Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியக் கவிப்பேரரசின் கவிதைகள்

Featured Replies

ஒரு சோடி அணுக்கவிதை 
💙💙💙

உன் 
சிரிப்பில் கருகாமல்.....
நெருப்பில் கருகியிருக்கலாம்....
காயம் தான் இருந்திருக்கும்....
வலி காலத்தால் இறந்திருக்கும்....

💚💚💚

நீ 
பிரிந்து விட்டாய்... 
என்று பலமுறை.... 
சொல்லிவிட்டேன்....  
சொறனை....
கெட்ட என் இதயம்...
நீ 
வருவாய்யென.....
கதவை திறந்துவைத்து...
காத்துக்கொண்டு இருக்கிறது......!

💙💙💙

இலக்கியக்  கவிப்பேரரசு
இனியவன் 
இலங்கை யாழ்ப்பணம்

  • தொடங்கியவர்

காதல்... 
உனக்கு கற்பூரம்.... 
எனக்கு தீபம்..../ 

யோசித்து..... வருவதில்லை..... 
காதல்..... 
யோசிக்காமல்.... உன்னை..... 
சந்தித்தேன்......  அனுபவிக்கிறேன்../

இளநீர் 
போல் உன்னை 
இதயத்தில் வைத்திருக்கிறேன் 
நீ 
கண்ணீராய்...
வரத் துடிக்கிறாய்.. //

💙
இலக்கியக்  கவிப்பேரரசு
கஸல்  கவிதை

காதலில் பாத சுவடு  .....
எதிரும் புதிருமாக ....
காணப்படுவது ....
நம்மில் தான் ....!!!

உன்னை நினைக்கும் ...
போதேல்லாம் ...
என் எழுதுகருவி ....
தீப்பந்தமாகிறது .....!!!

உனக்காக ....
கல்லறையில் ....
காத்திருக்கிறேன் ....
என்றோ ஒரு நாள் ....
நீயும் அங்கு வருவாய் ....!!!
@
இலக்கியக் கவிப்பேரரசு
கஸல் காதல் கவிதை 

கவிதையோடு 
வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........!

கண்டதை எழுதுவதும்....
கண்டபடி எழுதுவதும்....
கவிதையில்லை.......
கண்ணியமாய் எழுதுபவன்.....
கவிஞன்........!

காதலால் .............
கவிதை வரும் என்பதை....
காட்டிலும்...........
காதலோடு கவிதை......
எழுதுபவன் உண்மை.....
கவிஞன்..........!

சமூக ......
சீர்திருத்தத்துக்காய்.....
கவிதை எழுதுவதைவிட....
சமூகத்திலிருந்து......
சீர்திருந்தி வாழக் கவிதை.....
கவிதை எழுதுபவன்.....
கவிஞன்...........!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இலக்கியக் கவிப்பேரரசு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிதையோடு வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........!

  • தொடங்கியவர்

முதுமை.....
இளமையின் நினைவை.....
எரிந்த சாம்பலாய்.....
சுமர்ந்து கொண்டிருக்கும்....
சுமைதாங்கி..........!

மரணத்தின் வாசலை.......
ஏக்கத்தோடும் பயத்தோடும்.......
வரவேற்றுக்கொண்டிருக்கும்......
மர்ம அறை............!

அனுபவங்களை.......
முற்களாகவும்......
பூக்களாகவும்......
ரசித்துக்கொண்டிருக்கும்.....
ரோஜாச்செடி.....!

வார்த்தைகளின்.....
வீரியமும்.......
இன்பங்களின்.......
வீரியமும்......
அடங்கியிருக்கும்.......
பெட்டிப்பாம்பு..........!

எழும்பு கூட்டை.....
தோலால் மறைத்து வைத்து......
கிறுக்கள் சித்திரத்துக்கு......
உயிர் கொடுக்கும்.....
உன்னதமான உயிர்.........!

நூறு மீற்றர் ஓட்டத்தை......
நொடிக்குள் ஓடியவனும்.....
மெதுவாக நடக்க ....
கற்றுக்கொடுக்கும் ஆசான்......!

கொரட்டைத்தான் .......
மூச்சு பயிற்சி........
இருமல் தான் செய்தி.....
தொடர்பாளன்........!

அனுபவத்தை  மூலதனமாய்......
கொண்டு ஞானியாகும் நிலை.....
அனுபவத்தை தவறாக கொண்டு......
பித்தனாகும் நிலை.......
முதுமை.....................!

@
 இலக்கியக்  கவிப்பேரரசு

  • தொடங்கியவர்

இது குழந்தைத்  தொழில் இல்லையா..?
------------------------------------

பட்டாசுத்  தொழிற்சாலையில்.....
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!
😔
தீப்பெட்டித்  தொழிற்சாலையில்.......
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!
😔
செங்கல் சூளையில்....
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!! 
😔
சல்லி கல் உடைக்க......
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!! 
😔
குழந்தைத்  
தொழில் சட்டப்படிகுற்றம் .....
தேவையான சட்டம்......
வரவேற்கவேண்டிய சட்டம்.....!!!
🙂
சினிமாவிலும் சின்னத்  திரையிலும்.....
பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கும்......
காட்சிகளில் நடிக்கும் குழந்தைகள்....
குழந்தைத்  தொழில் இல்லையா....?
😔
உடலில் காயம் வந்தால் தான்.....
குழந்தைத்  தொழில் குற்றமா.....?
உளத்தில் காயம் வந்தால்........
குழந்தைத்  தொழில் குற்றமில்லையா....?
😔
அளவுக்கு மீறிய.... 
வயதுக்கு மீறிய......
செயல்களும் வார்த்தைகளும்........
குழந்தை மனசை காயப்படுத்தும்.....!
ஏன் இன்னும் புரியவில்லை....?
😔
புரியாமல் தெரியாமலில்லை.....
பணம் பணம் பணம்.......!!!
எல்லமே 
பணம் செய்யும் மாயை.....
வயிற்றுப்  பிழைப்புக்கு போராடும்.....
மக்களுக்கு ஒரு நியாயம்......
வர்த்தகக்  கவர்ச்சி மக்களுக்கு.......
இன்னொரு நியாயமா..........? 
வேதனையோடு கவிதையை முடிவுக்கு கொண்டு வருகிறேன்..... //
🎎
இலக்கியக்  கவிப்பேரரசு

  • தொடங்கியவர்

ஆறுவயதில்..... 
அயல் வீட்டில் - நீ

பாதிவயிறு 
உன் வீட்டில் நிரம்பும்....
பாதி வயிறு 
என் வீட்டில் நிரம்பும்... 

பாதி தூக்கம் 
உன் வீட்டில் - நான்
மீதி தூக்கம் 
என் வீட்டில் - நீ .........!!!

அப்பப்போ சண்டை.......
தடியெடுத்து அடிகும் மனதைரியம்.....
எனக்கும் இல்லை உனக்கும்இல்லை.
ஒரு பிடி மண்ணால் சண்டையோடும்....
மாவீரர் நாம்...........

சற்று நேரம் கூட ஆகாது.........
வீட்டில் கிடைத்த இனிப்போடு.......
ஓடிவருவேன் உன் வீட்டுக்கு..........
பாதி கடித்த இனிப்பை.......
உன்னிடம் தர பறந்து போகும்.....
சண்டையின் பகை................!!!

நட்பென்பது எப்போதும் இனிமை.....!!!

&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
@
இலக்கிய கவிப்பேரரசு
இனியவன்
@
 தொடரும்..

  • தொடங்கியவர்

மனம் 
நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள்
துடியாய்த்துடிக்கிறது ....
தடுக்கிறது
 
நீ 
குடியிருக்கும்...
என் இதயம்.... 

உன் இதயம் வேதனைபட்டால் ..
இறந்திடுவேன் என்கிறது.... 
என் இதயம் ..... 
@
இலக்கியக் கவிப்பேரரசு

நானும் நீயும் பிரிந்துவிட்டோம் ....
நீ என்
நினைவுகளை மறந்து ....
நான் உன்
நினைவுகளை மறந்து .....
வாழவே முடியாது
காதல் 
பிரிவை... 
ஏற்படுத்தும் மறதியை ஏற்படுத்தாது ....!!!
+

இலக்கியக்  கவிப்பேரரசு

 இனியவன்

  • தொடங்கியவர்

நீ 
காரணத்தோடு பிரிந்தாலும் .....
நான்
காலமெல்லாம் காதலிப்பேன் ....!

எப்படியும் வாழ்வது 
உன் புத்தி ....
உன்னோடே வாழ்வது 
என் பக்தி ....!

நான்..
அழகில்லை..... 
என்பது உண்மை... 
நீ அழகாக....
இருப்பதால்.... 

காதல் 
தோற்ற பின்... 
உன்னைக் குறைகூறும் 
கெட்ட இதயம்
என்னிடம் இல்லை

@

இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் 

இலங்கை 

யாழ்ப்பாணம்

  • தொடங்கியவர்

உன்னையே
பார்த்த கண்கள் ....
உனக்காகவே
நடந்த கால்கள் ....
உனக்காகவே
பேசிய வார்த்தைகள் ....
உனக்காகவே
இருக்கும் உயிர் ....!

எதற்காக மௌனமானாய்....

நீ 
அமைதியாகயிருந்து ...
எனக்கு
சமாதி கட்டுகிறாய் ....
நான் 
சமாதியாகயிருந்தே ....
உன்னைக் காதலிக்கிறேன்..... !
❤️
இலக்கியக்  கவிப்பேரரசு

  • தொடங்கியவர்

கண்களை.....
திறந்து பார்.... 
அனைவரும்....
தெரிவார்கள்.....

கண்களை.....
மூடிப்பார்....
உனக்குப்.....
பிடித்தவர்களே....
தெரிவார்கள்.....

தோல்வியின்....

அடையாளம்.... 
தயக்கம்....!

வெற்றியின்....

அடையாளம்.... 
துணிச்சல்....!

துணிந்தவர்...
தோற்றதில்லை....
தயங்கியவர்....
வென்றதில்லை....

கையில்....
ரோஜாக்களோடு.... 
கண்ணாடி முன்...
நில்லுங்கள்....

இன்னொரு..
ரோஜாக்களைக்....
காண்பீர்கள்....
அது நீ ....!!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நீ...
தாவணியில்..... 
வரும்போது....... 
தாவும்......
என் மனம்.....
சேலையில்..... 
வரும் போது....
செத்தே போகிறேன்....!!!

அதிகாலை..... 
சூரியன்வரும்..... 
போது பூக்கள்.....
மலர்வதுபோல்.....
நீ வரும்போது....
நான் மலர்கிறேன் ...!!!

&
கவிப்பேரரசு இனியவன் 
தேனிலும் இனியது காதலே

  • தொடங்கியவர்

காதலால் துடிக்கும்.....
மண்புழு நான்......
நீ ............................
தூண்டில் போட்டு
விளையாடுகிறாய் ....!

உன்னை .......
காதலிக்க முன்.......
கவிதையை...
காதலித்துவிட்டேன்.....
உன் பிரிவு .......
என்னை கலங்க
வைக்கவில்லை ....!

இறைவனை.... 
வணங்குவதும் .....
காதலை வணங்குவதும்...
ஒன்றுதான்.... காதல்....
இறைவன் ............
தந்த வரம்தானே....!

@
கவிப்பேரரசு
இனியவன்
காதல் கஸல் கவிதை

  • தொடங்கியவர்

காதல் கவிதை 
------------------------
கன்னங்கரிய முடியழகி......
செக்கச் சிவந்த உடலழகி....
சின்னஞ்சிறிய
 கண்ணழகி .....
பென்னம் பெரிய
முகவழகி ....!!!

வெட்டவெளி பாதையிலே ....
தன்னந்தனியே வந்தவளே ...
நடுநடுங்க வைக்கிறாயே ..... 
பதைபதைத்து 
போனேனே ,,,,,,!!!

பென்னம் பெரிய ஆசையுடன் .....
தன்னந்தனியே தவிக்கிறேன் ....
பச்சைப்பசேரென ஒரு பதிலை ....
திக்குத்திணற சொல்வாயோ ....?

படபடக்குது இதயம்
தள தளக்குது நாக்கு
துடி துடிக்குது மூச்சு
சட புட வென்று.. 
பதில் சொல்...

^^^

மொழிக்கவிதை 
கவிப்பேரரசு இனியவன்

Edited by கவிப்புயல் இனியவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கவிப்புயல் இனியவன் said:

அடுக்கிடுக்குத் தொடரில்  
காதல் கவிதை 
------------------------
கன்னங்கரிய முடியழகி......
செக்கச் சிவந்த உடலழகி....
சின்னஞ்சிறிய
 கண்ணழகி .....
பென்னம் பெரிய
முகவழகி ....!!!

வெட்டவெளி பாதையிலே ....
தன்னந்தனியே வந்தவளே ...
நடுநடுங்க வைக்கிறாயே ..... 
பதைபதைத்து 
போனேனே ,,,,,,!!!

பென்னம் பெரிய ஆசையுடன் .....
தன்னந்தனியே தவிக்கிறேன் ....
பச்சைப்பசேரென ஒரு பதிலை ....
திக்குத்திணற சொல்வாயோ ....?

படபடக்குது இதயம்
தள தளக்குது நாக்கு
துடி துடிக்குது மூச்சு
சட புட வென்று.. 
பதில் சொல்...

^^^

மொழிக்கவிதை 
கவிப்பேரரசு இனியவன்

நல்ல கவி. நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். 

ஆனால் இதில் சிலது அடுக்கிடுக்கு தொடர் அன்றி அடுக்குத் தொடராக இருக்கிறதோ? என யோசிக்கின்றேன்.

சட, புட…தள, தள, …போன்றவை இரெட்டை கிளவி?

பதை பதை போன்றன அடுக்குத்தொடர்?

பென்னம் பெரிய, சின்னம் சிறிய போன்றன அடுக்கிடுக்குத் தொடர்?

Edited by goshan_che

  • தொடங்கியவர்

நீங்கள் கூறுவது சரி 

பேச்சு தமிழுக்கு எடுத்தேன் 

தலைப்பு மாற்ற வேண்டும் 

எப்படி மாற்றுவது என்று 

இங்கு தெரியல மாற்றும் படிமுறை புரியல 

நன்றி நன்றி 

  • தொடங்கியவர்

எனக்கு 
காதல் செய்யத்தான் 
தெரியும் உயிரே .....
எப்படி மறப்பது என்பதை 
என் 
இதயம் மறந்து விட்டது

உனக்கு 
கவிதை எழுதி ...
உன்னை மயக்க வேண்டும் ...
என்று ஒரு துளி எண்ணமும் ...
எனக்கில்லை ....!!!

ஆனால் 
ஒன்று மட்டும் ..
உண்மை
உன்னில் மயங்கா விட்டால் .....
நிச்சயம் கவிதை வராது ....!!!

@
கவிப்பேரரசு இனியவன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நீ 
என் கவிதை 
அழகென்கிறாய் ...

நீ 
அழகாயிருப்பதால் 
கவிதை அழகாய்  இருக்கிறது.....!
 
நீ 
என்னைப்  ....
பிரிந்துபார்......
கவிதை அழுதபடி ......
உன் மடியிலேயே தூங்கும் ....!

நீ.... 
பார்ப்பது.... 
கவிதை அல்ல.... 
நான்....... !!!

+
இலக்கிய கவிப்பேரரசு
இனியவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.