Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயம், ரமேஷ் உட்பட 800 விடுதலைப்புலிகள் எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயம், ரமேஷ் உட்பட 800 விடுதலைப்புலிகள் எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர்

வீரகேசரி நாளேடு

தொப்பிகலையில் பாதுகாப்புப் படைகள் பெறவிருந்த பாரிய இராணுவ வெற்றி அரசியல் உயர்மட்ட உத்தரவினால் தடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தொப்பிகலையை சுற்றிவளைத்திருந்த போது அங்கு சிக்கியிருந்த புலிகளின் தளபதிகளான ஜெயம் மற்றும் ரமேஷ் உட்பட 800 புலி உறுப்பினர்கள் அதி சக்திவாய்ந்த ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர்.

இதற்கு இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் பன்னிப்பிட்டிய ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

தொப்பிகலையில் சிக்கியிருந்த 800 புலி உறுப்பினர்களையும் விமானத் தாக்குதல் மூலம் அழிக்கப்போவதாக அரசாங்கம் கூறியது. இறுதி நேரத்தில் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்று கேட்கின்றோம். இந்திய புலனாய்வு தகவல்களின் படி புலி உறுப்பினர்கள் 800 பேரும் தப்பிச் செல்வதற்கு அரசியல் உயர் மட்டத்தின் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மஹிந்த புலி உடன்படிக்கையின் ஒரு கட்டமாக இவ்வாறு புலி உறுப்பினர்கள் தப்பிச்செல்ல அனுமதிக்கப்பட்டார்களா? என்றும் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று மாலை இடம் பெற்ற அவசர செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:

தொப்பிகலையை சுற்றிவளைத்து விட்டோம் மற்றும் அங்கு சிக்கிக் கொண்டிருக்கும் ஜெயம், மற்றும் ரமேஷ் உட்பட 800புலி உறுப்பினர்களை விரைவில் அழித்து விடுவோம் என்று கடந்த ஒரு மாதகாலமாக அரசாங்கம் கூறிக்கொண்டிருந்தது. ஆனால் இறுதியில் தொப்பிகலையில் இராணுவத்தினர் பலத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் ஜெயம் மற்றும் ரமேஷ் உட்பட 800 புலி உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர்கள் அழிக்கப்பட்டார்களா? அல்லது கைது செய்யப்பட்டார்களா? எமது கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.

எமக்கு கிடைத்த இராணுவ உள் தகவல்களின் படி மேற்படி 800 புலி உறுப்பினர்களும் பாதுகாப்புடன் பல்குழல் பீரங்கி மற்றும் ஆயுதங்களுடன் வெலிக்கந்தை, சேருநுவர, மூதூர், மணிராசகுளம் ஊடாக முல்லைத்தீவுக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு இறுதி நேரத்தில் விடுக்கப்பட்ட அரசியல் உயர் மட்ட உத்தரவே காரணம் என்று தெரியவருகிறது.

இந்நிலையில் இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் பன்னிப்பிட்டிய ஆகியோரிடம் யார் இந்த உத்தரவை விடுத்தது என்று நாங்கள் கேட்கின்றோம். எங்களுக்கு உடனடியாக பதில் தேவைப்படுகின்றது. இது தொடர்பாக உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது. இராணுவ வெற்றி அரசியல் தலையீட்டால் காட்டிக்கொடுக்கப்படுவதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது.

யுத்தம் செய்வதற்கு தேவையான நிதியை பாராளுமன்ற அனுமதியுடனேயே பெற்றுக்கொள்ள வேண்டும். நிதியை செலவழிப்பதற்கு ஜனாதிபதிக்கு ஏகபோக உரிமை இல்லை. அவருக்கும் நிதி தேவையென்றால் பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்படவேண்டும். தொப்பிகலையை தக்க வைத்துக் கொள்வதற்கு 20 ஆயிரம் படையினர்தேவைப்படுகின்றனர். அவர்களின் ஒருவருட செலவு 40 ஆயிரம் இலட்சம் ரூபாவாகும். எனவே நாங்கள் முன்வைத்துள்ள சந்தேகங்களுக்கு உடனடியாக பதிலளிக்குமாறு அரசாங்கத்தைக் கோருகிறோம். மஹிந்த புலி உடன்படிக்கையை ஒரு கட்டமாக மேற்படி 800 புலிகளும் தப்பிச்செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பார்கள

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயம், ரமேஷ் உட்பட 800 விடுதலைப்புலிகள் எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர்

முல்லைத்தீவு போவதென்றால் நடந்துதான் போயிருப்பார்கள்.. :lol:

முல்லைத்தீவு போவதென்றால் நடந்துதான் போயிருப்பார்கள்.. :lol:
'

விமானத்தில் அவர்கள் அனைவரும் வன்னிக்கு பயணிப்பதற்கான சாத்தீயம் மிகவும் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவில இருந்து 10,000 துருப்புக்கள் எப்படி தப்பி ஓடினார்கள் சா ஓடவீட்டார்கள் என்பதை மறந்து பேசுதுங்க இதுகள். B)

விட்டால் கட்டுநாயக்காவையும், கொழும்பையும் விடுதலைப்புலிகளின் விமானங்கள் தாக்கிவிட்டு பாதுகாப்பாக வன்னி செல்வதற்கு அரசியல் மேல் தலையீடுதான் காரணம் எண்டு சொல்லுவாங்க போலிருக்கே.. :angry: :angry:

புல்மோட்டைக் கடற்பரப்பில் அண்மையில் நடைபெற்ற கடற்சமர் இந்த கேள்விக்கு ஒரளவு விடை சொல்லும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இதற்கான பதிலை அந்த பிள்ளையிடம் தான் கேட்க வேண்டும். தமிழில் ஒரு பழமொழியுள்ளது தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்று. பாவம் கிழக்கில் இருக்கும் சிங்கள கிராமத்து இராணுவ இளைஞர்கள்

அப்போ ஆயுதங்கள் எல்லாம் எங்கே :lol:

போனார்களா எங்கு இருகிறாற்கள் என வரும் காலம் விரைவாக பதில் சொல்லும்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயம், ராம் போன்ற தளபதிகள் இன்னமும் குடும்பிமலைப் பிரதேசத்திலும் யால காட்டுப்பகுதியிலும் தற்போதும் நிற்பதாக ஓர் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.