Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 1 | ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 1

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம்…

 

 

ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம்
ஒவ்வோ ரணுவாய்ச் சிதைந்தோம்!
காலத் தலைவன் காத்தெமைப் புரந்த
கனித்தமி ழீழத்தில் புதைந்தோம்!
ஞாலத் தெவரும் நாடினா ரில்லை
நாங்கள்ஏன் செத்து மடிந்தோம்!
மூலத் தாயக முள்ளி வாய்க்காலில்
முடைநாற் றத்திலே கிடந்தோம்!

 

https://www.ilakku.org/?p=49372

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 2 | முள்ளி வாய்க்காலில் மூண்டவெம் போரில்…

 

 

முள்ளி வாய்க்காலில் மூண்டவெம் போரில்
முடுக்கினார் பகைவர்யாம் உருண்டோம்!
கொள்ளிவைத் தழித்தார் குதறினார் கொன்றார்
குமுறிக் குமுறிவுடல் புரண்டோம்!
அள்ளி அணைத்திட யாருமில் லாமலே
அழுது அழுதுவுயிர் கரிந்தோம்!
வெள்ளி முளைக்கவோ விடுதலை பூக்கவோ
வியன்தமிழ் ஈழத்தில் எரிந்தோம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 3 | கட்டுமரம் ஏறிவந்து கரையொதுங்கி….

 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 3

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்

 

 

 

கட்டுமரம் ஏறிவந்து கரையொதுங்கி நின்றவுன்னைக் கைபிடித்து வைத்ததற்கோ பாவி சுட்டகுண்டு பேய்நெருப்புச் சூறையிலே சுற்றமெல்லாம் சொந்தமின்றி விட்டதடா ஆவி! நட்டநடுக் காட்டினிலே நாய்நரிகள் ஊளையிலே நாற்புறமும் கிடக்குதடா சொந்தம்! கெட்டழிந்து விட்டோமே கிள்ளியெறி யாமையினால் கீழ்மையனே சிங்களவ புத்தா!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 4 | கண்கள் சூன்றார் கைகள் பிணித்தார்….

 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 4

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

 

 

கண்கள் சூன்றார் கைகள் பிணித்தார் கழுத்துகள் நெரித்தார் சிரித்தார்! பண்கள் மிழற்றும் பைந்தமிழ் ஈழத்தில் பாவிகள் ஏன்எமைப் பிரித்தார்! பெண்கள் தொட்டார் பிள்ளைகள் சுட்டார் பெரும்பழி செய்து நட்டார்! மண்ணில் அறம்புகல் மாந்தரெல் லாரும் மறந்தெமை ஏன்கை விட்டார்!

 

https://www.ilakku.org/?p=49571

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 5 | இந்தியர் சிங்களர் இணைந்து கொன்றெமை….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 5
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

 

 

இந்தியர் சிங்களர் இணைந்து கொன்றெமை
எரித்துக் கரித்துப் பொரித்தாரே!
மந்திகள் கைப்பூ மாலைகள் என்னஎம்
மக்கள் சிதைந்து மரித்தாரே!
அந்திச் செவ் வானமாய் நந்திப் பெருங்கடல்
அருந்தமிழ்க் குருதியில் ஆனதுவே!
சிந்திய கண்ணீர் ஆறுகள் பெருகிச்
செங்கடல் நந்தியில் போயினவே!

https://www.ilakku.org/?p=49634

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 6 | குயில் கூவும் காட்டினிலே குள்ளநரிக் கூட்டமம்மா….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 6

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

 

குயில் கூவும் காட்டினிலே குள்ளநரிக் கூட்டமம்மா
குரல்வளையைக் கடித்துக் குதறுதம்மா!
மயிலாடிக் களித்தவன்னி மாகுண்டால் எரிந்ததம்மா
மண்மேடாய்த் தமிழீழம் ஆனதம்மா!
மைம்மா முகில்தடவிச் சிரித்தமுல்லை மாடமெல்லாம்
மகிந்தப்பேய் கால்குதித்து ஓடுதம்மா!
செய்யபுகழ்க் கதிர்விரிந்த செந்தமிழ்மா ஈழமெல்லாம்
சேர்ந்த இருள் கார்பரவிக் கவிந்ததம்மா!

 

https://www.ilakku.org/?p=49749

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 7 | கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்….

 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 7

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

 

 

கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்
கோமான் எங்கள் பிரபாகரன்
முற்றம் முளைத்தயெம் விடுதலை வாழ்வு
முள்ளி வாய்க்காலில் முடிந்ததுவோ!
சுற்றும் பிணமலை சுடுபிணக் காடுகள்
சோகம் சொல்லியழ உறவில்லையோ!
ஏற்றுக் கிறந்தோம் எவர்க்கிடர் புரிந்தோம்
ஏன்எம் மண்ணில் எரிந்தோம்!

 

https://www.ilakku.org/?p=49924

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 8 | கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 8
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

 

 

அன்னையென் தமிழே ஆருயிர்த் தேவிவுன் அடியினில் சிதறிச் சாய்கின்றோம்! முன்னவர் வாழ்ந்த முள்ளிவாய்க் காலில் மூட்டிய கணைகளில் தீய்கின்றோம்! சின்னவன் சிறியவன் சிங்களன் விரட்டிச் செந்தமிழ் ஈழம் காக்கின்றோம்! மன்னவன் நாளை மணிமுடி புனைகையில் மலர்களாய் மாறிப் பூக்கின்றோம்!

 

 

https://www.ilakku.org/?p=50103

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 9 | வானில்வரும் மண்ணில்வரும் வண்கடலைக் கலக்கிவரும்….

 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 9
தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

 

 

வானில்வரும் மண்ணில்வரும் வண்கடலைக் கலக்கிவரும்
வல்லவன்எம் மன்னன்படை பாரடா!
கானில்வரும் கடுகிவரும் கரும்புலியாய்ப் பெருகிவரும்
காடையனே நீயழிந்தாய் போரடா!
ஊனில்வரும் உயிரில்வரும் ஒண்டமிழ்த்தாய் தேரும்வரும்
உத்தமர்நாம் சொல்லுகிறோம் கேளடா!
தேனில்வரும் சேதிவரும் தீந்தமிழ்மா ஈழம்வரும்
தேம்பியவர் குறித்துவைத்தோம் நாளாடா!

 

https://www.ilakku.org/?p=50109

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.