Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலம் தரும் நவ கைலாய தரிசனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவ கைலாயங்கள்

சிவனிற்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் நவ கைலாயங்கள் என்று சொல்லப்படும் இந்த 9 கோவில்களும் நாம் முற்பிறப்புகளிலும் மற்றும் இந்த பிறப்பிலும் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களிலிருந்து விடுபட மிகவும் முக்கியமானவை ஆகும். இக் கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கிரகங்கள் ஆட்சி பெற்று விளங்குகின்றன. குறிப்பாக இந்த சிவன் கோவில்கள் ஒன்பதும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் கங்கையைவிட அதிக புண்ணியம் தாமிரபரணி ஆற்றிற்கு உள்ளது என்று “தாமிரபரணி மகாத்மியம்”சொல்கிறது.

                           1. பாப நாசம் 2. சேரன்மாதேவி 3. கோடக நல்லூர் இவை மூன்றும் மேலக்கைலாயங்கள் என்றும்,
                                 4. குன்னத்தூர் 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும்
                           7. தென்திருப்பேரை 8. ராஜபதி 9. சேர்ந்தபூமங்கலம் என்ற கடைசி மூன்றும் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

                         சிவன் கோவில்கள் பல இருக்க இந்த நவ கைலாங்களிற்கு ஏன் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பார்ப்போம். சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குருமுனி என்று அழைக்கப்பட்ட அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி என்பவராகும். இவரிற்கு தன் குருவான அகத்திய மகரிஷியின் அருளாசியுடன் எப்படியாவது சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்ற மிகப் பெரிய ஆவல் இருந்தது. தனது குருவிடம் தனது ஆவலைக் கூறி அதற்கான வழிமுறை என்ன என்று கேட்டார். அதற்கு அகத்திய மகரிஷியும் இந்த தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை நான் மிதக்க விடுகிறேன். அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும். அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் உமக்கு சிவபெருமானின் காடசி கிடைத்து அதன் மூலம் நீர் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி வழிபட்டு முக்தி அடைந்தார்.

                        இதன்படி நாமும் நடந்தால் எமக்கும் எம்பெருமான் ஈசனின் அருள் கிடைத்து சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

நவகைலாயங்களும் -- நவக்கிரகங்களின் ஆட்சியும்.
1. பாபநாசம்        -- சூரியன்
2. சேரன்மாதேவி    -- சந்திரன்
3. கோடகநல்லூர்    -- செவ்வாய்
4. குன்னத்தூர்       -- இராகு
5. முறப்பநாடு       -- குரு
6. ஸ்ரீவைகுண்டம்    -- சனி
7. தென்திருப்பேரை  -- புதன்
8. ராஜபதி          -- கேது
9 சேர்ந்தபூமங்கலம     -- சுக்கிரன்


                          நமக்கு வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களிற்கு காரணம் நாம் முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியங்களேயாகும். நமது பாவங்கள் களையப்பட்டாலே இந்தப்பிறப்பில் நமக்கு நடப்பவை எல்லாமே நமது எண்ணப்படியே நடக்கும். நமது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நமக்கு இன்ப துன்பங்களைத் தருபவை நவக்கிரகங்களாகும். நவக்கிரங்களை திருப்தி செய்யும் போது நமக்கு வரும் துன்பங்களின் வேகத்தினை நாம் குறைத்துக் கொள்ளலாம். நமது கர்மா அல்லது கன்ம வினை என்று சொல்லப்படும் வினையினை முழுமையாக அறுக்கக்கூடியவர் முழுமுதற் கடவுளாம் எம்பெருமான் சிவபெருமானே ஆகும். அவரின் சிவ தலங்களில் நவக்கிரகங்களிற்கு ஆட்சி கொடுத்து மக்கள் தம் பாவங்களை போக்க அவர் அங்கு எழுந்தருளியிருக்கிறார்.

                        நாமும் நவகைலாயங்களிற்கும் சென்று முறைப்படி எம்பிரான் ஈசனை வழிபட்டு வாழ்வில் சகல வளமும் சகல நலமும் பெற்று வாழ்வோமாக.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.

 

மேற்காணும் நவகைலாயங்களில் முதல் மூன்றுகைலாயங்கள் மேலக் கைலாயங்கள் என்றும் அடுத்த மூன்று கைலாயங்கள் நடுக் கைலாயங்கள் என்றும் இறுதியாக உள்ள மூன்று கைலாயங்கள் கீழக் கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. நவகைலாயங்களில் முதல் நான்கு கைலாயங்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும் அடுத்த ஐந்து கைலாயங்கள் தூத்துகுடி மாவட்டத்திலும் அமைந்துள்ளன.
 
நவகைலாயம் தோன்றிய வரலாறு:
 
பொதிகை மலையில் இருந்து தவம் செய்த அகத்திய முனிவருக்கு முதல் சீடராக உரோமச முனிவர் என்பவர் பணிவிடைகள் செய்து வாழ்ந்து வந்தார். அவருக்கு சிவபெருமானைக் கண்டு அருள்பெற்று முக்தி அடைய வேண்டுமென்று விருப்பம். அவர் தவ வலிமை மிக்கவர். அவர் சிவபெருமானையே நினைந்து வழிபட்டு வருபவர். சிவபெருமான் இவர் எண்ணத்தை கண்டு முனிவரது பெருமையை வெளிக்கொண்டு வர அகத்தியர் மூலம் திருவுளம் கொள்கிறார். அகத்தியர் உரோமச மகரிஷியை அழைத்து சிவபெருமானை நவகோள்களாக நினைந்து ஒவ்வொருவரும் வழிபட்டால் கிரகங்கள் ஒன்றும் செய்யாது. எனவே நவகோள்கள் வரிசையில் மக்கள் வணங்குதல் வேண்டும். நீயும் எம்பெருமானைக் கண்டு பேரின்பம் எய்தி முக்தி அடைய வேண்டுமென்று விரும்பினாய். தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் விரும்பியது கிடைக்கும். தாமிரபரணி ஆற்றங்கரையோரமாகவே செல்ல வேண்டும் உன்னுடன் ஒன்பது மலர்களை தண்ணீரில் அனுப்புகிறேன். இம்மலர்கள் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அங்கு சிவனை வழிபட வேண்டும். நீவிர் வழிபடுகின்ற சிவபெருமான் அருள்மிகு கைலாசநாதர் என்றும் அம்மை சிவகாமி என்றும் அழைக்கப்படுவர். பின்னர் சங்கு முகத்தில் நீராடினால் உமது எண்ணம் ஈடேறும் என்று அகத்தியர் கூறுகிறார். அகத்தியர் கூறியவாறு மலர்கள் நிற்கும் இடங்களில் உரோமச முனிவர் சிவனை வழிபட்டு முக்தி அடைந்தார் என்று புராண வரலாறு கூறுகிறது. பிருங்க முனிவரும் நவகைலாயங்களுக்கு வந்து இறைவனை தரிசித்து தன் சாபம் நீங்கி இறைவனை அடைந்ததாக ஒரு வரலாறும் உள்ளது.
 
நவகைலாயம் சான்றுகள்:
 
நவகைலாயம் பற்றிய சான்றுகள்திருவைகுண்டம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் கலியாண குறடு என்ற சிரு மண்டபத்தின் மேலே ஒன்பது இடங்களைப் பற்றிய செய்திகளும் பெயர்களும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இது தவிர உரோமச முனிவர் சிலை சேரன்மகாதேவி கோயிலிலும் திருவைகுண்டம் கோயிலிலும் ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு செய்திகளும் சான்று கூறுகின்றன.
 
பாபநாசம்:
 
நவகைலாயங்களில் முதல் கைலாயம் பாபநாசம். இத்தலத்தின் பெயரில் இருப்பது போலவே நாம் செய்த பாவங்களை நாசம் செய்வதற்கு நாம் செல்ல வேண்டிய தலம் பாபநாசம் ஆகும். இத்தலத்தில் சன்னதி எதிரில் உள்ள தாமிரபரணி படித்துறையில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இத்திருக்கோயிலின் மூலவர் ருத்திராட்சத்தினால் ஆனது. தாமிரபரணி ஆறு பொதிகை மலையில் தோன்றி சமவெளியை அடையும் இடமே பாபநாசம். இக்கோயில் ஏழு நிலைகளைக் கொண்ட பெரிய கோபுரத்துடன் அமைந்துள்ளது.
 
புராண வரலாறு:
 
சிவபெருமானின் திருமணகாலத்தில் வடபுலம் தாழ்ந்ததால் அதை சமநிலையாக்க அகத்தியமாமுனிவரை தென்னாடு செல்லுமாறு இறைவன் பணித்தார். பொதிகை மலை அடைந்த அகத்திய முனிவர் சிவபெருமானின் திருமண கோலம் காண விழைந்தார். இறைவனும் தேவியுடன் ரிஷப வாகனத்தில் பொதிகை மலைச்சாரலிலுள்ள பாபநாசத்திலே வந்து காட்சி தந்தார். வசந்த மண்டபத்தின் மேல் தளத்தில் ஒற்றை மீன் மற்றும் இரட்டை மீன் வடிவங்கள் காணப்படுவதால் இக்கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.
 
அமைவிடம்:
 
இத்திருத்தலம் திருநெல்வேலியிலிருந்து சுமார் நாற்ப்பத்தைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இக்கோயிலுக்கு முக்கூடல் வழியாகவும் சேரன்மகாதேவி வழியாக செல்லலாம்.
 

சூரிய தலம்

தலம்: பாபநாசம்

அம்சம்: சூரியன்

நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம்

மூலவர்: ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர்

அம்பாள்: ஸ்ரீஉலகாம்பிகை

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சந்திர தலம்

தலம்: சேரன்மகாதேவி

அம்சம்: சந்திரன் நட்சத்திரம்: ரோகினி, ஹஸ்தம், திருவோணம்

மூலவர்: ஸ்ரீஅம்மைநாதர்

அம்பாள்: ஸ்ரீஆவுடைநாயகி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

செவ்வாய் தலம்

தலம்: கோடகநல்லூர்

அம்சம்: செவ்வாய் நட்சத்திரம்: மிருக சிரீடம், சித்திரை, அவிட்டம்

மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்

அம்பாள்: ஸ்ரீசிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே சேரன்மகாதேவி செல்லும் கல்லூர் சாலையில் நடுக்கல்லுருக்கு தெற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

புதன் தலம்

தலம்: தென் திருப்பேரை

அம்சம்: புதன்

நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி

மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்

அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை

இருப்பிடம்: ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

குரு தலம்

தலம்: முறப்பநாடு

அம்சம்: வியாழன் (குரு)

நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

மூலவர்: ஸ்ரீகைலாச நாதர்

அம்பாள்: ஸ்ரீசிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சுக்கிரன் தலம்

தலம்: சேர்ந்த பூமங்கலம்

அம்சம்: சுக்கிரன்

நட்சத்திரம்: பரணி, பூராடம், பூரம்

மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்

அம்பாள்: ஸ்ரீசௌந்தர்யா நாயகி

இருப்பிடம்: திருச்செந்தூரில் இருந்து புன்னைக்காயல் செல்லும் சாலையில் ஆத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சனி தலம்

தலம்: ஸ்ரீவைகுண்டம்

அம்சம்: சனி

நட்சத்திரம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி

மூலவர்: ஸ்ரீ கைலாச நாதர்

அம்பாள்: ஸ்ரீசிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ராகு தலம்

தலம்: குன்னத்தூர் (சங்காணி)

அம்சம்: ராகு

நட்சத்திரம்: திருவாதிரை, சுவாதி, சதயம்

மூலவர்: ஸ்ரீகோத்த பரமேஸ்வரர் என்ற கைலாய நாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் திருவேங்கடநாதபுரம் குன்னத்தூருக்கு தெற்கே உள்ளது. இது சங்காணி சிவன் கோவில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது.

கேது தலம்

தலம்: ராஜபதி

அம்சம்: கேது

நட்சத்திரம்: அசுவதி, மகம், மூலம்

மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்

அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை என்ற சிவகாமி

இருப்பிடம்: தென்திருப்பேரை கோவிலில் இருந்து அதே பாதையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த நவக் கோவில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கைலாயத்தை அடைந்த பலன் உண்டு என்பது சான்றோர் வாக்கு. இந்த ஒன்பது கோவில்களில் தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்குவது மட்டுமின்றி புண்ணியமும் வந்து சேரும்.இந்தத் தலங்களை மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தரிசனம் செய்தால் கோடி புண்ணியம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.