Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பழம் ஓலையொன்று உதிர்கையில் - ஜெரா தம்பி

Featured Replies

பழம் ஓலையொன்று உதிர்கையில்
 
கொரோனா நம்மிடமிருந்து முதியவர்களைப் பறித்துக்கொண்டிருக்கிறது. தமிழ் சமூகம், உலக சமூகங்கள் போலல்லாதது. முதியவர்களைப் பாவித்துவிட்டுத்தூக்கியெறி என்று நடத்தாமல், இயலுமானவரைக்கும் நம் குடும்பங்களை வழிநடத்துபவர்களாக, ஆலோசனைத் தருபவர்களாக, தம் அனுபவங்களை சந்ததிகளுக்குக் கற்பிப்பவர்களாக, கதைசொல்லிகளாகப் பயன்படுத்தி வந்திருக்கிறது. எனவே முதுமையைப் போற்றுதல் தமிழ் சமூகத்தின் மிக உன்னதமான அறமாகும். சிற்சில விதிவிலக்குகளும் உண்டு. அத்தகைய உளவியலை குடும்ப நடத்ததைசார் ஒழுக்கம் தீர்மானிக்கிறது.
 
ஆக, தமிழ் சமூகம் தன்னிடமிருக்கும் முதியவர்களை இழத்தலானது, வாழ்வைத் தாங்கிப் பிடித்திருக்கும் பல வேர்களை அறுத்துவிடும். ஏற்கனவே சீரழிவுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் புதிய தலைமுறையினரை வழிநடத்தவொரு தீர்க்கமிகு தரப்பற்றவர்களாக்கிவிடும். கொரோனா மரணங்களின் விளைவு அடங்காப்பிடாறிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும்.
 
கொரோனா மரணங்கள் திடீரென முடிந்துவிடுகின்றன. தமிழ் சமூகமானது பண்டைய வாழ்வொழுக்கங்களின்படி ஒருவரின் மரணத்தின்போது கடைபிடிக்கும் எவ்வித சடங்குகளையும் இங்கு காணமுடிவதில்லை. கூடியழுதல், ஒப்பாரி வைத்து அழுதல், தோள் சாய்ந்து அழுது ஆறுதல்பெறுதல், மூன்றாம் நாள், எட்டாம் நாளென இழப்பிலிருந்து ஆற்றுப்படுத்தல் சடங்குகளை தமிழ் சமூகம் கொரோனாவின் பின் இழந்தேவிட்டது. இவை தம் குடும்பத்திலிருந்து இழந்தவர் தொடர்பிலான குறையாக மனங்களில் புழுங்கிக்கொண்டிருக்கின்றது. இத்தகைய உளப்புழுக்கம் கொரோனா பாதிப்பிற்குப் பின்பான வாழ்வை மேலும் மேலும் நோகடிக்கும். இடப்பெயர்வுகள், சுனாமி பேரழிவு, இறுதிப் போரழிவு என பெரும் மானுட அழிவுகளை எவ்வித உள ஆற்றுப்படுத்தலுமின்றி கடந்து வந்த தமிழ் சமூகத்திற்கு இதுவும் ஒரு பேரிடி. இந்த அவலம் மேலும் மேலும் பிறழ்வுநிலையுடையோரையே உற்பத்திசெய்யப்போகிறது.
 
அதன் விளைவுகளை இப்போதே உணரத் தொடங்கிவிட்டோம். எல்லோரிடமும் மரண பயம் தொற்றியிருக்கிறது. வாழ்வின் மீதான நம்பிக்கை அறுந்திருப்பதன் வெளிப்பாடே இந்நிலை. அதிகாரிகள் தொடக்கம், சாதாரணர்கள் வரை பல்வேறு விதமான அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். பொருளாதார நெருக்கடியும் பெரும் சூறையாய் தாக்கத்தொடங்கியிருக்கின்ற நிலையில் இந்த அழுத்தம் பெரும்புகையாய் படர்ந்துவருகின்றது.
இந்தப் புகையே ஏழு உலகையும் தழுவப்போகிறது. புகையும், வெம்மையும், கருகலும், புழுக்கமும் நிறைந்த புதிய பயணத்தையே சீனா தலைமையிலான உலக ஒழுங்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. எல்லா வளங்களும் சீனாவிற்கே என்ற நோக்கில் படர்ந்து வரும் இந்தப் பாதையை ஏதாவதொரு அமானுஸ்யம் தோன்றி திசைமாற்றாவிட்டால் சீனர்கள் மட்டுமே பூமியின் குழந்தைகளாக வாழும் வரம்பெற்றவர்களாவிடுவர்.
 

Jera Thampi | Facebook

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலநேரத்திற்குள் இந்த இந்த வேலை செய்து முடிக்க வேண்டும் எனும் நிர்பந்தத்துக்குள் மனித இனம் தள்ளப்பட்டு விட்டது.....அதனால் மன அழுத்தங்கள் எல்லோருக்கும் அதிகமாகியுள்ளது.....இறந்து போவது சொந்த உறவுகளாக இருந்தாலும் அதற்குக் கூட நேரமொதுக்க முடியாத நிலைதான் இப்ப உள்ள நிலைமை.....!  😢

பகிர்வுக்கு நன்றி நிழலி.....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.