Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறம்-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறம்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது 

எனது வீட்டுக்கு அருகில் தாதியாக பணி புரியும் நோர்வீயப் பெண்மணி ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் நோர்வேயில் உள்ள முக்கியமான பெரிய வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் பிரிவில் வேலை செய்கிறாள். மிகவும் அன்பும் பாசமும் அரவணைப்பும் கொண்ட அழகான இதயம் கொண்டதொரு பெண்மணி இவள்.

இவள் காலையில் வேலைக்கு போகும் போதெல்லாம் வழியில் எந்த மனிதரைக் கண்டாலும் காலை வணக்கம் சொல்லி சிறு நிமிடம்  அன்பாக உரையாடி செல்வார்.வெள்ளை கறுப்பு என்று எந்த இனவாதம் இல்லாததொரு அன்பான மனித நேயம் கொண்டவர். தனது வளர்ப்பு நாயுடனும் என் நேரமும் போகும் போதும் அந்த நாயோடு அவர் உரையாடிக் கொண்டு போவதை பார்க்கும் போதெல்லாம் இவர் மனிதர்கள் மட்டும் இன்றி விலங்குகளுடனும் எவ்வளவு அன்பாகவே இருப்பது தெரியும். அனைத்து ஜீவராசிகளிடத்திலும் அன்பு கொண்ட அறம் சார்ந்து வாழக்கூடிய ஒருவனின் உன்னதமான வாழ்வின் அடிப்படை பண்பு இதுவேயாகும். தெய்வங்கள் கூட சில வேளைகளில் தோற்றுப் போகலாம் சில மனிதர்களின் அன்பும் அறமும் கண்டு.

இவருடன் நான் பல வேளை உரையாடி இருக்கிறேன். இன்று மனிதரை வாட்டி வதைக்கும் கொரோனா தொற்று நோயின் அவலம் பற்றியும் அத்தோடு அவர் பணி புரியும் வைத்தியசாலையில் எவ்வளவு சிரமங்கள் கஸ்ரங்கள் துன்பங்கள் வலிகளோடு சுமக்கும் வாழ்வு பற்றி எல்லாம் சொல்லி கவனமாக இருங்கள் அரசு சுகாதார திணைக்களங்கள் மருத்துவர்கள் சொல்லும் அறிவுரைகள் கேட்டு கவனமாக நடவுங்கள் என்று அடிக்கடி யாரைப் பார்த்தாலும் அறிவுரை சொல்லுவார்.எனவே இவர்கள் எமக்காக சுமக்கும் இந்த துன்பங்களையும் கஸ்ரங்களையும் நினைத்து நாமும் அரசு மக்கள் சுகாதார திணைக்களங்கள் மற்றும் மருத்துவர்கள் சொல்லும் அறிவுரைகளை கேட்டு நாமும் நம்மை பாதுகாத்துக் கொள்வோம். 

நம்மில் சிலருக்கு நாம் நல்லதோ கெட்டதோ ஏதாவது ஒரு ஆலோசனை சொன்னாலோ எழுதினாலோ எனக்கு தான் எல்லாம் தெரியுமே இவர் யார் எனக்கு புத்தி சொல்ல என்று இருப்போரும் உண்டு.இன்னும் சிலர் தங்கள் முதுகில் ஊத்தைகளை காவிக்கொண்டு உத்தமர் போல் நடித்து பிறருக்க பல ஆலோசனை சொல்லும் மனிதர்களும் உண்டு.

வந்த பின் படும் துன்பங்களை விட வரு முன் காப்பதே சிறப்பு. எங்களுக்காக இரவு பகலாக உழைக்கும் இந்த தாதிமாருக்கும் மருத்துவர்களுக்கும் மற்றும் தமது மக்களை காப்பாற்ற அரசாங்கம் எடுத்து வரும் எல்லா நல திட்டங்களுக்கும் நாம் ஒத்துளைப்பு வழங்குவோம். எல்லாமே கடந்து போகும் என்பது போல் விடியும் ஒவ்வொரு காலையும் இவர்களுக்கானதும் எங்களுக்கானதுமான  நம்பிக்கையோடு விடியட்டும். ஏதோ புலம் பெயர்ந்த நாமும் மருத்துவ வசதியும் கொடுப்பனவு வசதியும் கொண்ட ஜனநாயக பண்புகளை மதிக்கக் கூடிய நாடுகளில் வாழ்வதாலும் இந்தப் பண்புகளோடு வாழப்பழகியதாலும் தப்பித்து இருக்கிறோம். 

இன்று எத்தனையோ ஏழை நாடுகள் மருந்தும் இன்றி உணவும் இன்றி இழப்புகளோடு எவ்வளவு துன்பங்களை எதிர் கொள்ளுகின்றனர். இந்த நாடுகளின் தவறான கொள்கை வகுப்புக்கள், லஞ்சம் ,ஊழல்,அரசியல் ஸ்திரதன்மையின்மை, இன வாதம், இனங்களுக்கிடையிலான குரோதம் இவைகளும் கூடவே இந்த மக்களை மேலும் மேலும் துன்பங்களுக்கு உள்ளாக்குகின்றன. இந்த அரசியல் தலைவர்களும் அதி தீவிர மத வாதிகளும் இந்த மக்களை தவறான பாதையில் கொண்டு போய் விட்டவர்களும் இந்த தலைவர்களை தெரிவு செய்த மக்களுமே இவர்கள் படும் துன்பவியல் வாழ்வுக்கு காரணமாகின்றனர். (If you depend on leaders you become weak ) என்கிறார் பிரபல தத்துவவியலாளர் ஜிட்டு கிரிஷ்ணமூர்த்தி . சமத்துவமும் சக வாழ்வும் இல்லாமல் அன்பும் அறமும் தொலைந்த வாழ்வாய் மதங்களின் பெயராலும் இனங்களில் பெயராலும் நடக்கும் வன்முறையும் வலி சுமந்த வாழ்வுமே இப்போ மிஞ்சி இருக்கிறது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.