Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐந்திணை - விக்ரமாதித்யன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐந்திணை

விக்ரமாதித்யன்

ku.jpg

குறிஞ்சி

கண்ணில் தெரிவதெல்லாம்
மலை முகடுகள்
ஒரு
நறுஞ்சுனை
தொலை
தூரத்தில் சிற்றாறு
மரம் செடி கொடிகளில்
கனி சுமந்த கிளைகள்
உச்சியில்
கொம்புத் தேன் கூடுகள்
அதிசயமாய்
துலங்கும் அருவிகள்
மெளனமே
இருப்பான சித்தர்கள்
முன்னை
பழங்குடிகள்
வானம்
தொடும் மஞ்சுக்கூட்டம்
தண்ணீர் பட்டுத் தெறிக்கும்
தேக்குகள் மூங்கில்கள்
பக்கத்திலேயே
பாக்குமரங்களும்
ஏலக்கொடிகளில்
எச்சமாய் மணம்
சிந்திக் கிடக்கும்
மலை முந்திரி
படர்ந்து தழுவும்
மிளகுக் கொடிகள்
வேரில் பழுத்துக்
கிடக்கும் பலாக்கள்
தேன் கதலிகள்
வேட்டுவ வள்ளியின்
விழிப்பார்வைக்கும் எச்சில் முத்தத்துக்கும்
யாசித்து நிற்கும் வடிவேலன்

grass.jpg

முல்லை

காதைக் குடையும்
சிள்வண்டுகள் சப்தம்
பார்க்கும் இடமெல்லாம்
பச்சை நிறக்காடு
இருள் நிறைத்திருக்கும்
தாவரங்கள்
உலாவும்
உயிர்பிராணிகள்
குழிபறித்து விளையாடும்
குறுமுயல்கள்
காற்று கொண்டுவரும்
செண்பக மணம்
கொடிவலைப் பின்னல்களில்
காட்டுக் குயில்கள்
ஆகாயம் மறைத்துக்
கிடக்கும் இலையடர்த்தி
பூமியே தெரியவிடாத
புதர்கள் புல்காடுகள்
கலகலப்பாய்த் திரியும்
காடை கெளதாரிகள் மலையணில்கள்
வழிமறிக்கப் பார்க்கும்
நரிக்கூட்டம்
அலைபாயும் மயில்கள்
மிரண்டோடும் மான்ஜாதி
ஆடுமாடுகளுக்கு
அற்றுப்போகாத இரை
ஆயர்கள் மனம் போல
அழகுபட்ட முல்லைக்காடுதான்

Paddy-field-01-Vietnamese-Painting.jpg

மருதம்

காடு திருத்துகிறார்கள்
கழனி யாக்கிறார்கள்
அருவி வந்து விழுந்து
ஆறாய்ப் பெருகிப் பெரும்
பேறாய் நயத்தக்க நாகரிகம்
விதைத்தது
முளைத்தது கண்டு
பசேலென்று
வயல் வைத்தார்கள்
வாழை நட்டார்கள்
கரும்பு போட்டார்கள்
கொடிக்கால் செய்தார்கள்
ஆணும் பெண்ணும்
நாளும் பாடுபட்டார்கள்
கோடையில் உழுந்து
பயறுச் செடிகள்
கூடவே வெள்ளரியும்
இஞ்சி மஞ்சள் கிழங்கென்று
வகைவகையாய்ச் செய்வித்தார்கள்
ஆதிமனிதனுக்கு அறிவு முளைத்தாற்போல
பாதி மனிதன் முழு மனிதனான்
தலை வாழை இலையிட்டு
சோறு கறி பரிமாறினாள் திலவி
பந்தியில் பாலும்
பலாச்சுளையும் இட்டார்கள்
நெய்போட்டார் மோர் விளம்பினார்
பால்பாயாசம் வைத்துப் பகிர்ந்துண்டார்
கூட்டென்றார் பொரியலென்றார்
பச்சடியில் பத்து தினுசு செய்தார்
சொதியில் தனி ருசி சேர்த்தார்
வேளாளன் கைவிருத்தி மனச்செழிப்பு
வீட்டுக்கூடம்தாண்டி வீதியெங்கும்
விருந்துகள் விழாக்கள் தோரணங்கள்
தானதருமங்கள் பூஜை புனஸ்காரங்கள்
ஆசாரங்கள் அன்றாட வாழ்விலும் அழகுகள்
பொன்னும் பொருளும் குவிந்துக் கிடக்க
போகமும் பூரிப்புமாகப் பொலிந்தது வாழ்வு
கல்லிலும் செம்பிலும் ஐம்பொன்னிலும்
கலைவண்ணமாய் சிலை வடித்தார்
கண்பார்த்ததைக் கைசெய்யும்
வித்தை தேர்ந்தார் கூத்தும் பாட்டும்
கொட்டி முழக்குகிறார் ஓய்வில்
சொல்கொண்டு எழுத்தாக்கினார்
பொருள்கொண்ட இலக்கியம் படைத்தார்
நதி கொண்டு வந்த பண்பாடு தேறி
காதலோடு கற்புக்கும் வகைசெய்தார்
இந்திரன் போய் சந்திரன் கங்கைதரித்த
சுந்தரன் வந்தான் முழுமுதற்கடவுளாக
சைவத்தால் தமிழ் வளர்த்தார்
தமிழால் சைவம் வளர்த்தார்
மன்னர்கள் பணிசெய்தனர் சொகுசுமறந்து
மானுடத்தின் உச்சம் காட்டும்
மருதமர நிழலோர நஞ்சைக்கூட்டம்
எழுதாக் கிளவி போல இருக்கும் சரிதம்

sea.jpg

நெய்தல்

திரண்டு வரும் தண்ணீர்
எங்கே போகும்
தெறித்து விழுந்த
தண்ணீரோடு சேரும்
வந்துபோகும் அலைகளின்
வருத்தமென்ன வாட்டமென்ன
தொடுவானம் சொல்லும்
இரகசியமென்ன விஷயமென்ன
அடிவானத்துக்கப்பால்
இருக்கும் மர்மமென்ன மாயமென்ன
கடல் நடுவே பூமியா
பூமிக்கு மத்தியில் சமுத்ரமா
எப்படி வகைபடுத்த
கடல் என்னது
கடல்குதித்துச் சூடாற்ற
கண்ணதாசன் கவிதைவரி
நடுக்கடலில்
நாளும் நெய்தலின் மக்கள்
திரண்டிருக்கும்
தேக்கு உடம்பும் ஆதிமனசும்
எதன் கைவண்ணம்
கடல்மீன்கள் நண்டுகள்
முத்துகள்
தோன்றுவதெப்படி
பவளம் விளைவது
எந்த முகூர்த்தத்தில்
வலம்புரிச் சங்குகள்
வடிவுகொள்வது எங்ஙனம்
வருணதேவன்
வகுத்து வைத்ததா காலமழை
உப்பு நீரில்
ஒரு கொள்ளைத் திரவியம்
யார் செய்த
மாயம்
கடல்
ஒரு அதிசயம்
கடல்
கொண்டிருப்பது போதிசயம்
அது
வைத்திருப்பது நிறைய அற்புதம்
நெய்தல் நிலமே
நிரம்ப அற்புதம்தான்

Desert-Landscape-Pastels-800.jpg

பாலை

வேரோடும்
பிரண்டைக் கொடிகள்
சப்பாத்தி கள்ளிகள்
கானலெரிக்கும் வெயில்
கையளவு நீர்
காணக்கிடைக்காத மண்
புழுதி
பறக்கிறது
பேய்கள்
இராஜ்யம் செய்கின்றன
என்ன
செய்வார்கள் ஜனங்கள்
எப்படி
வாழ்வார்கள் இந்த வெக்கையில்
காளி மாதாவின் கருணை
இப்படியா

—————————

பாணனின் நிலம்

spacer.png

அன்புள்ள ஜெ,

இது ஒரு பத்தாண்டுக்கு முன்பு நடந்த சம்பவம். அன்றைக்கு நான் கல்லூரி மாணவன். தமிழ் எம்.ஏ. என் ஆசிரியருக்கு புதுக்கவிதை பிடிக்காது. அதை கேலிசெய்துகொண்டே இருப்பார். ஆனால் அவர் மேற்கோள் காட்டும் கவிதைகள் எல்லாமே அப்துல் ரகுமான், வைரமுத்து வகையானவர்வள் எழுதியவை. அல்லது பிரம்மராஜன் எழுதும் எழுவாய் பயனிலை இல்லாத கவிதைகள்.

தமிழ்ப் புதுக்கவிதைக்காக நான் வாதம் செய்வேன். தமிழ் புதுக்கவிதைக்கு தமிழ்நாட்டில் வேர் இல்லை என்று சொல்வார். குரோட்டன்ஸ் செடிகள் என்று சொல்வார். ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வெள்ளை எலிகள் என்று சொல்வார். அவற்றுக்கு பயனும் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்காது.

அவர் சொன்னவற்றில் உண்மை இல்லாமல் இல்லை என்று எனக்கும் தோன்றியதனால் நான் பெரியதாக வாதம் செய்ததில்லை. ஒரு நாள் விக்ரமாதித்யனின் ஐந்திணை என்ற கவிதைகளை வாசித்தேன். உடனே கொண்டுபோய் ஆசிரியரிடம் காட்டினேன். வழக்கம்போல கேலியாக “என்ன இது? மளிகைக்குறிப்பா?” என்று கேட்டார்.

ஆனால் நாலைந்து நாட்களுக்குப் பிறகு “ஆமாம், இதிலே ஒரு கவித்துவம் இருக்கிறது. இதை நம் மரபிலே உள்ள ஆசிரியப்பாவில் ஒருவகையாக நினைக்கமுடியும்” என்று சொன்னார்.

”வெறும் வர்ணனை அல்ல அவை. இவற்றில் ஒரு பழங்கால பாணனின் பார்வையும் இருக்கிறது. இந்த நிலத்தை அவன் நேரில் பார்க்கவில்லை. கற்பனையிலே பார்க்கிறான். இந்த நிலங்கள் இன்றைக்கு இல்லை. ஆனால் நம் கவிதையிலே இருக்கின்றன. அவன் காலூன்றி நின்றிருக்கும் மண் என்பது நம் மொழிதான்” என்றார்.

அவர் பாணன் என்று சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. நான் விக்ரமாதித்யனின் வாழ்க்கையைப்பற்றி அவரிடம் சொன்னேன். அவர் “ஆமாம், பெரிய கள்பெறினே…” என்று சொல்லி சிரித்தார்.

அவர் இன்றைக்கு இல்லை. நானும் என் மண்ணிலே இல்லை. ஆனால் இந்த விஷ்ணுபுரவிருது அளிக்கும்போது என் நினைவுகள் அந்தக் கவிதைகளை தொட்டுச்செல்கின்றன. விக்ரமாதித்யன் அவர்களுக்கு வணக்கம்

பாலகுரு சண்முகம்

 

https://www.jeyamohan.in/152739/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.