Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுடன் இராஜதந்திர மோதல் உருவாகும் ஆபத்தை மயிரிழையில் தவிர்த்தது இலங்கை – இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் நடந்தது என்ன ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன் இராஜதந்திர மோதல் உருவாகும் ஆபத்தை மயிரிழையில் தவிர்த்தது இலங்கை – இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் நடந்தது என்ன ?

Digital News Team 2021-03-27T16:49:19
இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுடன் உருவாகயிருந்த இராஜதந்திரமோதலை இலங்கை மயிரிழையில் தவிர்த்துக்கொண்டது என ஆங்கில இணையமொன்று தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்கள் 54 பேர் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுடன் இலங்கை இராஜதந்திரமோதலில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டது என தெரிவித்துள்ள எக்கனமி நெக்ஸ்ட் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இந்தியா எடுத்த நிலைப்பாட்டிற்கு பதில் நடவடிக்கையாகவே இந்த கைது இடம்பெற்றது என இராஜதந்திர வட்டாரங்கள் கருதுவதாக குறிப்பிட்டுள்ளது.
boat2-1-300x200.jpg
இது தொடர்பாக எக்கனமி நெக்;ஸ்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது
இந்தியா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என இலங்கையின் வெளிவிவகார செயலாளர் தெரிவித்திருந்த போதிலும் இந்தியா வாக்களிப்பை தவிர்த்ததுடன் பிரிட்டன் தலைமையிலான நாடுகளின் தீர்மானத்திற்கு தனது ஆதரவை வெளியிட்டது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களை உருவாக்குவதற்கான பொறிமுறையை உருவாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் இந்த தீர்மானத்திற்கு 22 நாடுகள் வாக்களித்திருந்தன.
இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் அதிக நாடுகள் வாக்களித்துள்ளது இந்த தடவையே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்கெடுப்பு முடிவடைந்த மறுநாள் இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை கைதுசெய்தனர்.
2014 ஜூன் மாதத்திற்கு பின்னர் அதிகளவான மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் இது.
இந்த சம்பவத்தினால் தமிழக தேர்தலில் ஏற்படப்போகும் பாதிப்பு குறித்து புதுடில்லியில் பதட்டம் ஏற்பட்டது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவது வழமை எனினும் இந்த கைதுகள் இந்திய கடற்படையின் துன்புறுத்தல்களாக நோக்கப்படுகின்றன.
இந்த கைதுகள் பிரதமர் நரேந்திரமோடியின் பாஜக கடும் சவாலை எதிர்கொண்டுள்ள தமிழகத்தில் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளன.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் வாக்கெடுப்போடு இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளமை இந்தியாவுடன் பகைமையை வெளிப்படுத்தும் நடவடிக்கை என இந்திய வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெளிவாக தெரிவித்துள்ளனர்.
இந்தியா தனது அதிருப்தியை இலங்கையிடம் தெரிவித்ததை தொடர்ந்து உள்ளுர் அதிகாரிகள் பாதிப்பை சரிசெய்வவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எனினும் இந்த விவகாரத்தை கடற்படையுடன் நேரடியாக கையாளும் யாழ்ப்பாண அதிகாரிகள் தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
40 பேரை மாத்திரம் விடுதலை செய்ய இணங்கிய அவர்கள் 14 பேரையும் அவர்களது படகுகளையும் தடுத்துவைக்க தீர்மானித்துள்ளனர்.
தமிழகமீனவர்கள் கைது தேர்தல் பிரச்சாரமாக மாற்றமடைவதை தவிர்ப்பது குறித்து கவனமாக உள்ள புதுடில்லிக்கு 14 மீனவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உயர்மட்ட தலையீடுகளை தொடர்ந்து சனிக்கிழமை 14 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் நீதவான் விடுவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவிவரும் இந்த தருணத்தில் கொரோனா வைரஸ் பரவலை தவிர்ப்பதற்காக தமிழக மீனவர்களை விடுதலை செய்யவேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இந்தியாவுடனான பனிப்போரை இலங்கை தவிர்த்துக்கொண்டுள்ளது
 

மீனவர்களை விடுவிக்காமல் இருந்தால் மட்டும் இந்தியா ஏதோ பெரிசா செய்து இருக்கும் என்ற எண்ணத்தில் இதை எழுதியுள்ளனர். வாலைச் சுருட்டிக் கொண்டு இலங்கையிடம் கெஞ்சி கூத்தாடிக் கொண்டு இருந்திருக்கும் இந்த முதுகெழும்பற்ற தேசம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

மீனவர்களை விடுவிக்காமல் இருந்தால் மட்டும் இந்தியா ஏதோ பெரிசா செய்து இருக்கும் என்ற எண்ணத்தில் இதை எழுதியுள்ளனர். வாலைச் சுருட்டிக் கொண்டு இலங்கையிடம் கெஞ்சி கூத்தாடிக் கொண்டு இருந்திருக்கும் இந்த முதுகெழும்பற்ற தேசம்.

அட உங்களிடமிருந்து இப்படியொரு கருத்து நன்றி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.