Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்பை: அடுக்குமாடி குடியிருப்பில் போலி தடுப்பூசி முகாம்? ; அதிர வைக்கும் மோசடி! - நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை: அடுக்குமாடி குடியிருப்பில் போலி தடுப்பூசி முகாம்? ; அதிர வைக்கும் மோசடி! - நடந்தது என்ன?

தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பு கட்டடம்

தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பு கட்டடம்

மும்பையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 390 பேருக்கு வழக்கமாக வரக்கூடிய எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாததால், போடப்பட்டது போலி தடுப்பூசியாக இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மும்பையில் இப்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு நிறுவன வளாகத்திலேயே தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்கின்றனர். சில குடியிருப்பு கட்டடங்களில் இது போன்ற தடுப்பூசி போடும் முகாம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அது போன்ற ஒரு முகாம் மேற்கு மும்பையில் உள்ள காந்திவலியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஹிராநந்தினி ஹெரிட்டேஜ் என்ற அடுக்கு மாடி குடியிருப்புக்கு 3 பேர் வந்து அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையின் பெயரை சொல்லி கொரோனா தடுப்பூசி முகாம் நடந்த வந்திருப்பதாக தெரிவித்தனர். உடனே அங்கு வசித்தவர்களும் கட்டடத்திற்குள் ஒரு இடத்தை கொடுத்து தடுப்பூசி முகாமிற்கு அனுமதி கொடுத்தனர். முதலில் வந்து பேசும் போது கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இருந்து வருவதாக தெரிவித்தனர்.

தடுப்பூசி போட்டவர்கள்
 
தடுப்பூசி போட்டவர்கள்

ஆனால் தடுப்பூசி போடும் தினத்தில் வேறு ஒரு மருத்துவமனையில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்தனர். அக்கட்டடத்தில் வசிப்பவர்களும், `எங்கிருந்து வந்தால் என்ன தடுப்பூசி போட்டால் சரி’ என்று நினைத்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஒவ்வொருவரும் தடுப்பூசிக்காக ரூ.1,260 கொடுத்தனர். இந்த முகாமில் 390 பேர் பணம் கட்டி தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதாக கூறி 3 பேரும் போட்டுவிட்டு சென்றனர்.

 

தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் வழக்கமாக வரக்கூடிய உடல் வலி, காய்ச்சல் வரவில்லை. சாதாரண பக்கவிளைவுகள் அனைவருக்கும் ஏற்படாது என்றாலும், அவர்களுக்கு வந்த கொரோனா தடுப்பூசி சான்றிதழில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மருத்துவமனையின் பெயர் இடம் பெற்று இருந்தது. ஒன்றில் கோகிலாபென் மருத்துவமனை, மற்றொன்றில் நானாவதி மருத்துவமனை என மொத்தம் மூன்று மருத்துவமனைகளின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. இதனால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.

இதனால் உண்மையிலேயே வந்தவர்கள் கொரோனா தடுப்பூசிதான் போட்டார்களா அல்லது குளுகோஸ் தண்ணீரை தடுப்பூசி என்று செலுத்திவிட்டு சென்றார்களா என்று சந்தேகமாக இருப்பதாக தனது மனைவியுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட கவுரவ் ஷா தெரிவித்தார். அச்சான்றிதழ்களில் இடம் பெற்று இருந்த மருத்துவமனையில் இது குறித்து விசாரித்த போது, `நாங்கள் அப்படி தடுப்பூசி முகாம் எதையும் ஏற்பாடு செய்யவில்லை’ என்று தெரிவித்தனர். இதனால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவிட் - 19 தடுப்பூசி
 
கோவிட் - 19 தடுப்பூசி

கோவின் மொபைல் செயலியிலும் தாங்கள் பதிவு செய்ததாக நேகா என்ற மற்றொருவர் தெரிவித்தார். நானாவதி மருத்துவமனை செய்தி தொடர்பாளரோ, `தாங்கள் எந்த வித தடுப்பூசி முகாமிற்கும் ஏற்பாடு செய்யவில்லை’ என்றும் `சம்பந்தப்பட்ட மக்கள் போலீஸில் புகார் செய்யவேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டார். இதே கருத்தைத்தான் கோகிலாபென் மருத்துவமனையும் தெரிவித்துள்ளது. அதோடு தடுப்பூசி போட்ட பிறகு முகாமிற்கு வந்த மூன்று பேரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சுரேஷ் ககானி , `இது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றதோடு முடித்துக்கொண்டார். இப்போது தடுப்பூசி போட்டுகொண்ட அனைவரும் உள்ளூர் எம்.எல்.ஏ. யோகேஷ் சாகரிடம் புகார் செய்துள்ளனர். ``இது மக்களின் உயிரோடு தொடர்புடையது என்பதால், சம்பந்தப்பட்ட நிர்வாகம் முழுமையாக விசாரிக்கவேண்டும்” என்று யோகேஷ் சாகர் தெரிவித்தார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக இரண்டு பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சான்றிதழில் வேறு வேறு மருத்துவமனையின் பெயர் இடம் பெற்று இருப்பதிலிருந்தே இது மோசடி என்று தெரிகிறது என்று அக்கட்டடத்தில் வசிக்கும் வோரா என்பவர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி போடுவதாக கூறி மிகவும் பிரபலமான ஒரு குடியிருப்பு கட்டடத்தில் சென்று கிட்டதட்ட 400 பேருக்கு போலி தடுப்பூசி போட்ட சம்பவம் மும்பை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

https://www.vikatan.com/news/india/is-fake-corona-vaccination-camp-happened-in-mumbai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.