Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேச்சுக்கு அழைக்க இப்போது ஆர்வமில்லை அரசின் அமைச்சர் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுக்கு அழைக்க இப்போது ஆர்வமில்லை அரசின் அமைச்சர் அறிவிப்பு

""தொப்பிகல பகுதியைக் கைப்பற்றி, கிழக்கு முழுவதையும் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, வரலாற்றில் என்றுமில்லாத வகை யில் வெற்றியின் உச்சியில் நிற்கும் அரசு, புலிகளு டன் உடனடியாகப் பேச்சு நடத்தும் நிலையில் இல்லை.

இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா நேற்றுத் தெரிவித்தார்.

""புலிகளுடன் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதிலோ அல்லது புலிகளைப் பேச்சு மேசைக்கு அழைப்ப திலோ அரசுக்குத் தற்போதைக்கு ஆர்வம் இல்லை.

""கைப்பற்றப்பட்ட கிழக்கை அபிவி ருத்தி செய்து, அப்பகுதி மக்கள் நிம்மதி யாக வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதில்தான் அரசு தீவிரமாகவும் சிரத்தையாகவுமுள்ளது. கிழக்கு கைப்பற் றப்பட்டதன் மூலம் அங்கு இவ்வருட இறுதி யில் மாகாணசபைத் தேர்தலை நடத்து வதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளது.'' என் றும் அவர் கூறினார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங் களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியவை யாவது:

அரசு தற்போது கிழக்கு முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. முப்படையினரின் தீவிரமான அர்ப்பணிப்புள்ள நடவடிக்கையே கிழக்கு அரசின் வசமாகக் காரணம்.

யுத்த வரலாற்றில் என்றுமே இப்படியொரு தனி மாகாணம் புலிகள் வசமிருந்து மீட்கப்பட்டதில்லை. வரலாற்றில் எந்த அரசும் பெற்றிராத வெற்றியை எமது அரசு இப்போது பெற்றுள்ளது.

மாவிலாறு தொடங்கி தொப்பிகலவரை ஒருவருட காலத்திற்குள் கிழக்கு மாகாணம் முற்றாக மீட்கப்பட்டுள்ளது. தற்போது கிழக்கில் இருந்த புலிகளின் அனைத்து முகாம்களும் அரச படைகளால் கைப்பற்றப்பட்டுப் புலி கள் அங்கிருந்து முற்றாக விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கின் வெற்றி உண்மையானது

இந்த வெற்றியைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை முற்றாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கான பல அபிவிருத்தித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக கிழக்கில் உள்ள மூவின மக்களும் நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.

கிழக்கின் வெற்றியானது உண்மையானது. இதில் பொய்யோ அரசியல் பின்னணியோ கிடையாது.

தொப்பிகல கைப்பற்றப்பட்டமையை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வெறும் காட்டைத்தான் அரசு கைப்பறியதாக அவர் கூறியிருக்கின்றார்.

இவ்வாறான கூற்றுக்கள் மூலம் படையினரின் மனவலிமையைக் குறைப்பதற்கும் உண்மையான வெற்றியைத் திசைதிருப்புவதற்குமே ரணில் முயற்சி செய்கிறார். இவரது கூற்றுக்கள் மூலம் எமது வெற்றிக்கு எந்தப் பங்கமும் வந்துவிடாது.

அரசு இப்போது மிகவும் பலமான நிலையில் உள்ளது. இந்த நிலையில் புலிகளுடன் உடனடிப் பேச்சு நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளிலும் அரசு ஈடுபடவில்லை. பேச்சுக்கு வருமாறு அரசு புலிகளுக்கு அழைப்பு எதனையும் தற்சமயம் தனியாக விடவுமில்லை.

அரசு பலமான நிலையில் இருந்துதான் புலிகளுடன் பேச்சைத் தொடங்கும் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை. என்றார் அவர்.

- உதயன்

வரலாற்றில் என்றுமில்லாத வெற்றியின் உச்சியில் நிக்கும் அரசு வரலாற்றின் என்றுமில்லாத பாதாலத்துக்கு போகாட்டி வாழ்தலாம் ஆனால் எமக்குத்தான் தெரியுமே அது விரைவில் நடக்கும் என எப்படி வாழ்தலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.