Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை - இங்கிலாந்து முதல் டி-20 ஆட்டம் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலம் பொருந்திய இங்கிலாந்துடனான முதல் டி-20 ஆட்டம் இன்று

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இன்று ஆரம்பமாகிறது.

E4hymzrXMAAttbs.jpg

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை அணி, இங்கிலாந்துடன் மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந் நிலையிலேயே முதலில் ஆரம்பமாகியுள்ள டி-20 தொடரின் முதல் போட்டி கார்டிஃப், சோபியா கார்டீன்ஸ் மைதனாத்தில் இலங்கை நேரப்படி இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் அந் நாட்டு நிலைமைகளின் கீழ் விளையாடுவது இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏனெனில் ஈயோன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக இருந்து வருகிறது.

சில மாதங்களில் ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி டி-20 உலகக் கிண்ணத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள தமது வீரர்களின் திறமை குறித்து இங்கிலாந்து இந்தப் போட்டியில் கவனம் செலுத்தும்.

ஜோஸ் பட்லர் மற்றும் ஜோனி பெர்ஸ்டோவ் போன்றவர்கள் இங்கிலாந்துக்கு முக்கிய வீரர்களாக இருப்பார்கள்.

வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் இலங்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒரு காலத்தில் ஐ.சி.சி. டி-20 தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இலங்கை தற்சமயம் 8 ஆவது இடத்தில் உள்ளது.

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, இங்கிலாந்து 16 டி-20 சர்வதேச போட்டிகளில் வென்றுள்ளதுடன், எட்டு ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது.

அதே காலகட்டத்தில் இலங்கை வெறும் ஐந்து டி-20 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன், 14 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

ஐ.சி.சி. டி-20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணிக்கு இயன் மோர்கன் வெற்றிகரமான தலைவராக கடந்த 2015 முதல் இருந்து வருகிறார்.

அதேசமயம் 2014 ஆம் ஆண்டில் இலங்கை டி-20 உலகக் கிண்ணத்தை வென்ற போதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் நிலை மோசமாகவுள்ளது. 

லசித் மலிங்க, அஞ்சலோ மெத்யூஸ், உபுல் தரங்கா, திசாரா பெரேரா ஆகிய சிரேஷ்ட வீரர்களில் எவரும் தற்சமயம் இல்லாத நிலையில் இங்கிலாந்தை அவர்களது சொந்த கோட்டையில் எதிர்கொள்ளவுள்ளது இலங்கை.

இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கான இலங்கை அணியில் துஷ்மந்த சமீரா, நுவான் பிரதீப் உள்ளிட்ட ஆறு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்த இருவரையும் தவிர, இசுரு உதனா, அசிதா பெர்னாண்டோ, பினுரா பெர்னாண்டோ மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் இலங்கை அணியின் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். 

சுழற்பந்து வீச்சாளர்களின் முதல் தேர்வாக வனிந்து ஹசரங்காவும், அகில தனஞ்சயா, லக்ஷன் சந்தகன், பிரவீன் ஜெயவிக்ராமா ஆகியோரும் இலங்கை அணியில் உள்ளனர். 

மேலும் தசுன் ஷானகா, சாமிகா கருணாரத்ன, தனஞ்சய லக்ஷான், இஷான் ஜெயரத்னே ஆகியோர் அணியை சமநிலைப்படுத்த சகலதுறை ஆட்டக்காரர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

E4fgBjsXEBIXj2m.jpg

இன்றைய ஆட்டம் குறித்து இலங்கை அணித் தலைவர் குசல் பெரேரா கூறுகையில், நாங்கள் களத்தில் தைரியமாக விளையாடினால், வெற்றிகரமான முடிவுகளை அடைய வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க இங்கிலாந்து அணியில் பல முக்கிய வீரர்கள் இல்லாதது இலங்கைக்கு ஒரு அதிர்ஷ்டத்தை அளித்துள்ளது. 

குறிப்பாக சகலதுறை ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் மற்றும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரே ஆர்ச்சர் ஆகியோர் உடல் நலப் பிரச்சினைகள் காரணமாக அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
https://www.virakesari.lk/article/108066

 

 

 

Edited by கிருபன்

  • கிருபன் changed the title to இலங்கை - இங்கிலாந்து முதல் டி-20 ஆட்டம் இன்று
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

8 விக்கெட்டுகளால் இலங்கையை சாய்த்த இங்கிலாந்து

நேற்றிரவு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து, இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

E4mCc6eXEAEj2JQ.jpg

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குசல் பெரேரா தலைமையிலான இலங்கை அணியானது மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்துடன் பலப்பரீட்சை  நடத்துகிறது.

இதில் நேற்றிரவு கார்டீப், சோபியா கார்டியன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து, 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

E4lvKptWQAIowW3.jpg

அணி சார்பில் தசூன் சானக்க 44 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களையும் குசல் பெரேரா 30 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, ஏனைய வீரர்கள் சொதப்பலான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

129 என்ற இலகுவான இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்ப வீரர்களான ஜேசன் ரோய் மற்றும் ஜோஸ் பட்லர் நல்ல தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சுக்களை சமார்த்தியமாக கையாண்ட அவர்கள் 9 ஓவர்களில் இணைப்பாட்டமாக 80 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

அதன் பின்னர் 10 ஆவது ஓவரின் முதல் பந்தில் ரோய் 36 ஓட்டங்களுடன் சாமரவின் பந்து வீச்சில் குணதிலக்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த டேவிட் மலனும் 7 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஜோனி பெயர்ஸ்டோவுடன் கைகோர்த்து பட்லர் அதிரடி காட்ட, இங்கிலாந்து 17.1 ஓவரில் 8 விக்கெட்டுகள் மீதமிருக்க இலங்கை நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

பட்லர் 55 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களையும், ஜோனி பெயர்ஸ்டோ 13 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர். 

போட்டியின் ஆட்டநாயகனாக பட்லர் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதுடன், இரண்டாவது போட்டி இன்றிரவு அதே மைதானத்தில் நடைபெறும்.
 

https://www.virakesari.lk/article/108134

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.