Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூத்த ஊடகர், எழுத்தாளர் அ.செ.மு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த ஊடகர், எழுத்தாளர் அ.செ.மு.

 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

spacer.png

 

ஈழத்தின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் அ.செ.மு. அதைப்போல மூத்த முன்னோடி ஊடகவியலாளர்களிலும் முக்கியமானவர். 1940களிலேயே ஊடகத்துறையில் இயங்கி, தனி அடையாளங்களை உருவாக்கியவர். ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, ஈழநாடு, எரிமலை ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றிய அ.செ.முருகானந்தன், “எரிமலை” என்று தனியாக தன் சொந்தச் செலவிலும் ஒரு பத்திரிகையை நடத்தியிருக்கிறார். திருகோணமலையிலிருந்து வெளிவந்தது. திருகோணமலையின் முதற்பத்திரிகையும் அதுதான் என்று கூறப்படுகிறது. 

ஆனால் அது நீடிக்கவில்லை. காரணம்,பெரிய பத்திரிகை நிறுவனங்களின் உரிமையாளர்களைப்போல அ.செ.மு பெரும் தனவந்தராக அந்தப் பத்திரிகையை ஆரம்பிக்கவில்லை. அதற்கான பொருளாதார வசதியும் அவரிடம் கிடையாது. குறைந்தது அன்று செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்த அரசியல் தரப்புகளின் ஆதரவைக் கூட அவர் பெற்றிருக்கவில்லை. அதில் அவருக்கு நம்பிக்கையும் ஈடுபாடுமில்லை. அவரிடமிருந்த ஒரே மூலதனம் ஆர்வம் மட்டுமே. அதை வைத்தே ஒரு சுயாதீனப் பத்திரிகையாக எரிமலையை ஆரம்பித்தார். அவ்வாறான சுயாதீனப் பத்திரிகைகளுக்கு நம்முடைய தமிழ்ப் பெரும் சமூகத்தில் கிடைக்கும் ஆதரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமல்லவா. அந்த விதியின்படி அது ஆறு இதழ்களோடு நின்று தன்னுடைய வரலாற்றுப் பெருமையைப் பெற்றது. 

ஆனால், அ.செ. முவுக்கு வாசல்கள் ஆயிரம். அதன்படி அவர் ஒரு கதவு மூடப்படும்போது இன்னொரு கதவு என்ற மாதிரி அல்லது ஒரு கதவு மூடப்பட்டாலும் இன்னொரு கதவு திறக்கப்பட வேண்டும் என்று சிந்திப்பவர் என்பதால், வேறு பத்திரிகைகளில் இயங்கினார். அதுவும் போதாதபோது சிற்றிலக்கிய இதழாழராகவும் இருந்திருக்கிறார். ஈழத்தின் முன்னோடி இலக்கிய இதழான “மறுமலர்ச்சி”க்கும் அ.செ.முவே மையம். இதற்கெல்லாம் முக்கிய காரணம், அவர் அடிப்படையில் எழுத்தாளர் என்பதே. இலக்கியத்தில் பேரார்வம் கொண்டவர் என்பதே. 

இப்படியெல்லாம் இருந்த அ.செ.முவை இன்று பலருக்கும் தெரியாது. அதாவது நூற்றாண்டு நாயகனாக நினைவு கூரக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளரை –ஒரு முன்னோடி ஊடகவியலாளரை பெருந்தமிழ்ச்சமூகதினால் நினைவில் வைத்திருக்க முடியவில்லை. இது எவ்வளவு துயரம்? எவ்வளவு அவலம்? 

அ.செ. மு தெரிந்தவர்களிலும் பலர் இன்று மறந்து விட்டார்கள். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரைக் கை விட்ட நிலையில்தான் இருந்திருக்கிறார். இதனால் அவருடைய மரணம் பற்றிய தகவலே குழப்பமானதாக வந்தது. இரண்டு தடவை அவர் இறந்த சேதியை பத்திரிகைகளே வெளியிட்டன என்றால் நிலைமையின் தாற்பரியத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.  

ஆனாலும் பலருக்கும் அ.செ.முவின் முக்கியத்துவத்தைப் பற்றித் தெரியும். இப்போது கூட அவர்களிடம் அ.செ.மு என்ற பேரைச் சொன்னால் போதும். எழுந்து உட்கார்ந்து கொண்டு அவரைப் பற்றிப் பேசத் தொடங்கி விடுமளவுக்கு அ.செ.மு வின் எழுத்துகளின் மீது ஈர்ப்புண்டு. அந்தளவுக்கு சிறுகதைகளில் தன்னை அடையாளப்படுத்தியவர் அ.செ.மு. இன்றும் கூட அவருடைய பல கதைகள் நினைவு கொள்ளப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. அதில் ஒன்று “காளிமுத்துவின் பிரஜா உரிமை” என்ற கதை. 

இது மலையக மக்களை நாடற்றவர்களாக்கும் பிரஜா உரிமைச் சட்டத்தைப்பற்றிப் பேசுகிறது. இதற்குப் பிறகுதான் மலையகத்திலேயே இந்தப் பிரச்சினையைப் பற்றிய எழுத்துகள் மேலெழுந்தன. அந்த வகையிலும் அ.செ.முவே இதற்கும் முன்னோடி. இதை விட “மாடு சிரித்தது”, “மனித மாடு” “பழையதும் புதியதும்” என இன்றும் புதுமை குன்றாத பல கதைகளை எழுதியிருக்கிறார் அ.செ.மு. சிறுகதைகள் மட்டுமல்ல, நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள் என ஒரு காலத்தில் ஏராளமாக எழுதித்தள்ளியவர். அவற்றில் கவனத்தைக் குவிக்கக் கூடிய அழகியலையும் மொழிச் சிறப்பையும் வெளிப்படுத்தியவர். 

ஆனால் அவற்றையெல்லாம் நூலாக்கும் வாய்ப்பு அ.செ.முவுக்குக் கிடைக்கவில்லை. இதற்குச் சில காரணங்கள் உண்டு. ஒன்று அவர் வசதியான வாழ்க்கையில் ஒரு போதுமே இருந்தவரில்லை. வறுமையும் ஏழ்மையும் தனிமையுமே அவருடைய வாழ்க்கையாக இருந்தது. இரண்டாவது, எந்த அரசியல் நிலைப்பாட்டையும் அ.செ.மு ஆதரித்தவரில்லை. அவருடைய கொள்கை எப்படியானது என்றால், “அரசியல் சமூக விசயங்களை குத்திக் கிளறுவதற்காகவே ஒரு புதுமையான இலக்கியத்தை மறுமலர்ச்சி சிருஷ்டிக்கப் போவதில்லை. ஆனால், இலக்கியத்தின் வளர்ச்சியிலே சமூகத்தின் வளர்ச்சி பின்னி வரும் என்பதை மறுமலர்ச்சி நிரூபிக்கும்” என்பதாகும். இதை அவரே மறுமலர்ச்சி இதழில் குறிப்பிட்டிருக்கிறார். என்பதால் அவர் எந்த அரசியல் கட்சிகளின் உள்ளுமில்லை. பின்னுமில்லை என்பது தெளிவு. மூன்றாவது தன்னுடைய காரியங்களைத் தந்திரமாகவோ நியாயமாகவோ பார்த்துக் கொள்ளும் ஆர்வமும் கரிசனையும் அவரிடமிருந்ததில்லை. இவ்வளவு ஊடகத் தொடர்புகளோடும் எழுத்துச் சிறப்போடும் இருந்தவர் தொடர்ந்தும் ஏழ்மையிலும் தனிமையிலும் வாழ்ந்திருக்கிறார் என்பதைச் சரியாக உணர்ந்து கொண்டால், அவருடைய இயல்பையும் மனநிலையையும் விளங்கிக்கொள்ள முடியும். 

 

https://arangamnews.com/?p=5489

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கிருபன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.