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவளித்த புலம்பெயர் தமிழர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துமாறு வலியுறுத்தி அம்பிகை செல்வகுமார் என்பவர் 16ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 100 இற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் அவரது இல்லத்துக்கு வெளியில் நேற்று ஒன்று கூடியிருந்தனர்.

இதன்போது போராட்டக்களத்திற்குச் சென்ற பொலிஸார் அவர்களை அங்கிருந்து களைந்து செல்லுமாறு கூறியதுடன், தடியடியும் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும்சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேநேரத்தில் இதன்போது ஒருவர் தாக்கப்பட்டதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியை ஏந்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நாளும் உடல்நலம் மோசமடைந்து வரும் செல்வகுமார், உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து தொடர்ந்து ஆதரவைப் பெற்று வருகிறார்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் உட்பட 4 கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பித்தார்.

அவருக்கு ஆதரவாக இலங்கையின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் இலங்கை அரசாங்கத்தால் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச நீதி கோரி போராட்டங்கள் மற்றும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு  பரிந்துரைக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்தது சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்சிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதேநேரம், அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அம்பிகை செல்வகுமாரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டனர்.

அதன்படி, ‘எந்தவொரு அரசாங்கமும் தங்கள் மனித உரிமைப் பதிவின் சுயாதீனமான சர்வதேச மதிப்பாய்வுக்கு பயப்படக்கூடாது. அம்பிகையின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளிக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இப்போது அவரது நலன் குறித்து நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம்’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஷூப்ரிட்ஜ் கூறியுள்ளார்.

http://athavannews.com/பிரித்தானியாவில்-அம்பிக/

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் நாம் தமிழர் இளைஞர்கள் கைது! பொலிசாருடன் தள்ளுமுள்ளுப்பட்ட தமிழ் இளைஞர்கள்!! (நேரடி ரிப்போர்ட்)

 

நான்கு அம்சக் கோரிக்கையை முன்வைத்து லண்டனில் கடந்த 16 நாட்களாக உண்ணாவிரம் இருந்துவந்த திருமதி அம்பிகை அவர்களின் இல்லத்திற்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களுக்கும் லண்டன் காவல்துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. 

அவரது வீட்டின் முன்பு திரண்டிருந்த தமிழ் இளைஞர்களில் சிலரை காவல்துறையினர் தாக்கியதாகவும், சிலரை கைதுசெய்ததாகவும் தெரியவருகின்றது.

குறிப்பாக 'நாம் தமிழர்' கட்சியைச் சேர்ந்த இருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

 

 

 
    

https://www.ibctamil.com/diaspora/80/161417?ref=home-imp-flag

 

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.