Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய உயர்ஸ்தானிகராக மிலிந்த பொறுப்பேற்றார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உயர்ஸ்தானிகராக மிலிந்த பொறுப்பேற்றார்

(சி.எல்.சிசில்)
இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக மிலிந்த மொறகொட நேற்று புதுடில்லியில் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டு சுமார் ஒரு வருடத்தின் பின்னரே அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டி ருக்கின்றார். அமைச்சரவை அந்தஸ் துடன் கூடிய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொறகொட, நேற்று பதவியேற்றுக் கொண்டதாகவும், இது குறித்த நிகழ்வு எளிமையான முறையில் நடைபெற்றது எனவும் இந்தியா விலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
mlintha-300x197.jpg
இலங்கை உயர் ஸ்தானிகராலய பணியாளர்கள் பாரம்பரிய வழக்கப்படி மிலிந்தவையும், அவரது மனைவி ஜெனிபர் மொறகொடவையும் உயர் ஸ்தானிகராலயத்தில் வெற்றிலை கொடுத்து வரவேற்றனர்.
இதனை முன்னிட்டு விஷஷ் பிரித் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய மொறகொட, இலங்கையின் நலன்களை முன்னெடுப் பதற்காக அனைவரும் ஒரு குழுவாகச் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன், இலங்கை – இந்திய உறவுகளை மேன்மையான நிலைக்குக் கொண்டு செல்வதற்காக உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

https://thinakkural.lk/article/134405

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நா.தனுஜா

 

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொட நேற்று திங்கட்கிழமை புதுடில்லியில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து மிலிந்த மொரகொட, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் நற்சான்றுப்பத்திரத்தையும் கையளித்தார்.

உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்கும் இந்நிகழ்வின் போது பதில் உயர்ஸ்தானிகர் நிலுக கதுருகமுவ உள்ளிட்ட இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளின் வரவேற்பையும் மதவழிபாடுகளையும் தொடர்ந்து மிலிந்த மொரகொட இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராகக் கடமைகளைப் பொறுப்பேற்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டார். 

 

Milnda.JPG

 

2021 - 2023 ஆம் ஆண்டு வரையான மிலிந்த மொரகொடவின் பதவிக்காலத்தின் போது முன்னெடுக்கப்படவுள்ள இந்திய - இலங்கை தூதுக்குழு தொடர்பான ஒன்றிணைந்த தேசிய மூலோபாயமும் இதன்போது பகிரங்கப்படுத்தப்பட்டது.

அந்த தேசிய மூலோபாயத்தில் இந்திய - இலங்கை தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தூரநோக்கு அடிப்படையிலான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

மேற்படி தேசிய மூலோபாயத்தில் தூதுக்குழுவின் உபாயங்களும் அதன் அடிப்படைகள் மற்றும் நோக்கங்களும் ஒரு பிரிவாகவும் ஒவ்வொரு நோக்கங்களையும் அடைந்துகொள்வதற்கான செயன்முறைகளின் அமுலாக்கம் மற்றொரு பிரிவாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதன்படி தூதுக்குழுவின் 7 அடிப்படைகளும் அதன்கீழான 30 நோக்கங்களும் தேசிய மூலோபாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல் தொடர்புகளை வலுப்படுத்தி, இருதரப்பு நல்லுறவை ஓர் கட்டமைப்பு ரீதியான மட்டத்திற்குக் கொண்டுவருதல், வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல், நாட்டிற்கான ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகிய விடயங்களும் அதில் அடங்கியுள்ளன.

மேலும் இருநாடுகளுக்கும் பொதுவான இந்துசமுத்திரப் பாதுகாப்பு, இலங்கையின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்வதற்கான நடைமுறைகள் ஆகியவை குறித்தும் தேசிய மூலோபாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது கருத்து வெளியிட்ட உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, தற்போதைய நெருக்கடிநிலைக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தூதுக்குழுவின் பிரதிநிதிகளுக்குத் தனது பாராட்டை வெளியிட்டார். 

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்றார் மிலிந்த மொரகொட | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.