Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைதீவின் இனப்பிரச்சினையில் தேர்வுகள் அற்றநிலையில் பன்னாட்டு சமூகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைதீவின் இனப்பிரச்சினையில் தேர்வுகள்

அற்றநிலையில் பன்னாட்டு சமூகம்

-புரட்சி (தாயகம்)-

சிங்கள அரசுகள் காலத்திற்கு காலம்;, தமது தேவைக்கேற்றபடி அமைதித் தீர்விலே மட்டுமே நம்பிக்கை கொண்டவர்களாகவும் கௌதம புத்தரின் அகிம்சை, சமாதானம், நல்லிணக்கம் போன்ற அன்புவழிக் கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களில் தாம் முதன்மையானவர்களாகவும் உலகத்திற்கு நாடகமாடி வருவது வழமையான ஒன்றாகும்.

அதாவது தமக்கெதிராக பன்னாட்டு சமூகமோ அல்லது பிராந்திய வல்லரசுகளோ இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான நியாயமான தீர்வினை முன்வைக்குமாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் போதும், உள்நாட்டிலே அரசியல் சிக்கல்கள் கொந்தளிப்புக்கள் ஏற்படும்போதும் அல்லது பாரிய பின்னடைவுகளை படைத்துறை ரீதியாக எதிர்கொள்ளும்போதும் பேச்சுவார்த்தை நாடகத்தினை சிங்கள அரசுகள் அரங்கேற்றுவது வழக்கமாகும்.

இதேபோன்று சிங்கள அரசுகள் அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஒவ்வொரு தடவையும் தாம் குழப்பியடிக்கும்போது உடனடியாகவே அனைத்துக்கட்சி மகாநாடு, வட்டமேசை மகாநாடு என்று பல்வேறு மகாநாடுகளை கூட்டி காலத்தை தேவையானளவிற்கு இழுத்தடித்து தமது அரசியல் மற்றும் படைத்துறை நெருக்கடிகள் தணியும் வரைக்கும் அல்லது பன்னாட்டு சமூகத்தின் அழுத்தங்கள் குறையும் வரைக்கும் அமைதி விரும்பிகளாக நடிப்பதில் சிங்களத் தலைவர்களும் சிங்கள பௌத்த பேரினவாதிகளும் மிகவும் திறமைசாலிகள்.

திம்பு பேச்சுவார்த்தையின் போது அனைத்து தமிழர் தரப்பும் ஒருமித்த குரலில் தாயகம், தேசியம் மற்றும் தன்னாட்சி என்பனவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான தீர்வு அமைய வேண்டும் என்று வலியுறுத்தியபோது பேச்சுவார்த்தைகளை வேண்டுமென்றே முறித்துக்கொண்ட அப்போதைய ஜெயவர்த்தன அரசு உடனடியாகவே அனைத்துக் கட்சி மகாநாட்டை கொழும்பில் கூட்டியது. நீண்ட காலந்துரையாடல்களுக்கும் அரசியல் ஆய்வுகளுக்கும் பிறகு உப்புச் சப்பற்ற மாவட்டசபை என்ற எலும்புத்துண்டை தமிழ் மக்களுக்கு தீர்வாக முன்வைத்தது.

இதேபோன்று சந்திரிகா அம்மையார் சமாதான தேவதையாக 1994 ஆம் ஆண்டு பதவியேற்ற உடனேயே பேச்சுவார்த்தை என்ற பழைய நாடகத்தையே அரங்கேற்றினார். விடுதலைப் புலிகளின் அரசியல்துறை உயர்மட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு சந்திரிகா அரசானது பொறியியலாளர்களையும் வங்கி முகாமையாளர்களையும் அனுப்பிவைத்தது. இப்பேச்சுவார்த்தையும் எதுவித முன்னேற்றமும் இல்லாது சில மாதங்களிலே முறிவடைந்துவிட்டது.

இதன்பின்பு சந்திரிகா அரசு சமாதானத்திற்கான போரினை தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை இனப்படுகொலை செய்தும் அகதிகளாக இடம்பெயர வைத்தும் எமது மக்களுக்கு அவலங்களை ஏற்படுத்திக்கொண்டு மறுபக்கத்தில் அனைத்துக் கட்சி மாகாநாடு என்ற பழைய தந்திரோபாயத்தினை பன்னாட்டு சமூகத்தினை ஏமாற்றுவதற்காக பயன்படுத்தியது.

இக்குழுவினர் தீர்வுப்பொதி என்று அரைகுறையான வரைபொன்றை சமர்ப்பித்தனர். சிங்களப் பேரினவாதிகள் சந்திரிகா அரசு தமிழீழத்திற்கான நகலை முன்வைத்திருப்பதாக உடனடியாகவே கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் காரணமாக இவ்வரைபின் கை, கால், தலை என அதன் அங்கங்கள் வெட்டப்பட்டு அங்கவீனமாக்கப்பட்டது. இறுதியில் சந்திரிகா அம்மையாரின் தீர்வுப்பொதி என்ற இந்த முண்டத்தை 2000 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் பாராளுமன்றத்தில் கொளுத்தி அதற்கு ஈமக்கிரியைகளையும் செய்துவைத்தனர்.

இதன்பின்பு தற்போது நோர்வேயின் அனுசரணையுடன் பன்னாட்டு சமூகத்தின் ஆதரவுடன் இடம்பெறும் சிங்கள அரசிற்கும் விடுதலைப் புலிகளிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளிலும் தமது முந்தைய சிங்கள அரசியல் தலைவர்கள் பயன்படுத்திய அதே தந்திரோபாயங்களையே மகிந்த அரசும் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றது.

போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட 2002 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதிகளில் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டாலே பாரிய குற்றமாக கருதப்பட்டு கண்காணிப்புக்குழுவினரும் நோர்வே அனுசரணையாளர்களும் இரண்டு தரப்பினர்களுடன் அவசரமான கலந்துரையாடல்களை மேற்கொள்வார்கள்.

ஆனால் தற்போது சிறிலங்கா அரசானது தனது முப்படைகளையும் பயன்படுத்தி பாரியளவில் ஆட்லறிகள், மோட்டார்கள் என்பனவற்றை பயன்படுத்தி வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு தமிழர் தாயகம் எங்கும் மனித அழிவுகளையும் சொத்துக்களுக்கு சேதங்களையும் தொடர்ச்சியாக ஏற்படுத்திக்கொண்டிருக்கின்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.