Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாட்சிகளைப் பாதுகாத்தால்தான் உண்மைகள் அம்பலத்துக்கு வரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாட்சிகளைப் பாதுகாத்தால்தான் உண்மைகள் அம்பலத்துக்கு வரும்

படுகொலைகள் உட்பட குறிப்பிட்ட சில மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதும், அந்த ஆணைக் குழு வின் விசாரணைகளைக் கண்காணிக்க சர்வதேசப் பிரமுகர் களைக் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட் டிருப்பதும் நமக்குத் தெரிந்த விடயங்கள்.

இந்த விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து பகிரங்கப்படுத்தப்பட்ட இரு அறிக்கைகள் மூலம் சர்வதேசக் கண்காணிப்புக் குழு குறை கூறியிருப்பது, பரவ லாக இடம்பெறும் மனித உரிமை மீறல் விடயங்களைச் சமா ளிப்பதற்கு இலங்கை அரசுத் தலைமை எடுத்துவரும் நட வடிக்கைகளுக்கு விழுந்த அடி என்றே கொள்ளலாம்.

சர்வதேசக் கண்காணிப்புக் குழு சுட்டிக்காட்டிய பல்வேறு குறைபாடுகளில் முக்கியமானது, மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான சாட்சிகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடைமுறைகளை இலங்கை அரசுத் தரப்பு எடுக்கவேயில்லை என்ற விவகாரம்தான்.

உண்மையில் மிகுந்த சிரத்தைக்கும், கவனிப்புக்கும் உள்ளாக்கப்படவேண்டிய முக்கியமான விடயம் இது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அதிகார வர்க்கம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அதற்காகத் தண்டிக்கப்பட வேண்டுமானால்

இனிமேல் இத்தகைய மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்கப்பட தடுக்கப்பட வேண்டுமானால்

ஏற்கனவே இடம்பெற்ற தவறுகள், குற்றங்கள் தொடர்பான சாட்சியங்கள், சாட்சிகள் பாதுகாக்கப்படுவது அவசியமாகும்.

உண்மையை சட்டத்தின் முன் தாங்கள் அம்பலப்படுத்து கின்ற மைக்காகத் தண்டிக்கப்படவோ, உயிர்க்கொலைக்கு உள்ளாக்கப்படவோ மாட்டோம் என்று உறுதி சாட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

அத்தகைய உறுதிப்பாட்டையும், நம்பிக்கையையும் சாட்சிகளுக்கு அளிப்பதாயின் சாட்சிகளைப் பாதுகாப்பதற் கான முதன்மையான திட்டம் ஒன்று இன்றியமையாததாகும்.

அதுதான் இலங்கையில் இல்லை என்பது மனவேத னைக் குரியது.

மேற்படி படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக் குழுவே நீண்ட இவ்வளவு காலமாகியும் பல மாதங் கள் கடந்தும் கூட சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான உரிய தோதான கட்டமைப்பு ஒன்றை உருவாக்காதிருக்கின்ற மையை குறித்துக் குறை கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்பு இல்லாத நிலையில் மேற்படி மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற் றிய விசார ணைகளை ஆரம்பிப்பது, சாட்சிகளை ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமல்ல, மேற்படி மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற்றிய உண்மைகள் எதிர்காலத்தில் கூட அம் பலமாவதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்து, அது தொடர்பான மர்மங்களை நிரந்தரமாகக் குழிதோண்டிப் புதைக்கவே வழிசெய்வதாக அமையும் என்பதும் இப்போதைய நிலையில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.

ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ அதிகாரத்தில் இருந்த சம யம் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் விஜே குமாரணதுங்க சுட்டுக் கொல்லப்பட்டார். பிரேமதாஸாவின் ஆட்சிக் காலத் தில் அப் படுகொலை விவகாரம் கிணற்றில் போட்ட கல்லாக அமிழ்ந்து கிடந்தது. அதனால் சாட்சிகளும், சாட்சியங்களும் அப்படியே தப்பிப்பிழைக்கும் வாய்ப்புக்கிட்டியது. பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கொலையுண்ட விஜே குமாரண துங்கவின் மனைவி சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியான பின்னர் அக்கொலை பற்றிய விசாரணைகள் முடுக்கிவிடப் பட்டன. உண்மை அம்பலமானது. குற்றவாளிகள் அடையா ளம் காணப்பட்டனர்.

தப்பித் தவறி, முன்னைய ஆட்சியிலேயே விஜே குமார துங்க படுகொலை தொடர்பான கண்துடைப்புப் புலன் விசா ரணை நடத்தப்பட்டிருக்குமானால் சாட்சிகள், சாட்சியங்கள் அடிபட்டுப் போயி ருக்கலாம். உண்மை மூடி மறைக்கப்பட் டிருக்கலாம். குற்றம் புரிந்தோர் அடையாளம் காணப்படாம லேயே தப்பியிருப்பர்.

ஆகவே, இத்தகைய மோசமான சம்பவங்கள் தொடர் பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவை தொடர்பான சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவதும் உறுதிப்படுத்துவதும் அவசியமானது; கட்டாயம் செய்யவேண்டி யது.

இன்று ஆள்கடத்தல்கள், காணாமற் போகச் செய்தல் கள், படுகொலைகள் என மோசமான மனித உரிமை மீறல் கள் இடம்பெறும் அவலப் பூமியாகத் திகழ்வது யாழ். குடா நாடு. இந்தக் கொடூரங்களை அங்கு கட்டுப்படுத்துவதற் குக் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

அப்படி அவற்றைக் கட்டுப்படுத்துவதாயின் அத்தகைய மோசமான சம்பவங்களில் ஈடுபடும் தரப்புகள் முதலில் அடையாளம் காணப்பட்டு அம்பலப்படுத்தப்படவேண்டும். அதற்கு ஒரு வாய்ப்பு இப்போது கிட்டியிருக்கின்றது.

கடத்தப்பட்டு இருள் சிறையில் சுமார் இரண்டு மாதங்கள் அடைக்கப்பட்டிருந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் மூவர் இப்போது தப்பிப் பிழைத்திருக்கின்றார்கள்.

உரிய பாதுகாப்பும், எதிர்கால உறுதிப்பாடும், உயர்கல்வி மற்றும் வாழ்வுக்கான தஞ்சமும், வசதி வாய்ப்புகளும் அவர் களுக்கு அளிக்கப்படும்போது

தமது நிம்மதியான எதிர்கால வாழ்வும் பாதுகாப்பும் நிச் சயம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும்போது

அந்த மூன்று மாணவர்கள் மூலம் குடாநாட்டின் கொடூ ரங்களுக்குக் காரணமான பின்னணியான அரூபக் கரங் களை அடையாளம் காணும் சந்தர்ப்பம் கிட்டும்.

அதன் மூலம் குற்றத்தரப்புகளை அடையாளம் கண்டு, அவற்றின் முகத்திரையைக் கிழிக்க முடியும்.

மேற்படி மனித உரிமை மீறல்கள் குறித்தும் அவற்றைக் கண்டிக்கும் விதத்திலும் சகட்டு மேனிக்கு அவ்வப்போது அறிக்கை வெளியிட்டுவிட்டு, அதற்கு மேல் பயனுள்ள எதை யும் மேற்கொள்ளாமல் அடங்கிவிடும் சர்வதேச சமூகத்துக்கு இவ்விடயம் சமர்ப்பணம்.

உலக சமுதாயம் தலையிட்டு, உண்மையை அம்பலப் படுத்துவதற்கு வாய்ப்பான விடயம் இது. சர்வதேசமே! உனது பிரதிபலிப்பு என்ன?

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.