Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடிகுண்டுகளுடன் சிக்கிய 3 வாலிபர்கள்: இலங்கை அமைச்சரை கொல்ல திட்டம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெடிகுண்டுகளுடன் சிக்கிய 3 வாலிபர்கள்:

இலங்கை அமைச்சரை கொல்ல திட்டம்?

ஜூன் 27, 2007

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் பதுங்கியிருந்த 3 வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். பெரியகுளத்திற்கு வந்த இலங்கை அமைச்சரைக் கொல்ல அவர்கள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டை கரட்டு என்ற இடத்தில் வனப் பகுதியில் சிலர் தங்கியிருப்பதாக போலீஸாரிடம் விறகு பொறுக்கச் சென்றவர்கள் தெரிவித்தனர். அவர்களின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாகவும் கூறினர்.

இதையடுத்து போலீஸார் துரிதமாக நடவடிக்கையில் இறங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் துப்பாக்கி சகிதம் அந்தப் பகுதியை முற்றுகையிட்டனர். பொதுமக்களும் திரண்டு வந்தனர்.

போலீஸாரையும், பொதுமக்களையும் பார்த்த அந்த நபர்கள் அங்கிருந்து ஓட முயன்றனர். ஆனால் போலீஸாரும், பொதுமக்களும் சுற்றி வளைத்ததில் 3 இளைஞர்கள் சிக்கினர். 4 பேர் தப்பி விட்டனர்.

சிக்கியவர்கள் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தபோது அங்கு சமையல் பாத்திரங்கள், ஜமுக்காளம் போன்றவை இருந்தன. அவர்களிடம் ஏராளமான துப்பாக்கிகளும் இருந்தன. அவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுதவிர தரைக்குள் நூற்றுக்கணக்கான டெட்டனேட்டர்கள், கையெறி குண்டுகள், நாட்டு வெடிகுண்டுகளையும் அவர்கள் பதுக்கி வைத்திருந்தனர். அவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்டவர்களில் ஒருவர் பெயர் வேல்முருகன். இவர் இ.புதுக்கோட்டையைச் சேர்ந்தவர், மதுரை சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். இன்னொருவர் பழனிவேல். இவர் சேலம் மாவட்டம் சின்னூரைச் சேர்ந்தவர். மூன்றாவது நபர் முத்துச் செல்வம். இவர் மதுரை, சமயநல்லூரைச் சேர்ந்தவர்.

இவர்களில் ஒருவர் கொடைக்கானலில் ரகசியமாக செயல்பட்டு வரும் மக்கள் விடுதலை இயக்கம் என்ற நக்சலைட் அமைப்பிடம் பயிற்சி பெற்றவர் எனத் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் படை அவருடன் கொடைக்கானல் விரைந்தது.

அங்கு பண்ணைக்காடு கஸ்தூரிபாய்புரத்தில் உள்ள துரைராஜ் என்பவருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் வாடைக்கு இருந்து வரும் சுரேஷ் மற்றும் சேகர் என்பவரைப் பிடிக்க போலீஸார் சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் சிக்கவில்லை.

அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டபோது, நக்சலைட் அமைப்பின் துண்டுப் பிரசுரங்களும், லெனின் குறித்த புத்தகமும் கிடைத்தன. இவர்கள் இருவரும்தான் நக்சலைட் அமைப்புக்கு ஆள் சேர்த்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மக்கள் விடுதலை இயக்கத்தில் ஏராளமான மாணவர்கள் இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். தேனி, திண்டுக்கல், மதுரை பகுதியில் இவர்கள் ரகசியமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த சிலர் பெரியகுளத்தில் பிடிபட்டிருப்பது மதுரை, திண்டுக்கல் சரக போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி சரக டிஐஜி நந்தகோபாலன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். அதேபோல சென்னையிலிருந்து கியூ பிரிவு எஸ்.பி. அசோக்குமாரும் பெரியகுளம் வந்துள்ளார்.

பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரிக்கு அருகில்தான் இந்த 3 பேரும் பிடிபட்ட வனப்பகுதி உள்ளது. நேற்று இலங்கை விவசாய அமைச்சர் பெர்னாண்டோ இந்தக் கல்லூரிக்கு வந்தார். எனவே இவர்கள் இலங்கை அமைச்சரைக் கொல்லும் திட்டத்துடன் அங்கு பதுங்கியிருந்தார்களா என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/06/27/naxal.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திரா நக்சலைட்டுகள் பண உதவி: வெடிகுண்டுகளுடன் பிடிபட்ட 3 பேரும் நாசவேலைக்கு சதி செய்தனர்- கொடைக்கானல் மலையில் ஆயுத பயிற்சி

பெரியகுளம், ஜுன். 27-

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் வெடிகுண்டுகளுடன் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கிராம மக்கள் உதவியுடன் மலைப்பகுதியை சுற்றி வளைத்த போது வேல் முருகன் (வயது19), பழனி வேல் (26), முத்துசெல்வம் (22) ஆகிய 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர்.

பிடிபட்ட 3 பேரில் வேல் முருகன் மதுரை சட்டக்கல்லூரி யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இவரது சொந்த ஊர் பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டை ஆகும். பழனிவேலின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் சின்னனூர் ஆகும். முத்துசெல்வம் மதுரை சமயநல்லூரைச் சேர்ந்தவர். இவர் எலக்ட்ரானிக் என்ஜினீய ரிங் படித்து வந்தார்.

இவர்களிடமிருந்து 5 மூடை வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்கள் தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மக்கள் போர் படை இயக்கத்தை சேர்ந்தவர் கள் என்பதும் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக பெரியகுளம் பகுதிக்கு வந்ததும் தெரிய வந்தது.

இவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. இந்த கும்பல் தமிழ்நாட்டில் நாசவேலைகளை அரங்கேற்ற தீவிரவாத கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு சதி திட்டம் தீட்டி வந்தது. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக ஆயுதப்பயிற்சி எடுத்து உள்னர். இதைத் தொடர்ந்து பெரியகுளம் மலைப்பகுதியிலும் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக துப்பாக்கிகளையும், வெடி குண்டுகளையும் பதுக்கி வைத்துள்ளனர்.

இந்த கும்பலுக்கும் ஆந்திர மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகளுக்கும் ரகசிய தொடர்பு இருந்து உள்ளது. அங்கிருந்து இவர்களுக்கு பணம் மற்றும் ஆயுதங்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆந்திர நக்சலைட்டுகள் தவிர மேலும் சில தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த கும்பலுக்கு தலை வனாக இருந்த செயல் பட்டவன் பெயர் ராஜா. இவன் சென்னையை சேர்ந்த வன். தப்பி ஓடிய 7 பேரில் ராஜாவும் ஒருவன். மேலும் ரமேஷ், சுரேஷ், பிரபு, பிரகாஷ், இன்னொரு சுரேஷ், சங்கர் ஆகிய 6 பேரும் தப்பி ஓடியவர்களில் முக்கிய மானவர்கள் ஆவார்கள். இவர்கள் மதுரை கடமலைக் குண்டு, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்றுகிடைத்த தகவலைத் தொடர்ந்து கிï பிரிவு போலீசார் அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுதப்பயிற்சி பெற்று தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நாசவேலைகளை அரங்கேற்ற இவர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவமும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை பிடிக்க உளவுத்துறை போலீசாரும் கண்காணித்து வருகிறார்கள்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட வேல்முருகன், பழனிவேல், முத்துசெல்வம் ஆகிய 3 பேரும் இன்று காலை பெரியகுளம் மாஜிஸ்திரேட்டு சிங்கராஜ் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அந்த 3 பேரையும் வருகிற 11-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தர விட்டார்.

இதைத் தொடர்ந்து 3 பேரையும் பெரியகுளம் டி.எஸ்.பி.கனகராஜ், இன்ஸ் பெக்டர் பொன்னுசாமி ஆகியோர் தலைமையிலான துப்பாக்கி ஏந்திய போலீசார் பெரியகுளம் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். இங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகு மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

மாலைமலர்

பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரிக்கு அருகில்தான் இந்த 3 பேரும் பிடிபட்ட வனப்பகுதி உள்ளது. நேற்று இலங்கை விவசாய அமைச்சர் பெர்னாண்டோ இந்தக் கல்லூரிக்கு வந்தார். எனவே இவர்கள் இலங்கை அமைச்சரைக் கொல்லும் திட்டத்துடன் அங்கு பதுங்கியிருந்தார்களா என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அமைச்சர் மில்ரோய் பெர்னான்டோ - தோட்ட உள்கட்டமைப்ப அபிவிருத்தி அமைச்சர், இவரை போய்......?

எப்படியும் முளங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடுவது என்று கங்கணம் கட்டி நிற்கிறது தமிழ் நாட்டு Q (?) பிரிவு!

Edited by சாணக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.