Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து மறைந்தார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து மறைந்தார்!

spacer.png

மார்க்சிய - பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர் வே.ஆனைமுத்து முதுமை காரணமாக தனது 96 வயதில் இன்று (ஏப்ரல் 6) காலமானார்.

அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில், “

‘என் வாழ்வை திசைமாற்றியவர் மறைந்தார்’

நான் பயணிக்க வேண்டிய திசை என்ன என்று புரியாமல் இருந்த 1992-ஆம் ஆண்டு நிறப்பிரிகை பத்திரிகை சார்ந்த நடவடிக்கைகளில் நண்பர்களாக ஆன கிராமியன், துப்பாக்கி தொழிற்சாலை அழகேசன் ஆகியோரை ஒரு நாள் மாலை திருச்சி கோட்டை ஸ்டேஷனில் சந்தித்தேன். ஏதெனும் ஒரு வாசிப்புக் குழு (reading group) உருவாக்க திட்டம்.

அப்போது நண்பர் கோ.ராஜாராம் நீங்களெல்லாம் ஃபிரெஞ்சு, ஐரோப்பிய அறிஞர்களைத்தான் படிப்பீர்கள்; பெரியாரையெல்லாம் படிக்க மாட்டீர்களா என்று கேட்டு எனக்கு கடிதம் எழுதியிருந்ததைக் கூறினேன். அதனைத் தொடர்ந்து பெரியாரை வாசிக்கலாம் என நினைத்தோம். எப்படி வாசிப்பது, எதை வாசிப்பது என்ற கேள்வி எழுந்தபோதுதான் கிராமியன் சொன்னார், ஆனைமுத்து தொகுத்த பெரியார் சிந்தனைகள் மூன்று வால்யூம் இருக்கிறது. அவற்றை வாசிக்கலாம் என்றார். அவரே அந்த வால்யூம்களை நண்பர்களிடம் கடனாகப் பெற உதவி செய்தார். சேர்ந்து படிக்க ஒரு நண்பரின் அறையையும் ஏற்பாடு செய்தார்.

முப்பத்திரண்டு வயதில் என் வாழ்க்கையை திசைமாற்றிய அந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த மூன்று தொகுப்புகளும் ஒரு புதிய ராஜன் குறையை உருவாக்கின. அ.மார்க்ஸ் கொடுத்த உற்சாகம்/ அழுத்தத்தால் பெரியாரியம் குறித்து நான் எழுதிய கட்டுரை நிறப்பிரிகையில் வெளியானது. என்னை ஆய்வாளனாக, எழுத்தாளனாக அடையாளம் காட்டியது.

ஐயா ஆனைமுத்து இந்த வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் தினத்தன்று மறைந்துவிட்டார். அவருக்கு என் மனமார்ந்த அஞ்சலிகளை கண்ணீர் மல்க தெரிவித்துக்கொள்கிறேன்.

எஞ்சியுள்ள வாழ்நாளிலும் அவருக்கும், அவருடைய பெரியார் சிந்தனைகள் தொகுப்பிற்கும் கடன் பட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
 

 

https://minnambalam.com/politics/2021/04/06/40/periyar-fallower-v-anaimuthu-has-passed-away

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூத்த தலைவர் ஆனைமுத்து ஐயா மறைவு பேரிழப்பாகும் - பெ. மணியரசன் இரங்கல்!

 

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும், பெரியாரிய சிந்தனை அறிஞருமான ஐயா வே. ஆனைமுத்து அவர்கள், புதுவை மருத்துவமனையில் இன்று (06.04.2021) முற்பகல் 11.45 மணியளவில் காலமான செய்தி, பெரும் துயரம் அளிக்கிறது! 

ஐயா அவர்கள் உடல் நலிவுற்று சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, பின்னர் தாம்பரத்தில் தமது தலைமகன் இல்லத்தில் ஓய்வுபெற்று வந்த காலத்தில், அவரைப் போய் பார்த்து உடல்நலம் விசாரித்து வந்தேன். நலிவுற்றுப் படுக்கையில் இருந்த நிலையிலும், அடையாளம் கண்டு என்னுடன் பேசினார்கள். 

ஆனைமுத்து ஐயா அவர்கள், எடுத்துக்காட்டான இலட்சிய வாழ்வு வாழ்ந்தவர். சமூகப் பணியில் பணம் – பதவி – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாமல் தொண்டாற்றுவது என்பதே மிகவும் அரிதான செயலாகிவிட்ட இக்காலத்தில், ஐயா அவர்கள் இம்மூன்றுக்கும் இச்சைப் படாமல் செம்மாந்து இலட்சிய வாழ்வு வாழ்ந்து பணியாற்றியவர். இளையோருக்கு அவரது அர்ப்பணிப்பு வாழ்வு முன்னோடிச் செயலாகும்! 

பெரியார் அவர்களின் சிந்தனைகளை முதன் முதலில் தொகுத்து, மூன்று தொகுதிகளாக வழங்கி அவற்றை நிரந்தரமாகப் பதிவு செய்த பெருமை, ஐயா ஆனைமுத்து அவர்களையே சேரும். பெரியார் வழியில் நின்று, வர்ணாசிரமம் – ஆரியத்துவா ஆதிக்கம் ஆகியவற்றை விடாப்பிடியாக எதிர்த்து வந்தார். 

இந்தியா முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நடுவண் அரசுப் பணிகளில் மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வேண்டுமென்று பெரும்பாடுபட்டவர் ஐயா ஆனைமுத்து அவர்கள். வடமாநிலங்களில் பல கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகப் பரப்புரை செய்தவர். அம்மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் உரிமைச் சிந்தனையாளர்கள், ஐயா அவர்களை அழைத்து இப்பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக, மண்டல் குழு அமைத்திட ஐயா ஆனைமுத்து அவர்களும், அவர்களுடைய வடநாட்டுத் தோழர்களும் ஆற்றிய பணிகள் மகத்தானவை. பின்னர், மண்டல் குழுவின் பரிந்துரைகள் இந்திய ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்ட நிலையில், அவற்றை செயல்படுத்துவதற்கு ஆனைமுத்து ஐயா அவர்கள் கடும் முயற்சி எடுத்துக் கொண்டார்கள். 

மார்க்சிய லெனினியம் நன்கு கற்றவர். சமூக வளர்ச்சியின் இயங்கியல் விதிகளை அறிந்தவர். தமிழ்த்தேசிய இனம் குறித்த சரியான புரிதல் உள்ளவர். தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, போராட்டங்கள் நடத்தியவர். ஐயா அவர்களோடு, நாங்களும் இணைந்து தமிழ்வழிக் கல்விக்கானப் போராட்டங்களில் தளைப்பட்டுள்ளோம். தமிழ்த்தேசிய இனத்திற்கு இறை யாண்மை வேண்டும் என்பதில், உறுதியானவர். இவ்வாறான தமிழ்த்தேசியக் கொள்கைகளை “சிந்தனையாளன்” இதழிலும், பொது வெளியிலும் வலியுறுத்தி வந்தார்கள். 

மொழி – இன – பகுத்தறிவு உணர்வோடு செயல்பட்டு வந்த மூத்த தலைவர் ஐயா ஆனைமுத்து அவர்கள் மறைவு என்பது, தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாகும்! ஐயா அவர்களுடைய சிந்தனைகளும், கொள்கைகளும் இளம் தலைமுறைக்கு என்றும் வழிகாட்டும்! ஆனைமுத்து ஐயா அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கத்தையும், அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

-தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 

https://www.thaarakam.com/news/2fc5c815-4da3-49f9-857d-c93847c2c1b5

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.