Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கடலுக்கு உள்ளேயும் ஆய்வு".. பெரிய "ஆபரேஷனை" கையிலெடுக்கும் தமிழ்நாடு அரசு.. மீளும் 2000 வருட வரலாறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"கடலுக்கு உள்ளேயும் ஆய்வு".. பெரிய "ஆபரேஷனை" கையிலெடுக்கும் தமிழ்நாடு அரசு.. மீளும் 2000 வருட வரலாறு

Shyamsundar IUpdated: Sun, Jun 13, 2021, 10:26 [IST]

மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 -2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது.

முடிவு

முடிவு

இந்த நிலையில் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை எம்பி சு. வெங்கடேசன் இந்த ஆய்வில் உடன் இருந்தார். இங்கு அருங்காட்சியகம் அமைப்பும் பணிகளையும், அதன் கட்டுமானங்களையும் இவர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வு

ஆய்வு

இந்த நிலையில் இங்கு உலகத்தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும். சர்வதேச தரத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் கீழடி போலவே தமிழ்நாடு முழுக்க பல்வேறு கடல் பகுதிகளில் பல்வேறு வரலாற்று எச்சங்கள் ஆராய்ச்சி செய்யப்படாமல் உள்ளன.

கடல்

கடல்

கீழடி என்று ஒரு இடத்திலேயே 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று பொருட்கள் கிடைக்கும் போது, கடலுக்கு உள்ளே இதை விட பழமையான வரலாற்று சான்றுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு விரைவில் கடல்சார் தொல்லியல் ஆராய்ச்சியை கையில் எடுக்க உள்ளது.

கீழடி

கீழடி

தமிழர்களின் தொல்லியல் வரலாற்றுக்கு கீழடி ஒரு சான்று. ஆனால் இது மிகப்பெரிய சோற்று பானையின் சின்ன பருக்கைதான். இன்னும் பல வரலாற்று பின்னணிகளை பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்பதால் கடல்சார் தொல்லியல் ஆராய்ச்சியை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ளது. ஆனால் இந்த ஆராய்ச்சி அவ்வளவு எளிதானது கிடையாது.

எளிமை

எளிமை

இது மிகவும் சவாலான காரியம். வங்க கடல் பகுதிகளில் தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாடு மக்கள் 2600 வருடங்களுக்கு முன்பு மேற்கொண்ட கடல் சார் வர்த்தகம், கடல் சார் பயணங்கள் குறித்த உண்மைகள், வரலாற்று கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படும். இதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருகிறது.

ஏற்கனவே

ஏற்கனவே

விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சி கடற்கரைக்கு அருகே நடத்தப்பட்டு வருகிறது. கடல் கரையில், சிறிய அளவிலான குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. இதேபோல் மற்ற வங்க கடல் பகுதியிலும் விரைவில் ஆராய்ச்சியை தொடங்க உள்ளனர்.

ஆபரேஷன்

ஆபரேஷன்

தமிழ்நாட்டில் தொல்லியல் ஆராய்ச்சியில் இது மிகப்பெரிய ஆபரேஷனாக இருக்கும். இதற்கான ஆலோசனைகள் மட்டுமே தற்போது நடத்து வருகின்றன. விரைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, வங்காள கரையோரம் பல்வேறு கரைகளில், கடலுக்கு உள்ளேயும் ஆராய்ச்சிகள் தொடங்கப்படும் என்கிறார்கள்.

https://tamil.oneindia.com/news/chennai/tn-government-plans-for-archaeological-research-undersea-after-breakthrough-in-keezhadi-423826.html

பிகு:

எனக்கு இந்த தலையங்கத்தில் உடன்பாடில்லை. இப்போதான் இதை பற்றி ஆலோசிக்கிறார்கள் -ஆனால் ஏதோ ஆய்வு தொடங்கி விட்டதுபோல் சென்சேசனலாக தலைப்பு இட்டுள்ளார்கள். ஆனால் செய்தியை அப்படியே இணைக்க வேண்டும் என்பதால் இணைக்கிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ஒரிசா பாலு போன்றோர் கடலடி ஆய்வை வலியுறுத்தி வந்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.