Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய சிறப்பு முகாமில் இருந்த 10 இலங்கை தமிழர்கள் விடுதலை...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சிறப்பு முகாமில் இருந்த 10 இலங்கை தமிழர்கள் விடுதலை...!

தமிழக எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

Srilankan_Fisherman_NewsNijam.jpeg

அவர்கள், நே்ற்றிரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ளதாக தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உள்ளனர்.

trichy-central-jail.jpg

இவர்கள், “பொய் வழக்கில் கைது செய்த எங்களை அந்த வழக்கின் தண்டனை காலம் முடிந்தும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சிறப்பு முகாமிலேயே பல ஆண்டுகளாக தடுத்து வைத்துள்ளனர். இதனால், எங்களுக்கு கிடைக்க வேண்டிய சட்ட ரீதியிலான உதவியும் மறுக்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் எங்களை விடுதலை செய்து குடும்பத்தினருடன் சேர்க்க வேண்டும்” எனக்கோரி, உண்ணாவிரதம், காத்திருப்பு என பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

trichy-eela-tamils-protest.jpg

கடந்த மாதம் இவர்களைச் சந்தித்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் மறுவாழ்வு திட்ட ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் தலைமையிலான குழுவினர், விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் வந்த படகு பழுதடைந்து தமிழக எல்லைப் பகுதிக்குள் வந்தது. இதையடுத்து, அந்த படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் கடந்த 7 மாதங்களாக மத்திய சிறை வளாகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், விசாரணை நடைபெற்று தற்போது அந்த பத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று இரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து இலங்கைக்கு  விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 70 இலங்கைத் தமிழர்களும் தமிழக அரசின் மறுவாழ்வு திட்ட ஆணையர்கள் கொண்ட குழு அளித்த உறுதிமொழியை நம்பி, விரைவில் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என நம்பிக்கையோடு நாட்களை கழித்து வருகின்றனர்.
https://www.virakesari.lk/article/109484

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.