Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம் எஸ் விஸ்வநாதன் பற்றிய சுவாரஸ்யங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம் எஸ் விஸ்வநாதன் பற்றிய சுவாரஸ்யங்கள்

 

  • இயற்பெயர் - மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன்
  • சினிமா பெயர் - எம் எஸ் விஸ்வநாதன்
  • பிறப்பு - 24-ஜுன்-1928
  • இறப்பு - 14-ஜுலை-2015
  • பிறந்த இடம் - பாலக்காடு - கேரளா
  • சினிமா அனுபவம் - 1940 - 2015
  • துணைவி - ஜானகி (இறப்பு - 2012)
  • பெற்றோர் - சுப்ரமணியன் - நாராயணி
  • புனைப்பெயர் - மெல்லிசை மன்னர்

 

spacer.png

 

ஆரம்ப காலங்களில் ராமமூர்த்தி விஸ்வநாதன் என்று பணிபுரிந்து கொண்டிருந்த இந்த இரட்டையர்களின் பெயர் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று மாறியது கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் "பணம்" திரைப்படத்திலிருந்துதான்.

 

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸ்" நிறுவனத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்த முதல் திரைப்படம் கேஆர்.ராமசாமி, சாவித்திரி ஜோடியாக நடித்த "சுகம் எங்கே" என்ற படமாகும்.

 

பின்னணிப் பாடகர் டிஎம் சௌந்தர்ராஜன், விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இந்த இரட்டையரின் இசையில் பின்னணி பாடிய முதல் படம் "குலேபகாவலி" பாடல் "அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்".

 

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய முதல் பாடல் "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்கு சொந்தம், குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்கு சொந்தம்" என ஆரம்பமாகும் "பாசவலை" திரைப்பட பாடலாகும்.

 

விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இந்த இரட்டையர்களுக்கு "மெல்லிசை மன்னர்கள்" என்ற பட்டத்தை வழங்கியவர் கவிஞர் கண்ணதாசன்.

முழுக்க முழுக்க பாரம்பரிய இசையான கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு, கிளாஸிக்கலாக இருந்த திரையிசையை லைட் கிளாஸிக்கலாகவும், வெஸ்டர்னைஸாகவும் பாடலின் ராக லட்சணங்கள் மாறாமல் ஜனரஞ்சகமாக அனைவரும் விரும்பி கேட்கும் வகையில் மெல்லிசையாக தந்து வெற்றிகண்டவர் எம் எஸ் விஸ்வநாதன்.

 

சிறுவனாக இருந்தபோது நடிகனாக வேண்டும் என்ற ஆசையோடு இருந்த எம் எஸ் விஸ்வநாதனுக்கு ஜுபிடர் பிக்சர்ஸின் "கண்ணகி" திரைப்படத்தில் பால கோவலனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்தார். பால கண்ணகியாக பிரபல பின்னணிப் பாடகி டி வி ரத்தினம் நடித்திருந்தார். ரஷ் பார்க்கும் பொழுது கண்ணகிக்கு தம்பி போல் எம் எஸ் விஸ்வநாதன் இருந்ததால் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

 

பின்னர் அதே "ஜுபிடர் பிக்சர்ஸ்" அலுவலகத்தில் ஆபீஸ் பையனாக பணிபுரியத் தொடங்கினார் எம் எஸ் விஸ்வநாதன்.

 

ஜுபிடர் பிக்சர்ஸ்" நிறுவனத்தின் நிரந்தர இசை அமைப்பாளராக இருந்து வந்த எஸ்எம் சுப்பையா நாயுடுவிடம் ஆர்மோனிஸ்டாகவும், இசை உதவியாளராகவும் பணிபுரிந்திருக்கின்றார் எம் எஸ் விஸ்வநாதன். இசை அமைப்பாளர் சி ஆர் சுப்பராமனிடமும் இசை உதவியாளராக பணிபுரிந்திருக்கின்றார்.

 

எம்ஜிஆருக்கு எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்த முதல் படம் "ஜெனோவா". இத்திரைப்படத்திற்கு ஞானமணி, டிஏ கல்யாணம் மற்றும் எம்எஸ் விஸ்வநாதன் என மூன்று இசை அமைப்பாளர்கள் இசை அமைத்திருந்தனர்.

 

நான் "பட்டத்து ராணி பார்க்கும் பார்வையில்" எகிப்திய இசையை கேட்டேன். "தென்றல் வந்து வீசாதோ" பாடலில் தென்பாண்டி மண்டலத்தின் மண்வாசனையை கண்டேன். "அபூர்வ ராகத்தில்" நளினமான கர்நாடக சங்கீதத்தை அனுபவித்தேன். "முத்தமிடும் நேரம் எப்போ"வில் மெக்ஸிகன் இசையை கேட்டேன். உலகத்தில் உள்ள அனைத்து இசையும் அறிந்தவர் எம் எஸ் விஸ்வநாதன் என்று கண்ணதாசன் பெருமையாக கூறியிருந்தார்.

 

விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் சேர்ந்து இசை அமைத்த கடைசி திரைப்படம் எம் ஜி ஆர் நடிப்பில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த "ஆயிரத்தில் ஒருவன்".

 

எம்எஸ் விஸ்வநாதன் இசை அமைப்பில் வெளிவந்த "தீர்க்க சுமங்கலி" திரைப்படத்தில் வரும் "மல்லிகை என் மன்னன் மயங்கும்" என்ற பாடலின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்.

 

ம்எஸ்வி.,யை சந்திப்பதற்கு முன் எனக்கு சோற்றுக்கே வழியில்லை. அவரை சந்தித்த பின் எனக்கு சாப்பிட நேரமில்லை என்று பெருமைபட நினைவு கூர்ந்தவர் மறைந்த வாலிப கவிஞர் வாலி அவர்கள்.

 

ஒரு பாடலுக்கு அதிகமான வயலின் இசைக் கருவிகளை பயன்படுத்திய முதல் இசை அமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன். படம்: "புதிய பறவை". பாடல்: "எங்கே நிம்மதி".

 

ஒரு பாடகரோடு இணைந்து வயலின் இசைக்கருவி பேசுவது போல பல பாடல்கள் எம் எஸ் விஸ்வநாதன் கைவண்ணத்தில் வந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றிரண்டு மட்டும் நேயர்களின் நினைவுகளுக்காக. பாடல்: "வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா". படம்: "பட்டினப்பிரவேசம்". பாடல்: "எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்". படம்: "முத்தான முத்தல்லவோ". பாடல்: "மெல்லப் போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப் போ". படம்: "காவல்காரன்".

 

இந்திய ராகங்களில் மேற்கத்திய இசைக்கருவிகளைக் கொண்டு முதன் முதலில் பாடல்கள் மெட்டமைக்கப்பட்டதும் இவராலே.

 

இப்போதும் இலக்கியம் சார்ந்த தமிழ் திரையிசைப் பாடல்களை நாம் தொகுக்க நேர்ந்தால், ஒவ்வொருவரின் நினிவுகளிலும் சட்டென வருவது "கர்ணன்" படப் பாடல்கள் என்றால் அது மிகையன்று. இப்படத்தின் அத்தனைப் பாடல்களையும் வெறும் 72 மணி நேரத்தில் கம்போஸ் செய்யப்பட்டது என்றால் இந்த விந்தை மனிதரை இன்றும் நாம் வியப்போடு உற்று நோக்கத் தோன்றும்.

 

எம்எஸ் விஸ்வநாதன் பயன்படுத்தாத இசைக் கருவிகளும் இல்லை, இசை வார்ப்புகளும் இல்லை எனும் அளவிற்கு இசையை ஒரு தவமாக நினைத்து இசைப் பணியாற்றியவர். கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை, வட்டார வழக்கு என அத்தனை பரிமாணங்களிலும் தனக்கான முத்திரையை தனித்தன்மையுடன் பதித்து மிகப் பெரிய வெற்றி கண்டவர்.

 

"தெய்வத்தாய்" திரைப்படத்தில் வரும் "ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்" என்ற பாடலில் ஆப்பிரிக்கன் இசைக்கருவியான பாங்கோஸ்" எனும் இசைக்கருவியைக் கொண்டே பாடலை ஆரம்பித்திருக்கும் அழகே அலாதியான ஒன்று. அதேபோல் "புதிய பறவை" திரைப்படத்தில் வரும் "பார்த்த ஞாபகம் இல்லையோ", "பணத்தோட்டம்" திரைப்படத்தில் வரும் "பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா" என்று பல பாடல்களை உதாரணமாக சொல்லிக் கொண்டே போகலாம்.

 

எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைப்பில் "கிடார்" பயன்பாடு என்று எடுத்துக் கொண்டால் பல நூறு பாடல்களை சொல்ல முடியும். ஊதாரணமாக "பச்சை விளக்கு" திரைப்படத்தில் வரும் "தூது செல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி" என்ற பாடலில் பாடல் முழுதும் கார்ட்ஸோடு கிடார் இசை பயணமாவது அலாதியான ஒன்று. "நெஞ்சில் ஓர் ஆலயம்" திரைப்படத்தில் வரும் "எங்கிருந்தாலும் வாழ்க" என்ற ஒரு சோகப் பாடலில் மாண்டலினோடு கிடாரை பயன்படுத்தி பரவசப்படுத்தியிருப்பார் மெல்லிசை மன்னர். "தெய்வத்தாய்" திரைபப்டத்தில் வரும் "வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ", "காத்திருந்த கண்கள்" திரைப்படத்தில் வரும் "காற்று வந்தால் தலை சாயும் நாணல்", "என் கடமை" திரைப்படத்தில் வரும் "மீனே மீனே மீனம்மா", "நினைத்தாலே இனிக்கும்" திரைப்படத்தில் வரும் "காத்திருந்தேன் காத்திருந்தேன்" என்று இதன் நீட்சி தொடர்ந்து கொண்டே செல்லும்.

 

quote-sign-left.pngஎங்கிருந்தோ வந்தாள்" திரைப்படத்தில் வரும் "சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே" என்ற பாடலில், சிரிப்புக்குக் கூட ஸ்வரம்; சேர்த்து, பாமாலையாக்கி வெற்றி கண்டவர் மெல்லிசை மன்னர்.

 

திரையிசையில் கவுண்ட்டர் பாய்ண்ட்" என்று ஒரு உத்தி உண்டு. அதாவது ஒரு பாடலின் வரி முடிவதற்குள் அதே வரி மீண்டும் அதன் மேல் தொடர்வதை "கவுண்ட்டர் பாய்ண்ட்" என்பர். இந்த உத்தியை முதன் முதலில் பயன்படுத்தியவரும் மெல்லிசை மன்னரே. "ராஜபார்ட் ரங்கதுரை" திரைப்படத்தில் வரும் "மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்" என்ற பாடலில் பயன்படுத்தியிருப்பார்.

 

1965 ஆம் ஆண்டு பிரிந்த இந்த இரட்டையர் மீண்டும் 1995 ஆம் ஆண்டு நடிகர் சத்யராஜ் நடித்து வெளிவந்த "எங்கிருந்தோ வந்தான்" திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தியாக இசை அமைத்தனர்.

 

மறைந்த ஷெனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லா கான், எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைப்பில் பணியாற்றியிருக்கின்றார். "பாலும் பழமும்" திரைப்படத்தில் வரும் "ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்" என்ற பாடலில் ஒலிக்கும் ஷெனாய் இசை பிஸ்மில்லாகானின் ஷெனாய் இசை.

 

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வந்த "அபூர்வ சகோதரர்கள்" திரைப்படத்தில் அப்பு கதாபாத்திரம் பாடுவதுபோல் வரும் ஒரு துள்ளல் பாடலுக்கு இசைஞானி இளையராஜாவிடம் நடிகர் கமல்ஹாசன் "அன்பே வா" திரைப்படத்தில் வரும் "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்" என்ற பாடல் சாயலில் பாடல் வேண்டும் என கேட்க, அந்த பாடலின் சாயலில் இளையராஜா அமைத்த பாடல்தான் "புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா" என்ற பாடல். இவ்வாறு பல இசை அமைப்பாளர்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன். இவரது பாதிப்பு இல்லாத தமிழ் திரையிசை அமைப்பாளர்களே இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

 

வட்டார வழக்கை பயன்படுத்தி இவரது இசை அமைப்பில் பல பாடல்கள் வந்திருக்கின்றன. அவைகளில் இன்றும் அனைத்து தரப்பு ரசிகப் பெருமக்களாலும் பெரிதும் விரும்பப்படுவது "அனுபவி ராஜா அனுபவி" என்ற படத்தில் வரும் "முத்துக் குளிக்க வாரீயளா" என்ற பாடல் என்றால் அது மிகையன்று.

 

பெரிய இடத்துப் பெண்" திரைப்படத்தில் வரும் "அன்று வந்ததும் அதே நிலா" என்ற பாடலில் வரும் சச்சச்சா பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இன்றளவும் பல இசை நிகழ்ச்சிகளில் விரும்பிப்பாடக் கேட்கிறோம். லத்தின் அமெரிக்க இசை சாயலில் அமைக்கப்பட்ட இப்பாடல் வெளியான ஆண்டு 1963. இன்றும்; நாம் இப்பாடலை கேட்டு மகிழ்கின்றோம் என்றால், மெல்லிசை மன்னரின் இசை காலங்கள் கடந்து காவியமாக நிலைத்திருப்பதையே காட்டுகிறது.

 

Edited by அன்புத்தம்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.